மௌரியா லோக்கு
மௌரியா லோக்கு வளாகம் (Maurya Lok Complex) இந்தியாவின் பீகார் மாநிலத் தலைநகரம் பாட்னாவிலுள்ள பழமையான மற்றும் முக்கிய வணிக வளாகங்களில் ஒன்றாகும். சுருக்கமாக மௌரியா லோக்கு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு வர்த்தக கடைகள் உணவகங்கள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாட்னா மாநகராட்சி இவ்வளாகத்தைக் கட்டுப்படுத்தப்படுகிறது. [2] பாட்னாவின் ஆரம்பகால வணிக வளாகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பீகாரின் முதல் பெண் அமைச்சரவை அமைச்சரான சுமித்ரா தேவியால் நிறுவப்பட்டது.
| மௌரியா லோக்கு வளாகம் Maurya Lok Complex | |
|---|---|
मौर्य लोक | |
| படிமம்:Maurya Lok Patna.jpg 2008 ஆம் ஆண்டில் மௌரியா லோக்கு | |
| பொதுவான தகவல்கள் | |
| இடம் | பட்னா, பீகார் |
| நாடு | இந்தியா |
| ஆள்கூற்று | 25°36′34″N 85°8′4″E / 25.60944°N 85.13444°E |
| துவக்கம் | 29 பிப்ரவரி 1984[1] |
| உரிமையாளர் | பட்னா நகராட்சி ஆணையம் |
| பிற தகவல்கள் | |
| தரிப்பிடம் | உண்டு |
மேற்கோள்கள்
- ↑ "Maurya Lok Marketing Complex, Patna". go4patna.com. Retrieved 17 September 2016.
- ↑ "Maurya Lok complex to be renovated soon". TNN. The Times of India, Patna. 14 January 2014. Retrieved 27 April 2014.