மலையாங்குளம் என்ற கிராமம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1][2] நான்கு புறமும் குளங்களால் சூழப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

மலையாங்குளம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

இவ்வூரை கடமன் குளம் வடக்கு மற்றும் மேற்கிலும், பாறை குளம் கிழக்கு மற்றும் தெற்கிலும் சூழ்ந்துள்ளன. விவசாயம் இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாகும்.

ஊரைச்சுற்றி உள்ள கோவில்கள்

  1. சந்தனமாரியம்மன் கோவில்
  2. விநாயகர் கோவில்
  3. பார்வதி கோவில்
  4. வாழ வந்த அம்மன் கோவில்
  5. அய்யனார் கோவில்
  6. கூடாரக் கோவில்
  7. வெள்ளப் பட்டான் கோவில்
  8. காளியம்மன் கோவில்
  9. அணைந்தச்சி கோவில்
  10. எல்லையம்மன் கோவில்

நிறுவனங்கள்

இங்கு ஜெய் பாரத் பஞ்சாலை ,வி எல் ஜெ அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. வீரப்பா இந்து நடுநிலைப் பள்ளி மக்களுக்கான தொடக்க கல்வியை அளித்து வருகிறது.

மேற்கோள்கள்

  1. "Malaiyankulam Village in Sankarankoil (Tirunelveli) Tamil Nadu". Retrieved 2022-09-20.
  2. "Map of Malaiyankulam, Sankarankoil, Tirunelveli, Tamil Nadu". m.mapsofindia.com. Retrieved 2022-09-20.
"https://tamilar.wiki/w/index.php?title=மலையாங்குளம்&oldid=462856" இலிருந்து மீள்விக்கப்பட்டது