தாவளம் (Thaavalam) என்பது பண்டைக் காலத்தில் பெருவழிகளில் வணிகர், வீரர் போன்றோர் தங்கிச் செல்லும் இடமாகும்.[1] இதை வணிகர்கள் தங்கி வணிகப்பணிகளில் ஈடுபட்ட இடம் என்றும் கூறுவர். தென்னிந்தியாவில் மொத்தம் 64 தாவளங்கள் இருந்ததற்கான தகவல்கள் உள்ளன.[2]

தருமபுரி அகழ்வைப்பகத்தில் உள்ள அதியமான் பெருவழியில் உள்ள நாவற்தாவளத்திற்கு செல்லும் தொலைவைக் குறிப்பிடும் பெருவழிக்கல்

பழந்தமிழகத்தில் இருந்த தாவளங்களில் நாவற்தாவளம், வேம்படித்தாவளம், மஞ்சப்புளி தாவளம், பட்டழையத் தாவளம், கடிகைத்தாவளம் ஆகிய தாவளங்களின் பெயர்கள் தெரியருகின்றன.[3] தாவளம் என்ற பெயரில் ஊர்களும் உள்ளன.[4] புகழ்பெற்ற அதியமான் பெருவழியானது நாவற்தாவளம் என்ற தாவளத்திற்கு போகும் பெருவழியாக இருந்தது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் வண்டித்தாவளம் என்ற பெயரிலான ஊர் உள்ளது. அங்கு ஒரு காலத்தில் தாவளம் இருந்ததால் அப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. agarathi.com. "தாவளம்". agarathi.com. Retrieved 2024-11-08. {{cite web}}: Text "Tamil Dictionary" ignored (help); Text "அகராதி" ignored (help)
  2. "கோயம்புத்தூரில் பழங்காலத்தில் யானை வணிகம் நடந்ததா? விவாதத்தை கிளப்பும் குமிட்டிபதி குகை ஓவியங்கள்". BBC News தமிழ். 2022-09-18. Retrieved 2025-02-24.
  3. "திருப்பத்தூர் - கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக் கல்வெட்டு கண்டெடுப்பு". Hindu Tamil Thisai. 2023-06-13. Retrieved 2025-02-24.
  4. "Thavalam Village , Krishnagiri Block , Krishnagiri District". www.onefivenine.com. Retrieved 2025-02-24.
"https://tamilar.wiki/w/index.php?title=தாவளம்&oldid=394305" இலிருந்து மீள்விக்கப்பட்டது