தங்க நகை மதிப்பில் அதிகபட்சம் 80% வரை தங்க நகைக் கடன் வழங்கலாம் மற்றும் நகைக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி முழுவதையும் செலுத்தி நகைக் கடனை மீட்டிய அடுத்த நாள் நகைக் கடன் பெறமுடியும் (நகைக் கடனை முழுவதும் மீட்காமல் அடமானக் காலத்தை அப்படியே நீட்டிக்க முடியாது) என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறி வந்த நிலையில், இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்க நகை அடமானக் கடன் வழங்குவதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி 9 புதிய வரைவு விதிகள் செப்டம்பர் 2024இல் வெளியிட்டுள்ளது.[1][2][3]அவைகள் பின்வருமாறு:

  • தங்க நகை மதிப்பில் அதிகபட்சமாக 75% வரை மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும்.
  • ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு கிலோகிராம் வரையிலான தங்க நகைகளை மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
  • 22 காரட் அல்லது அதற்கு மேல் தரம் உள்ள தங்க நகைகளுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்க வேண்டும். 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட்டின் மதிப்பிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும்.
  • தங்க நகைகளுக்கு மட்டுமே நகைக் கடன்கள் வழங்கப்படும். தங்கக் கட்டிகளுக்கு கடன் வழங்கப்படாது.
  • அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வழங்கும் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். நகை வாங்கியதற்கான ரசீது (Receipt) இல்லாத பட்சத்தில், நகை தன்னுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான உறுதிமொழி பத்திரத்தை வங்கியிடம் நகைக் கடன் பெறுபவர் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில் வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.
  • தங்க நகைக்கடன் வழங்கும்போது கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • ஒரு நிறுவனம் நகைக்கடன் வழங்கும்போது தங்க நகைக் கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் நகைக் கடன் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவம் போன்ற அவசரத் தேவைகள் மற்றும் தொழில் /வணிக/வேளாண்மை முதலீட்டிற்கான செலவுகள் மீது மட்டுமே தங்க நகைக் கடன் வழங்க வேண்டும்
  • தங்க நகைக்கடனை திருப்பிச் செலுத்திய உடன் 7 வேலை நாள்களில் நகையை வங்கி/வங்கி சாரா நிறுவனம் நகைக் கடன் பெற்றவரிடம் தங்க நகைகளை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லையென்றால் அடுத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் ஐந்தாயிரம் வீதம் நகைக் கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு அபராதம் செலுத்த வேண்டும்.
  • நகைக் கடனின் தவணைக் காலம் 12 மாதங்கள் மட்டுமே. 12 மாதத்திற்கு மேல் தவணை தவறிய நகைகளை பொது ஏலத்துக்குக் கொண்டு செல்லும்போது அது குறித்து வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் நகைக் கடன் வழங்கிய நிறுவனம் மீது வழக்கு தொடரலாம்.
  • வெள்ளி நகைகளுக்கும் நகைக் கடன் வழங்கலாம்.999% தரத்தில் உள்ள வெள்ளி நகைகளுக்கு மட்டும் நகைக் கடன் வழங்க வேண்டும்..

நகைக் கடன் தொடர்பாக இந்திய அரசின் பரிந்துரைகள்

தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் இந்திய அரசிடம் கோரிக்கைகள் விடுத்தனர். கோரிக்கைகளை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு இந்திய அரசு கீழ்கண்டவாறு பரிந்துரை செய்துள்ளது.அவைகள் பின்வருமாறு[4][5]

  • ரூபாய் 2 இலட்சத்திற்கும் குறைவான நகைக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கியின் விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
  • நகைக் கடன்களுக்கான புதிய விதிகள் ரிசர்வ் வங்கி 1 சனவரி 2026 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • கூட்டுறவு சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வராத காரணத்தால், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் நகைக்கடன்களுக்கு பொருந்தாது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நகைக்_கடன்&oldid=409459" இலிருந்து மீள்விக்கப்பட்டது