லப்பை (லெப்பை, லப்பய்) (Labbay) எனப்படுவோர் தென்னிந்தியாவில் உள்ள இசுலாமிய மக்களின் ஒரு பிரிவினர் ஆவர்.[1][2] இவர்கள் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர். இவர்கள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறார்கள். அங்கு இவர்கள் குடியேறிய இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[3]

லப்பை
மொத்த மக்கள்தொகை
சுமார் 1 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழி(கள்)
தமிழ், மலையாளம், உருது
சமயங்கள்
இசுலாம்

சொற்பிறப்பியல்

லப்பை என்பது அரபு மொழியில் தல்பியா என்று அழைக்கப்படும் ஒரு பிரார்த்தனையிலிருந்து, Labbay'k (அரபு: لبیک ) என்ற அரபு சொற்றொடரிலிருந்து பெறப்பட்டது. லப்பை என்பது கடலோரப் பகுதிகளில், குறிப்பாக காயல்பட்டினம், அதிராம்பட்டினம், கீழக்கரை மற்றும் இலங்கை, தமிழ்நாட்டின் பல கடலோர கிராமங்களில் உள்ள அர்வி மொழி பேசும் முஸ்லிம்களுக்கான ஒரு குடும்பப்பெயர் ஆகும்.

வரலாறு

பாரசீக வளைகுடா மற்றும் அராபியத் தீபகற்பம் ஆகிய இடங்களில் தோன்றிய இவர்கள், வர்த்தகம் செய்வதற்காக, இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மக்களுடன் கலந்து தொழில் செய்து வந்தனர்.[4] அத்துடன் இந்தியாவின், தென்மாநிலங்களிலிருந்து பலர் இசுலாம் மதத்திற்கு மாறினர். 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, தோல், புகையிலை, தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் இவர்கள் பெருமளவில் பங்கு வகித்தனர்.

தற்போது இவர்கள் பெங்களூர், சென்னை, கடையநல்லூர், கீழக்கரை, கூத்தாநல்லூர், காயல்பட்டினம், அதிராம்பட்டினம், பழவேற்காடு, தொண்டி, தோப்புத்துறை, நாகூர், ஏர்வாடி மற்றும் வேலூர் மாவட்டத்தில் உருது மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தில் லப்பை சமூகத்தினர், பெருமளவில் வசிக்கின்றனர். இது பெரும்பாலும் வர்த்தகர்கள் மற்றும் தோல் உற்பத்தியாளர்களால் ஆனது. வேலூர், மேல்விசாரம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு மற்றும் உமராபாத் ஆகிய இடங்களில் இந்த சமூகம் மக்கள் கணிசமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். இந்த மக்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர், தமிழ் அல்லது மலையாளத்திற்குப் பதிலாக உருது மொழியை தங்கள் தாய்மொழியாகப் பயன்படுத்துகின்றனர். இந்த சமூக மக்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி, கடலூர், திருநெல்வேலி மற்றும் பிற கடலோர மாவட்டங்களிலிருந்து, குடிபெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

லப்பை சமூகத்தினர் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஹனாஃபி பள்ளி அல்லது ஃபிக்ஹில் ஷாஃபி பள்ளியைப் பின்பற்றுகிறார்கள். லப்பை சமூகத்தினர் பெரும்பாலும் தமிழ்நாட்டின் கடலோர குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Parthasarathi, Prasannan (2001). The Transition to a Colonial Economy: Weavers, Merchants and Kings in South India, 1720-1800. 0 521 57042 5: Cambridge University Press. pp. 150.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Balfour, Edward (1967). The Cyclopaedia of India and of Eastern and Southern Asia Volume 2. Akademische Druck-u. Verlagsanstalt. p. 645.
  3. Weekes, Richard V. (1984). Muslim Peoples [2 Volumes]: A World Ethnographic Survey (in ஆங்கிலம்). Bloomsbury Academic. p. 431. ISBN 978-0-313-23392-0.
  4. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. Vol. 6. Madras: Government Press. p. 151.
"https://tamilar.wiki/w/index.php?title=லப்பை&oldid=487234" இலிருந்து மீள்விக்கப்பட்டது