இரோசி அமானோ (Hiroshi Amano, பிறப்பு: செப்டம்பர் 11, 1960, ஃகமாமாட்சு நகரம்[1]) சப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். இவர் 2014 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, சுச்சி நாக்காமுரா ஆகியோருடன் வென்றுள்ளார். இந்த நோபல் பரிசானது திறன்மை மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி என்னும் குறைக்கடத்திக் கருவியைக் கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றல் சேமிப்பைத் தரும் வெண்ணிற ஒளிதரும் ஒளிவாய்களை அமைக்க முடியும்.[2]

படிமம்:Hiroshi Amano 20141211.jpg
இரோசி அமானோ

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "University Webpage". Nagoya University. Retrieved 7 October 2014.
  2. "The 2014 Nobel Prize in Physics – Press Release". Nobelprize.org. Nobel Media AB 2014. Retrieved 7 October 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=இரோசி_அமானோ&oldid=283296" இலிருந்து மீள்விக்கப்பட்டது