தொகைச்சொல் விரி
1
| தொகைச்சொல்
|
சேந்தன் திவாகர் விரி
|
| நானிலம்
|
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
|
| சதுரங்கப்படை
|
- யானை
- தேர்
- குதிரை
- காலாள்
|
| நாற்கரணம்
|
- மனம்
- புத்தி
- ஆங்காரம்
- சித்தம்
|
| நாற்கதி
|
- உம்பர் (தேவர்)
- மக்கள்
- விலங்கு
- தேவர்
|
| நால்வகை இழிச்சொல்
|
- பொய்
- குறளை
- கடுஞ்சொல்
- பயனில் சொல்
|
6
| நால்வகை வேதம்
|
- இருக்கு
- தைத்திரியம்
- சாமவேதம்
- அதர்வண வேதம்
|
| நால்வகை அரண்
|
- மலை-அரண்
- காட்டு-அரண்
- மதில்-அரண்
- நீர்-அரண்
|
| நால்வகைக் கேள்வி
|
- அறம்
- பொருள்
- இன்பம்
- வீடு
- இந்த நான்கினும் ஒத்து ஒழுகின் ஐவகை வேள்வி
|
| நால்வகைப் புலமை
|
- கவி * ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் பாவகைகளைப் பாடுபவன் கவி எனப்படுவான்
- கமகன் * ஞாபகம் செம்பொருள் நடை ஆகிய இனப் பொருளைக் காசு இல்லாமல் உரைப்பவன் கமகன்
- வாதி * ஏதும் மேற்கோளும் காட்டி பிறர் சொல்லை மறுப்பவன் வாதி
- வாக்கி * அறம் பொருள் இன்பம் வீடு என்னும் திறங்கள்பற்றி இனிமையாகப் பிறர் விரும்புபடிக் கூறுபவன் வாக்கி எனப்படுவான்.
|
| கவிப்புலமை
|
- ஆசுகவி * கொடுத்த பொருளில் தொடுத்து, இன்பம் உண்டாகும்படி, உடனே பாடுபவன் ஆசுகவி
- மதுரகவி * பொருளில் பொலிவும், சொல்லில் செல்வமும் தொடையும், தொடையில் விகற்பமும், துதைந்து, உருவகம் முதலாம் அலங்காரம் உட்கொண்டு, ஓசை பொலிவுற்று, உணர்வோர் உள்ளங்களுக்கு அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி.
- சித்திரக்கவி
- வித்தாரக்கவி * மும்மணிக் கோவையும், பன்மணி மாலையும், மறமும், கலிவெண்காட்டும், மடலூர்ச்சியும், கிரீடையும், கூத்தும், பாசண்டத் துறையும், விருத்தக் கவிதையும், இயல் இசை நாடகத்தொடு விரித்துப் பாடுவது வித்தாரக்கவி.
|
11
| நால்வகைப் புண்ணியம்
|
- தவம்
- மேலாம் ஒழுக்கம்
- தானம்
- கல்வி
|
| நால்வகை நிலை
|
- பைசாசம் * ஒரு காலை மடக்கி, ஒரு காலால் நிற்றல்
- ஆலீடம் * வலக்காலை மண்டலித்து இடக்காலை நீட்டி அமரல்
- மண்டிலம் * இரு காலையும் மண்டலித்து, சம்மணம் போட்டு அமர்தல்
- பிரத்தியாலீடம் * வலக்கால் முந்துற இடக்காலை மண்டலித்து அமர்தல்
|
| நான்கு நிலைகளில் உயிர்த்தோற்றம்
|
- கருப்பை
- முட்டை
- நிலம்
- வியர்வை
|
மேற்கோள்