புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Pulhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்;[1] மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் மற்றும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி[2] (93 மில்லியன் மீ3). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஒரு சுற்றுலா இடமாக விளங்குகிறது.

புழல் ஏரி
அமைவிடம்புழல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்13°09′43″N 80°10′38″E / 13.1620°N 80.1771°E / 13.1620; 80.1771
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு4,500 ஏக்கர்கள் (18 km2)
நீர்க் கனவளவு3,300 மில்லியன் கன அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்55 மீட்டர்

மேற்கோள்கள்

  1. "புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மேம்பாடு திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-05-30. Retrieved 2023-08-24.
  2. "சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை". News18 Tamil. 2021-11-07. Retrieved 2023-08-24.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேலும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=புழல்_ஏரி&oldid=445418" இலிருந்து மீள்விக்கப்பட்டது