பொய்சார் ஆறு
பொய்சார் ஆறு (Poisar River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தின் கிழக்கு மும்பையில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா பகுதியில் உற்பத்தியாகும் பொய்சார் ஆறு மார்வே கடற்கழி வழியாக அரபுக் கடலில் கலக்கிறது. தற்போது மனித மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த இந்த பொய்சார் ஆறு சிறு ஓடையாக காட்சியளிக்கிறது.
| பொய்சார் ஆறு Poisar River | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | மும்பை புறநகர் |
| மாநகரம் | மும்பை |
| பகுதி | மும்பை கிழக்கு |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா |
| • அமைவு | மும்பை கிழக்கு, இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | மார்வே கடற்கழி, அரபுக் கடல், இந்தியா |
• ஆள்கூறுகள் | 19°11′00″N 72°49′59″E / 19.1833°N 72.833°E |
• உயர ஏற்றம் | 3 m (9.8 அடி) |
