எர்பர்ட் மார்குசே

எர்பர்ட் மார்குசே (Herbert Marcuse 19 சூலை 1898–29 சூலை 1979) என்பவர் செருமானிய அமெரிக்கத் தத்துவ அறிஞர், அரசியல் சமூகத் திறனாய்வாளர் மற்றும் மார்க்சியக் கருத்தாளர் ஆவார். [1]

எர்பர்ட் மார்குசே
பிறப்பு19 சூலை 1898
பெர்லின்
இறப்பு29 சூலை 1979
(அகவை 81)
Starnberg
நினைவகங்கள்Dorotheenstadt
Cemetery
படித்த கல்வி நிறுவனங்கள்Humboldt-Universität
zu Berlin Albert-
Ludwigs-Universität
Freiburg
பணிமெய்யியலாளர், சமூகவியலாளர், பல்கலைக்கழகப்
பேராசிரியர், political scientist
பணியகம்Johann Wolfgang, Goethe-Universität, Frankfurt am Main
பட்டம்எர்பர்ட் மார்குசே
பிள்ளைகள்Peter Marcuse
கையொப்பம்

பெர்லினில் பிறந்த எர்பர்ட் மார்குசே பெர்லின் பல்கலைக் கழகத்தில் படித்து பிரைபர்க்கில்  ஆய்வுப் பட்டம் பெற்றார். செருமனி பிரான்சு நாடுகளில் நடந்த மாணவர்களின் போராட்ட இயக்கங்களில் கலந்துகொண்டார். ப்ராங்க்பர்ட் பள்ளியில்[2] இவர் முக்கிய மார்க்சிய சிந்தனையாளர் எனக் கருதப்படுகிறார்.

புதிய இடதுசாரிகளின் தந்தை எனப் போற்றப்படும் எர்பர்ட் மார்குசே முதலாளியத்தையும் நவீன தொழில் நுட்பத்தையும் அதிகரித்து  வரும் பொழுதுபோக்கு பண்பாடுகளையும் விமர்சனம் செய்தார்.

நூல்களும் கட்டுரைகளும் இவர் எழுதினார்.  சோவியத் மார்க்கியம், ஒன் டைமன்சன் மேன்,  ஈராசும் நாகரிகங்களும் என்னும் நூல்கள் அவற்றுள் சிலவாகும்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=எர்பர்ட்_மார்குசே&oldid=300387" இலிருந்து மீள்விக்கப்பட்டது