தேல் ஆறு (Tel River) இந்தியாவின் ஒடிசா நபரங்பூர், கலாஹண்டி, பாலங்கிர், பௌது, சோனேபூர் மாவட்டங்களில் ஓடும் ஒரு ஆறு ஆகும். தேல் ஆறு, மகாநதியின் முக்கியமான துணை ஆறாகும். இது திடிலாகர் நகரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் பாய்கிறது. மகாநதி ஆற்றின் குறிப்பிடத்தக்கத் துணை ஆற்றுடன் சுபர்ணபூரில் இணைகிறது. இரண்டு ஆறுகளும் இணையுமிடம் ஒரு வண்ணமயமான இடமாக உள்ளது. புகழ்பெற்ற கோசலேசுவர் சிவன் கோயிலான பைத்யநாத் கோயில், தேல் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது.[1][2]

ஆதாரம்

ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் சமவெளியிலும், திறந்த பகுதியிலுமிருந்து (அமராவதி வனப்பகுதிக்கு அருகே ஒடிசா-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில்) தேல் ஆறு உருவாகிறது. இது மகாநதி ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறாகும்.

மேற்கோள்கள்

20°50′N 83°54′E / 20.833°N 83.900°E / 20.833; 83.900

"https://tamilar.wiki/w/index.php?title=தேல்_ஆறு&oldid=406845" இலிருந்து மீள்விக்கப்பட்டது