1941 தமிழிசை மாநாடு
1941 தமிழிசை மாநாடு என்பது 1941ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகரில்அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது தமிழிசை மாநாடு ஆகும்.[1][2]தமிழிசை தோய்வு பெற்று இருந்த நிலையில் இந்த மாநாடும் செயற்பாடுகளும் புதுவிசையைக் கொடுத்தன. இதற்கு முன்னர் 1900 தொடக்கத்தில் ஆபிரகாம் பண்டிதர் ஏழு இசை மாநாடுகளை கூட்டி தமிழிசை பற்றிய தமது ஆய்வுகளை எடுத்துரைந்திருந்தார்.