பாகீரதி ஆறு (மாற்று: பகீரதி ஆறு, பாகிரதி ஆறு) இமயமலையில் தோன்றி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு. இதுவே கங்கையாற்றின் தாய் ஆறு. இந்த ஆறு தேவபிரயாகை என்னுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்ந்து கங்கையாறாக மாறுகிறது. பண்டைய இந்துத் தொன்மங்களின் படி பகீரதன் என்னும் அரசன் தவம் செய்து வானுலகில் இருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகீரதி ஆறு
River
கங்கோத்ரியில் பாயும் பாகீரதி ஆற்றின் புனிதப் படித்துறைகள்
பெயர் மூலம்: "பாகீரதி" (வடமொழியில், பகீரதனால் உருவான என்று பொருள்படும்)
நாடு  இந்தியா
மாநிலம் உத்தராகண்ட்
பகுதி கார்வால் கோட்டம்
மாவட்டம் உத்தரகாசி மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் கோமுகம், இது கங்கோத்ரியிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.
 - உயர்வு 3,892 மீ (12,769 அடி)
Source confluence அலக்நந்தா ஆறு
நீளம் 205 கிமீ (127 மைல்)
வடிநிலம் 6,921 கிமீ² (2,672 ச.மைல்)
Discharge
 - சராசரி
 - மிகக் கூடிய
[1]

இந்த ஆற்றின் 18 அணைகள் கட்டப்பட்டோ திட்டமிடப்பட்டோ உள்ளன. உலகின் பத்தாவது உயரமான டெஃறி அணை பாகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Catchment Area Treatment:, Bhagirathi River Valley Development Authority, Uttaranchal
"https://tamilar.wiki/w/index.php?title=பாகீரதி_ஆறு&oldid=429747" இலிருந்து மீள்விக்கப்பட்டது