லீலா அசோகா (Leela Asoka) என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு பாடகி ஆவார்.[1] ஏவா கீகனகே லீலாவதி என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1927 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரக் கொண்டாட்டங்களின் போது, ​​இலங்கைத் தேசிய கீதத்தை முதன்முறையாகப் பாடிய நால்வருள் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.[2]

லீலா அசோகா
Leela Asoka
படிமம்:Leela Asoka in her old age.jpg
2018 ஆம் ஆண்டில் லீலா அசோகா
பிறப்புஏவா கீகனகே லீலாவதி
(1927-07-07)7 சூலை 1927
கொழும்பு, இலங்கை
இறப்பு22 April 2019(2019-04-22) (aged 91)
கொழும்பு, இலங்கை
மற்ற பெயர்கள்கனிலா இசுமாயில்
கல்விமியூசியசு கல்லூரி
மரதானா மத்தியக் கல்லூரி
பணிபாடகி

தனிப்பட்ட வாழ்க்கை

லீலா அசோகா 1927 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று இலங்கையின் கொழும்பில் உள்ள திம்பிரிகாசயாவில் பிறந்தார். எட்டு உடன்பிறப்புகளின் இரண்டாவது குழந்தையாகவும், ஒரே மகளாகவும் ஏவா கீகனகே ஆண்டோரிசு மற்றும் இயோசலின் பெரேரா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இளமையாக இருந்தபோது இவரது தந்தை இறந்தார். இதைத் தொடர்ந்து தாயார் மறுமணம் செய்து கொண்டார்.

படிமம்:Amma Old 1.jpg
 

கொழும்பில் உள்ள இசைக் கல்லூரியிலும், பின்னர் மராதனா மத்திய கல்லூரியிலும் படித்தார். படிப்பைத் தவிர, வரைதல், புல்லாங்குழல் மற்றும் ஆர்மோனியம் ஆகியவர்ராஈ வ்வாஆஸீக்காக் கற்றுக்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தபால் நிலையத்தில் சிறிது காலம் பணிபுரிந்த இவர், அங்கு தனது கணவரை சந்தித்தார்.

 
லீலா அசோகா இலங்கை சனாதியிடமிருந்து விருது பெறுகிறார்.

இவரது மூத்த சகோதரர் சுகததாசர், ஆறு இளைய சகோதரர்கள் சோமபாலா, நியூட்டன், விண்டன், லிண்டன், செல்டன் மற்றும் சரத் என்பவர்களாவர்.[3] இளைய சகோதரர் சரத் டி ஆல்விசு இலங்கையில் புகழ்பெற்ற இசைக்கலைஞராக இருந்தார்.

அசோகா ஒரு அரசு வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு முசுலீம் எம். ஏ. கமல்தீனை மணந்தார். மேலும் அவரது பெயரை கமிலா இசுமாயில் என்று மாற்றினார். தனது கணவரின் வேண்டுகோளின் பேரில் அவர் தொழில் ரீதியாக பாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவரது பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று வானொலி நிறுவனத்திற்கு கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் அபீல், ரெசா மற்றும் பசல் என்பவர்களாவர்.

 
செய்தித் தாளில் லீலா அசோகா

லீலா அசோகா தனது 91 வயதில் இறந்தார். உடல் இவரது இல்லத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.[4] இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் 24 ஏப்ரல் 2019 அன்று ஓகண்டாரா பொது கல்லறையில் செய்யப்பட்டது.[5]

தொழில்

இசை மீதான இவரது ஆர்வத்திற்கு மாமா வி. எம். பெரேரா ஆதரவளித்தார். 1940 ஆம் ஆண்டுகளில் எலா அவுலாவின் செயலாளராக இருந்தார். அவர் இவரது பாடும் திறனை அங்கீகரித்து, எலா அவுலா திருவிழாக்களில் பாட உதவினார். அங்கு இவர் இசையமைப்பாளர் சுனில் சாந்தாவின் கவனத்தை ஈர்த்தார். அவர் சுனில் சாந்தாவின் பாடல்களான "மேவன் பிடிசரே", "கிரில்லா சகா குடுவா", "எலா ரதே" மற்றும் "ரெல்லா நாகென்னே" ஆகிய இரட்டைப் பாடல்களைப் பாடினார். இலங்கை வானொலியில் பி-கிரேடு பாடகராகவும் ஆனார்.

1948 ஆம் ஆண்டில், புதிதாக சுதந்திரம் பெற்ற இலங்கையின் தேசிய கீதத்தைப் பாட லீலா அசோகா தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பள்ளி ஆசிரியர் கருணாரத்னே மற்றும் பாதிரியார் மார்செலின் செயகோடி ஆகியோரின் கீழ் மூன்று சிறுமிகளுடன் பயிற்சி பெற்றார். 1948 ஆம் ஆண்டில் நடந்த முதல் சுதந்திர தின விழாவில் இந்த நால்வரும் தேசிய கீதத்தைப் பாடினர்.

அசோகா டெமட்டகோடாவில் உள்ள ஒரு பள்ளியில் கலை கற்பித்தார். மார்ச் 8 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 2019-ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியிடமிருந்து ஒரு விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Leela Asoka, who sang the national anthem at the first Independence Day, bids farewell". Silumina. Retrieved 20 February 2021.
  2. "48 The story told to Silumina seven decades later by a girl who joined in singing the national anthem on the first Independence Day". Silumina. Retrieved 20 February 2021.
  3. "Leela Asoka was among the girls who sang the national anthem for the first time on the first Independence Day in 1948". Sarasaviya. Retrieved 20 February 2021.
  4. "Singer Leela Ashoka passes away". Daily News. Retrieved 20 February 2021.
  5. "Leela Asoka dies". Sarasaviya. Retrieved 20 February 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=லீலா_அசோகா&oldid=488437" இலிருந்து மீள்விக்கப்பட்டது