விறகு விற்ற படலம்
திருவிளையாடற் புராணத்தில் 41 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 2031 -2100) விறகு விற்ற படலம் உள்ளது[1]. ஒரு புலவர் எல்லா நாட்டிலுள்ள புலவர்களையும் பாட்டில் வென்று பாண்டிய நாட்டிற்கு வருகிறார். "தன்னைப் பாட்டில் வென்றால் தான் பாண்டிய நாட்டிற்கு அடிமை என்றும், இல்லையேல் தன் பாட்டிற்குப் பாண்டிய நாடு அடிமை" என்று அந்தப் புலவர் பாண்டிய மன்னனிடம் கூறினார். அதனால் பாண்டிய நாட்டைக் காக்கும் பொருட்டு சிவபெருமானே விறகு விற்கும் வியாபாரியாக வந்து புலவரின் அகந்தையை அடக்குகிறார்.
மேற்கோள்கள்
- ↑ "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 41. விறகு விற்ற படலம் (2031 -2100)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016.
{{cite web}}
: CS1 maint: date format (link)