கொடுமுடி ஊராட்சி ஒன்றியம்

கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]கொடுமுடி வட்டத்தில் அமைந்த கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் பத்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொடுமுடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 31,317 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 7,038 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அஞ்சூர்
  2. அய்யம்பாளையம்
  3. ஆவுடையார்பாறை
  4. எழுநூத்திமங்கலம்
  5. இச்சிபாளையம்
  6. கொளத்துபாளையம்
  7. கொந்தளம்
  8. கொங்குடையாம்பாளையம்
  9. என். கொளாநல்லி
  10. வள்ளிபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்