பன்சாரா கான் அல்லது பன்சாரா[1] (Panzara River) என்ற ஆறு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் காந்தேஷ் பிரதேசத்தில் ஓடும் ஆறாகும். இது தபதி ஆற்றின் துணை ஆறாகும். துலே மாவட்டத்தில் உள்ள பிம்பால்னர் தால் - சக்ரி என்ற சிறிய நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பஞ்ச்ரா ஆறு உருவாகிறது. சக்ரி வட்டத்தில் பன்சாரா ஆற்றில் அக்கல்படா அணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் தலைப்பகுதியில் ஒரு சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. இது லதிபாடா அணை கட்டப்பட்டபோது உருவாகியது.

படிமம்:Panzera wp.jpg
மேகமூட்டமான பருவமழை நாளில் பன்சாரா ஆறு. இந்த புகைப்படம் துலே நகரப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது, மறுபுறம் துலேவின் புறநகர்ப் பகுதியான தியோபூர். படம் சோட்டா புல் அல்லது இடது புறத்தில் சிறிய பாலம், மற்றும் மோத்தா புல் அல்லது வலது புறத்தில் பெரிய பாலம் ஆகியவற்றைக் காட்டுகிறது.


மேற்கோள்கள்

  1. "Topographic Map 1:250,000, NF 43-10 Nandurbar, India" Series U502, U.S. Army Map Service, July 1956

  20°54′27.5″N 74°46′34.8″E / 20.907639°N 74.776333°E / 20.907639; 74.776333

"https://tamilar.wiki/w/index.php?title=பன்சாரா_ஆறு&oldid=424376" இலிருந்து மீள்விக்கப்பட்டது