1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்

வார்ப்புரு:Infobox games

1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1965; ஆங்கிலம்: 1965 Southeast Asian Peninsular Games) என்பது 3-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.[1]

சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் மூன்றாவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.

இந்த மூன்றாவது விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வு, மலேசியா கோலாலம்பூர் மாநகரில் 1965 டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 1965 டிசம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்தப் போட்டொயில் 14 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றன.

இந்த மூன்றாவது விளையாட்டு போட்டி, 1965-ஆம் ஆன்டில், லாவோஸ் நாட்டினால் நடத்தப்பட இருந்தது. நிதிச் சிக்கல்களினால் நடத்த இயலவில்லை. அதன் பின்னர் அந்தப் பொறுப்பை மலேசியா ஏற்றுக் கொண்டது.

கோலாலம்பூர், மெர்டேகா அரங்கத்தில் (Stadium Merdeka); மலேசியாவின் மாமன்னர் இஸ்மாயில் நசிருதீன் (Ismail Nasiruddin), இந்த விளையாட்டு நிகழ்வை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் தாய்லாந்து; அதைத் தொடர்ந்து மலேசியா; சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன.[1]

விளையாட்டுகள்

பங்கேற்பு நாடுகள்

விளையாட்டு

பதக்க அட்டவணை

      போட்டி நடத்திய நாடு (மலேசியா)

1 வார்ப்புரு:நாட்டுத் தகவல் THA 38 33 35 106
2   மலேசியா 33 36 29 98
3 வார்ப்புரு:நாட்டுத் தகவல் SIN 26 23 27 76
4 வார்ப்புரு:நாட்டுத் தகவல் CAM 15 19 17 51
5   மியான்மர் 18 14 16 48
6 வார்ப்புரு:நாட்டுத் தகவல் VIE 5 7 7 19
7 வார்ப்புரு:நாட்டுத் தகவல் LAO 0 0 2 2

மேற்கோள்

  1. 1.0 1.1 "OCA » Kuala Lumpur 1965 - The 3rd Southeast Asian Peninsular Games were held in Kuala Lumpur, Malaysia from 14 September - 21 September 1965". ocasia.org. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.

வெளி இணைப்புகள்