ம. வ. கானமயில்நாதன்
ம. வ. கானமயில்நாதன் (பிறப்பு: யூலை 25, 1942) ஈழத்தின் பத்திரிகை ஆசிரியரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் பிரதம ஆசிரியராக அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நவம்பர் 28 1985 முதல் பணியாற்றி வருகிறார்,

பாரிசில் எல்லைகளற்ற செய்தியாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் வைபவவத்தில் கானமயில்நாதன் (இடது பக்கத்தில்), நவம்பர் 27, 2013
வாழ்க்கைச் சுருக்கம்
கானமயில்நாதன் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.