பங்காரு லட்சுமண்

(பங்காரு லக்ஷ்மண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பங்காரு லட்சுமண் (மார்ச் 17, 1939 – மார்ச் 1, 2014[1]) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒர் இந்திய அரசியல் பிரமுகர். இவர் இந்திய அரசின் இரயில்வே துறை அமைச்சராக 1999-2000 ஆண்டுகளில் இருந்துள்ளார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு, தெகல்கா ஊழல் வழக்கின் காரணமாக நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.[2]

பங்காரு லட்சுமண்
மத்திய இராஜாங்க அமைச்சர், இரயில்வே துறை
பதவியில்
1999–2000
தேசியத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2000–2001
முன்னையவர்குஷபாவு தாக்கரே
பின்னவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-03-17)17 மார்ச்சு 1939
ஆந்திரப் பிரதேசம்இந்தியா
இறப்பு1 March 2014(2014-03-01) (aged 74)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுசீலா
பிள்ளைகள்3 மகன்களும் ஒரு மகளும்

தனி வாழ்க்கை

இவர் ஆந்திராவின் மடிகா தலித் இனத்தவர், ஐதராபாத்தில் இளங்கலையும் சட்டமும் பயின்றவர். இவருடைய துணைவியாரான சுசீலா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் தொகுதியிலிருந்து 14-வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "BJP leader Bangaru Laxman passes away". டி.என்.ஏ. 1 மார்ச் 2014 மாலை 6 மணி. Retrieved 1 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Bangaru Laxman sent to 4 years in jail". டி.என்.ஏ. 29 ஏப்ரல் 2012. Retrieved 1 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பங்காரு_லட்சுமண்&oldid=421741" இலிருந்து மீள்விக்கப்பட்டது