தயானந்தம்
தயானந்தம் (ஓவியர் தயா, பிறப்பு: மார்ச் 20, 1968, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.
தயானந்தம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
தயானந்தம் |
---|---|
பிறந்ததிகதி | மார்ச் 20, 1968 |
பிறந்தஇடம் | நல்லூர், யாழ்ப்பாணம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
கலையுலகில்
இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.[1]
ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள்
இவரது நூல்கள்
- காலமும் கோலமும் (கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு)[2]
வெளி இணைப்புகள்
- இவரது ஓவியங்கள் சில - அப்பால் தமிழில்
- நங்கூரம் நாளிதழ் 4ம் பக்கத்தில் ஓவியர் தயாவின் பேட்டி - நூலகத்தில்