துக்கம்

துயரம் அல்லது துக்கம் (sorrow or sadness) என்பது ஒரு வகை வலியினால் வரும் சோகமான உணர்ச்சியாகும். இது ஒரு தோல்வி, நட்டம், இயலாமை, சோகம், என்பன ஏற்படும் போது வரும் உணர்வு. ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துன்பம், துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழப்பால் ஏற்படும் துன்பம், சோகம் எனப்படும்.

இயேசுவைச் சிலுவையில் அறையுங்கால் மேரி மாதா அழுவதனைக் காட்டும் 1672 சிற்பம் (Entombment of Christ).

மகனை இழந்தால் அது புத்திர ’சோகம்’. கணவனை இழந்தால் அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால் அது அவர்களுக்குத் ’துயரம்’.

மனித நடவடிக்கைகள்

துக்கம் என்பது மனிதரின் பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த 6 அடிப்படையான உணர்வுகளில ஒன்று ஆகும்.[1] மற்றவை இன்பம், கோபம், ஆச்சரியம், பயம், வெறுப்பு ஆகும்.

துக்கம் வருங்கால் மனிதர்கள் பின்தொகுத்தவற்றில் ஒன்றோ பலவோ செய்யக்கூடும்:

  1. அமைதியாக யாரிடமும் பேசாதிருப்பர்
  2. தனிமையை நாடுவர்
  3. சோம்பலாக இளைப்பாற முடிவெடுப்பர்
  4. அழவும் செய்வர்[2]

வேறு பெயர்கள்

  1. துக்கம்
  2. வருத்தம்
  3. சோகம்

உசாத்துணை

  1. Daniel Goleman, Emotional Intelligence (London 1996) p. 271
  2. Jellesma F.C., & Vingerhoets A.J.J.M. (2012). Sex Roles (Vol. 67, Iss. 7, pp. 412-421). Heidelberg, Germany: Springer
"https://wiki1.tamilar.wiki/index.php?title=துக்கம்&oldid=13793" இருந்து மீள்விக்கப்பட்டது