குணாளன்
குணாளன் (Kunala) (IAST: Kuṇāla ) (கிமு 263 - ?) பேரரசர் அசோகர் - பேரரசி பத்மாவாதிக்கும் பிறந்த, மௌரியப் பட்டத்து இளவரசன் ஆவார்.[2] அசோகரின் முதல் மகன் மகிந்தன் பௌத்த சமயத்தை இலங்கையில் பரப்பச் சென்றதால், குணாளன் மௌரியப் பேரரசின் பட்டத்து இளவரசர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், குணாளனின் கண்கள், அவனது மாற்றாந்தாய் திஷ்யரட்சாவின் சதியால் குருடாக்கப்பட்டது. எனவே குணாளனின் மகன் சம்பிரதி மௌரியப் பேரரசின் பட்டத்து இளவரசன் ஆக்கப்பட்டார்.
| குணாளன் | |
|---|---|
| மௌரியப் பேரரசின் பட்டத்து இளவரசன் | |
| பிறப்பு | கிமு 263 [1] |
| துணைவர் | காஞ்சனமாலா |
| குழந்தைகளின் பெயர்கள் | சம்பிரதி |
| அரசமரபு | மௌரியர் |
| தந்தை | பேரரசர் அசோகர் |
| தாய் | பத்மாவதி |
பேரரசர் அசோகர் ஆட்சியின் போது குணாளன், கிமு 235ல் தக்சசீலா பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார். [1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Mookerji, Radhakumud (1995). Aśoka (3. rev. ed., repr ed.). Delhi: Motilal Banarsidass Publ. p. 45,124. ISBN 9788120805828.
- ↑ Lahiri, Nayanjot (2015). Ashoka in Ancient India. Harvard University Press. p. 284. ISBN 0674057775.