மயக்க மருந்து (Anesthetic) என்பது அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். இம்மருந்து மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது.[1] மயக்க மருந்தானது தோலில் உரோஞ்சுவதன் மூலமும், மருந்து ஊசியின் மூலமும் வாயுவாகவும் மனித உடலினுள் உட்செலுத்தப்படுகின்றது. 1842 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாக டை எத்தில் ஈதர் குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.[2] மயக்க மருந்துப் பயன்பாட்டினை அனஸ்தீசியா (anaesthesia) என அழைப்பர். ஜோசப் லிஸ்டர் என்பவரே நவீன மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர். கோக்கைன், மதுசாரம் ஆகியவையும் வேறுசில போதைப்பொருட்களுமே முற்காலத்தில் மயக்க மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.

மயக்க மருந்து
படிமம்:Preoxygenation before anesthetic induction.jpg
மயக்க மருந்து ஏற்றப்படும் பிள்ளை
MeSHE03.155
மெட்லைன்பிளஸ்anesthesia
ஈமெடிசின்1271543

மேற்கோள்கள்

  1. "Anesthesia is a way to control pain during a surgery or procedure by using medicine called anesthetics. It can help control your breathing, blood pressure, blood flow, and heart rate and rhythm". Retrieved 6 சனவரி 2016.
  2. Kelly, Howard Atwood; Burrage, Walter Lincoln (1920). American Medical Biographies. Baltimore: The Norman, Remington Company. p. 873.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மயக்க_மருந்து&oldid=460214" இலிருந்து மீள்விக்கப்பட்டது