<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=183.82.177.243</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=183.82.177.243"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/183.82.177.243"/>
	<updated>2026-06-05T02:51:01Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;diff=448270</id>
		<title>பெரிய நம்பி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;diff=448270"/>
		<updated>2022-06-18T03:35:28Z</updated>

		<summary type="html">&lt;p&gt;183.82.177.243: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox person &amp;lt;!-- See Wikipedia:WikiProject_poetess --&amp;gt;&lt;br /&gt;
| name                = பெரியநம்பிகள்&lt;br /&gt;
| image               =&lt;br /&gt;
| image_size          = &lt;br /&gt;
| caption             = &lt;br /&gt;
| background          = வைணவ அடியார்&lt;br /&gt;
| birth_name          = மகாபூர்ணர்&lt;br /&gt;
| birth_date          = &lt;br /&gt;
| birth_place         = [[திருவரங்கம்]][[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| death_place         = காளையார் கோயில்&lt;br /&gt;
| guru               =  [[ஆளவந்தார்]]&lt;br /&gt;
| philosophy          =  [[விசிஷ்டாத்வைதம்]]&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[ஆளவந்தார்|ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைத]] சமயத்தின் ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர் பெரியநம்பிகள் ஆவார். இவர் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் மகாபூரணர் எனும் இயற்பெயரில் பிறந்தார். [[இராமானுசர்|இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவரான [[மாறனேறி நம்பி]], தன்னுடைய ஆசிரியருக்கு இருந்த ராஜபிளவை நோயை தனக்கு வாங்கிக் கொண்டார்.&amp;lt;ref name=annamegam&amp;gt;ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 86&amp;lt;/ref&amp;gt; அதனால் இறுதிகாலத்தில் யாருமற்ற குடிசையில் மடிந்தார். அவர் தாழ்ந்த குலத்தவர் என்பதால் யாரும் இறுதிக்கடன்களை செய்ய முடியவில்லை. பெரிய நம்பி முன்வந்து மாறநேரி நம்பிக்கு இறுதிக் கடன்களை வைணவ முறைப்படி செய்தார். இதற்காக திருவரங்க வைணவர்கள் அவரை சாதியிலிருந்து தள்ளி வைத்தனர்.&amp;lt;ref name=annamegam/&amp;gt; இதனால் திருவரங்க உற்சவரான நம்பெருமாளிடம் பெரிய நம்பியின் மகள் அத்துழாய் முறையிட்டாள்.&amp;lt;ref&amp;gt;ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 87&amp;lt;/ref&amp;gt; நம்பெருமாள் பெரிய நம்பியின் மீது தவறில்லை எனக்கூறியமையால் அங்கிருந்த வைணவர்கள் அதனை ஏற்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சீடர்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
* எம்பெருமானார் [[இராமானுசர்]]&lt;br /&gt;
* [[திருக்கச்சி நம்பிகள்]]&lt;br /&gt;
* மலைகுனிய நின்றார்&lt;br /&gt;
* ஆரியருள் ஸ்ரீ  சடகோபதாசர்&lt;br /&gt;
* அணியரங்கத்தமுதனார் பிள்ளை&lt;br /&gt;
* திருவாய்க்குலமுடையார் பட்டர்&lt;br /&gt;
&lt;br /&gt;
==மற்ற பெயர்கள்==&lt;br /&gt;
* மகாபூர்ணர்&lt;br /&gt;
* பராங்குச தாசர்&lt;br /&gt;
* பூராணாச்சாரியார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==சிறப்பு==&lt;br /&gt;
* இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, ஆளவந்தார் ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது,&lt;br /&gt;
* மதுராந்தகம் கோதண்டராமர் கோயிலில்(தற்போதைய ஏரிகாத்தராமர் கோயில்)இராமானுசருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தது,&lt;br /&gt;
* ஆள்வந்தாரின் ஆணைப்படி இராமானுசரை திருவரங்கத்திற்கு அழைத்துவந்தது,&lt;br /&gt;
* ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக மடத்தை அலங்கரித்தது,&lt;br /&gt;
* இராமானுசரை கிருமிக்கண்ட சோழனிடமிருந்து காக்கவேண்டி [[கூரத்தாழ்வார்|கூரத்தாழ்வானோடு]] அவைக்கு சென்று தன் கண்களை இழந்தது,&lt;br /&gt;
* தாழ்த்தப்பட்ட குலத்தோராய் கருதப்பட்ட [[மாறனேரி நம்பி]]க்கு உயர்க்குடி வழக்கப்படி இறுதிக் கடன் செய்து, இறைமுன் அனைவரும் ஒன்றே எனும் வைணவத்தின் உயர்ந்த கொள்கையை இராமானுசர் மகிழும் வண்ணம் அனைவருக்கும் உணர்த்தியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தனியன்==&lt;br /&gt;
&lt;br /&gt;
வைணவத்திற்காகவும் , இராமானுசருக்காகவும் தன் கண்களையும் உயிரையும் இழந்த பெரிய நம்பிகள் தன்னுடைய நூற்றைந்தாவது அகவையில் ஜோதிஷ்குடி எனப்படும் காளையார்கோயிலில் தன் ஆச்சாரியன் திருவடி (உயிர்நீத்தல் என்பதின் வைணவச்சொல்)அடைந்தார். அவ்வாச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன் இதோ:&lt;br /&gt;
&lt;br /&gt;
:கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா&lt;br /&gt;
:பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{வைணவ சமயம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>183.82.177.243</name></author>
	</entry>
</feed>