இஸ்க்ரா (இயற்பெயர்: சதீஸ்குமார் செ., பிறப்பு: 14 மார்ச் 2000) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC-NET JRF) நிதிநல்கையுடன் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இஸ்க்ரா
கல்வி பி.லிட். (தமிழ் இலக்கியவியல்) எம்.ஏ. (தமிழ் இலக்கியம்)

வாழ்க்கையும் இலக்கியப் பயணமும்

இளங்கலைக் கல்விக்காலத்தில் விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்துகொண்டதன் விளைவாக, மொழிபெயர்ப்பு உலகிற்கு வழிகாட்டல் கிடைத்தது. அதன் பின்னர், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், வரலாற்று கட்டுரைகள் போன்ற பல துறைகளில் எழுத்துப் பணி மேற்கொண்டு வருகிறார். இஸ்க்ரா தற்போது பேராசிரியர் மோ. செந்தில் குமார் வழிநடத்தும் பெயல் ஆய்விதழில் துணை ஆசிரியராகச் செயற்பட்டு வருகிறார்.

இஸ்க்ரா மொழிபெயர்த்த மற்றும் தொகுத்த நூல்கள் தனித்துவமான பார்வையோடும், மொழி நயமோடும் தமிழ்நூல்களுக்குப் புதிய பண்பாட்டு அணுகுமுறையை வழங்குகின்றன.

நூல்கள்

ஆண்டு நூல் பதிப்பகம்
2020 14C கவின் பப்ளிகேஷன்ஸ்
2021 வரலாறு வளர்த்த வாய்கள் நோஷன் ப்ரஸ்
2022 காலத்தின் குரல் கிழக்கு பதிப்பகம்
2023 உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் கிழக்கு பதிப்பகம்
2024 நான் கண்ட இந்தியா (Halide Edib இன் Inside India தமிழ் மொழிபெயர்ப்பு) கிழக்கு பதிப்பகம்
2024 அக்கியானேவின் மாயக் கரங்கள் இந்து தமிழ் திசை பதிப்பகம்
2025 தமிழ் நிலத்தில் அகஸ்தியர் பரிசல் புத்தக நிலையம்

காலத்தின் குரல் நூலுக்கான பாராட்டுகள்

இஸ்க்ரா தொகுத்து மொழிபெயர்த்த காலத்தின் குரல் நூல், உலகப்புகழ்பெற்ற அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களின் சொற்பொழிவுகளை, பின்னணி அறிமுகங்களுடன் தரும் சிறப்புமிக்க முயற்சியாகும். எழுத்தாளர் பெருமாள் முருகன் இதைப் பற்றி:

“பெருந்தலைவர்கள் ஆற்றிய புகழ் பெற்ற உரைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்த நூல் ‘காலத்தின் குரல்.’ தொடராக வெளியான போது சிலவற்றை வாசித்து மகிழ்ந்தேன். உணர்ச்சியைக் கடத்தும் தெளிவான மொழிநடை. விவரிப்பைத் துல்லியமாகப் பற்றும் சொற்கள். வாசிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல், இழுத்துச் செல்லும் இனிமை கொண்ட இவரது மொழிபெயர்ப்பை வாசிப்பது நல்லின்ப அனுபவம்.”

என்றும் கூறி பாராட்டுகிறார்.

தமிழ் நிலத்தில் அகஸ்தியர்

சிவராஜபிள்ளையின் ஆங்கிலத்தில் வெளியான ஆய்வுநூல் தமிழாக்கம் "தமிழ் நிலத்தில் அகஸ்தியர்" எனும் பெயரில் 2025ஆம் ஆண்டு வெளியானது. இந்நூலுக்கான முக்கியமான பாராட்டு:

"அகஸ்தியர் என்ற கட்டுக்கதை தோன்றியவிதம், அது ஊதி ஊதிப்பெருக்கப்பட்டு, தமிழ் மொழியின் முதல் இலக்கணத்தை எழுதியவராக அவரை முன்னிறுத்துவதன் நோக்கம் ஒன்றுதான்—தோற்றத் தொன்மையும் தொடரும் இளமையும் எனும் இருசிறப்புகளோடு இன்றும் செழிக்கும் செம்மொழியான தமிழிற்கே உரிய தனித்துவமான பெருமிதத்தின் மீது “முத்திரை” குத்தித் தனதாக்கி உரிமை கொண்டாடுவதுதான். தமிழ் மக்களின் சமூக உளவியலின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த முயற்சி என்பதைத் தோலுரித்துக்காட்டும் பெரும்பணியைச் சிவராஜபிள்ளை செய்திருக்கிறார். இத்தகைய சூழலில் இவரது ஆங்கில நூல் தமிழில் வெளிவருவது நிகழ்காலத்தின் தேவையாகும். இந்தப்பணியை மிக அருமையாகச் செய்திருக்கிறார் ஆய்வாளர் இஸ்க்ரா." — ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு), தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பெருமாள் முருகனின் பார்வை

இளங்கலை, முதுகலைக் காலத்தில் தொடங்கிய இஸ்க்ராவின் எழுத்து முயற்சி, தொடர்ச்சியாக ஊடகங்கள் மற்றும் மூத்த எழுத்தாளர்களால் கவனிக்கப்படுகிறது. பெருமாள் முருகன், இஸ்க்ராவைப் பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியதில்:

“இஸ்க்ரா போன்ற இளம் எழுத்தாளர்கள் சிலர், சிறப்பான இலக்கிய உன்னதங்களுடன் வளர்ந்து வருகின்றனர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அபாரம் திறமை வாய்ந்தவர். உலக இலக்கியங்களை தமிழுக்குத் தரும் முயற்சி மூலம் அவருடைய பார்வையும் ஆழமும் வெளிப்படுகிறது.”

மேற்கோள்கள்

  1. "உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்" நூல் அறிமுகம் – தினமணி: https://www.dinamani.com/specials/nool-aragam/2024/Jul/22/world-famous-essays
  2. "உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்" நூல் அறிமுகம் – தினமலர்: https://books.dinamalar.com/details.php?id=30615
  3. "காலத்தின் குரல்" நூல் வெளியீடு – YouTube: https://www.youtube.com/watch?v=cEvLB1qq4sw
  4. "காலத்தின் குரல்" நூல் அறிமுகம் – தினமலர்: https://l-books.dinamalar.com/details.php?id=28341
  5. "காலத்தின் குரல்" நூல் குறித்த தினமணி இதழில் கலாரசிகன் எழுதிய குறிப்பு: https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2023/Nov/26/kalarashikan-this-week---26-11-2023-4112167.html
  6. "நான் கண்ட இந்தியா" நூல் அறிமுகம் – தினமலர்: https://l-books.dinamalar.com/details.php?id=31752
  7. "நான் கண்ட இந்தியா" நூல் அறிமுகம் – தினமணி: https://www.dinamani.com/specials/nool-aragam/2025/Mar/31/india
  8. "நான் கண்ட இந்தியா" நூல் 2025 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பரிந்துரைக்கப்பட்ட நூல்களில் ஒன்று – YouTube: https://www.youtube.com/watch?v=DDSKjWsJWLc
  9. "நான் கண்ட இந்தியா" நூல் கிழக்குப் பதிப்பகத்தின் அதிகம் விற்ற நூல்கள் பட்டியலில் இடம்பெற்றது – YouTube: https://youtu.be/8-Grnbx54xs?si=0_p1BqN6fYCYygh5
  1. பெருமாள் முருகன் எழுத்தாளர் இஸ்க்ரா குறித்து எழுதிய கட்டுரை: https://perumalmurugan.in/books13/


"https://tamilar.wiki/w/index.php?title=இஸ்க்ரா&oldid=287068" இலிருந்து மீள்விக்கப்பட்டது