நசீப் சங் (நஜீப் ஜங், ஆங்கிலம்: Najeeb Jung) ஒரு முன்னாள் இந்தியக் குடியியல் பணியாளர் ஆவார். இவர் தற்போது, தில்லி தேசியத் தலைநகர் பகுதியின் 20ஆவது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றிவருகிறார்.[1] மேலும் இவர் தில்லியில் அமைந்துள்ள மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் 13ஆவது துணைவேந்தராக 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.[2]

நசீப் சங்
नजीब जंग
படிமம்:Najeeb Jung (cropped).JPG
2011ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது கே. ஆர். நாராயணன் நினைவு சொற்பொழிவு, ஜாமியா மிலியா இஸ்லாமியா, புது தில்லி
தில்லியின் 20வது துணைநிலை ஆளுநர்
பதவியில்
சூலை 9, 2013 – டிசம்பர் 22, 2016
முன்னையவர்தேஜேந்திர கண்ணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 18, 1951 (1951-01-18) (அகவை 75),
தில்லி
முன்னாள் மாணவர்தில்லி பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளியல் பள்ளி
சமயம்இசுலாம்

1973ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த இவர், மத்தியப் பிரதேச மாநில அரசிலும், இந்திய அரசிலும் பல்வேறு தகுதிகளில் பணிபுரிந்துள்ளார்.

உசாத்துணை

  1. "நஜீப் ஜங் தில்லியின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்பு". என்.டி.டி.வி. 9 ஜூலை 2013. Retrieved 18 ஆகத்து 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "முந்தைய துணைவேந்தர் பற்றிய குறிப்பு: திரு. நஜீப் ஜங்". ஜாமியா மிலியா இஸ்லாமியா. Archived from the original on 9 May 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=நசீப்_சங்&oldid=409619" இலிருந்து மீள்விக்கப்பட்டது