அகிச்சத்ரா (Ahichchhatra) என்பது முற்காலத்தில் வட பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்தது. கி.பி. 10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறை இயக்குநர் கே. என். தீட்சித் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கிமு. 3-வது நுற்றாண்டிலிருந்து கிபி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளமாக இருந்தது தெரியவந்தது. இங்கு கிமு முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷானர் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுடுமண் தெய்வ உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகிய முக்கியமான பொருட்கள் கண்டறியப்பட்டன.[2]

அகிச்சத்ரா
அகிச்சத்திராவின் ஒரு பெரிய தொல்லியல் மேடு
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
இருப்பிடம்பரேலி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆயத்தொலைகள்28°22′16″N 79°08′10″E / 28.371°N 79.136°E / 28.371; 79.136
வகைகோயில்கள்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு முதல் நூற்றாண்டு
கலாச்சாரம்காவி நிற மட்பாண்டப் பண்பாடு, கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு, சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு, குப்தப் பேரரசு
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வாளர்கே. என். தீட்சித், மோர்டிமர் வீலர்
மேலாண்மைஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
குப்தர்கள் காலத்திய கங்கையம்மனின் சுடுமண் சிற்பம், காலம் கிபி 5-6-ஆம் நூற்றாண்டு[1]

அகிச்சத்ராவின் முத்திரைகள் & சிற்பங்கள்

மேற்கோள்கள்

  1. Harle, James C. (January 1994). The Art and Architecture of the Indian Subcontinent (in ஆங்கிலம்). Yale University Press. p. 117. ISBN 978-0-300-06217-5.
  2. "அகிச்சத்ரா". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 21. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://tamilar.wiki/w/index.php?title=அகிச்சத்ரா&oldid=236451" இலிருந்து மீள்விக்கப்பட்டது