<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A231D%3AAB7C%3A1%3A2%3A8DFF%3A296D</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A231D%3AAB7C%3A1%3A2%3A8DFF%3A296D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D"/>
	<updated>2026-06-02T22:51:06Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=411882</id>
		<title>நல்லந்துவனார்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=411882"/>
		<updated>2022-12-12T09:54:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;நல்லந்துவனார்&#039;&#039;&#039; சங்ககாலப் புலவர்களில் ஒருவர். [[அந்துவன்]] என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-lite-html-nallantu-280857 நல்லந்துவனார் -  தமிழ் இணையக் கல்விக் கழகம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அகநானூறு 43 – பாடல் 1&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
நற்றிணை 88 –பாடல் 1&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு 59)&lt;br /&gt;
&lt;br /&gt;
இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல்-விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள்-சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன. அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை. பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். உவமைகள் புதுமையானவை. சேரரின் கால்வழியைச் சேர்ந்த இவர் பாண்டியனைப் புகழும் பாங்கு இவரது நடுவுநிலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு. புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சொல் விளக்கம்&lt;br /&gt;
:ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்&lt;br /&gt;
:போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை&lt;br /&gt;
:பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்&lt;br /&gt;
:அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை&lt;br /&gt;
:அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்&lt;br /&gt;
:செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை&lt;br /&gt;
:நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை&lt;br /&gt;
:முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்&lt;br /&gt;
:பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்&amp;lt;ref&amp;gt;கலித்தொகை 133&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியம் &lt;br /&gt;
* உயிரினுஞ் சிறந்தன்று நாண் &amp;lt;small&amp;gt;கலித்தொகை 147&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று &amp;lt;small&amp;gt;(தொல்காப்பியம், களவியல் 1059)&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
திருக்குறள்&lt;br /&gt;
* வேண்டுதல் வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின் யாண்டும் உடையான் இசை &amp;lt;small&amp;gt;– கலித்தொகை 143&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் - &amp;lt;small&amp;gt;குறள் 265&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
* விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய் செய்யும் அறனிலாளன்&amp;lt;small&amp;gt; – கலித்தொகை 144&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - &amp;lt;small&amp;gt;குறள் 1218&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
* பிறர் நோயும் தந்நோய்போற் போற்றி அறன்றிதல் –&amp;lt;small&amp;gt; கலித்தொகை 139&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக்கடை - &amp;lt;small&amp;gt;குறள் 315&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
* நோக்குங்கால் நோக்கின் அணங்காகும் சாயலாய் – &amp;lt;small&amp;gt;கலித்தொகை 131&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - &amp;lt;small&amp;gt;குறள் 1094&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
* காமமும் கௌவையும் என்றிவை வலிதின் உயிர்க் காவாத் தூங்கியாங்கு –&amp;lt;small&amp;gt; கலித்தொகை 142&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:காமமும் நாணும் உயிர்க் காவாத் தூங்கும் என் நோனா உடம்பின் அகத்து - குறள் 1163&lt;br /&gt;
சிலப்பதிகாரம் &lt;br /&gt;
* மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை – &amp;lt;small&amp;gt;பரிபாடல் 20&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
:மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என்று (கோவலன் மாதவியைப் பிரிந்தான்) - &amp;lt;small&amp;gt;சிலப்பதிகாரம் கானல்வரி&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
நன்னெறி&lt;br /&gt;
# தம்புகழ் கேட்டார்போல் தலைசாத்து மரம் துஞ்ச&amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 119&amp;quot;&amp;gt;கலித்தொகை 119&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# அறஞ்செய்யான் --- நெஞ்சம்போல் --- இருள் தூர்பு&amp;lt;ref&amp;gt;கலித்தொகை120&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 125&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# அரசன் பின் அல்லது --- அறநெறி நிறுக்கல்லாது&amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 129&amp;quot;&amp;gt;கலித்தொகை 129&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
உலகியல்&lt;br /&gt;
# பாம்பும் அவைப்படின் உய்யுமாம்&amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 140&amp;quot;&amp;gt;கலித்தொகை 140&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் &amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 20&amp;quot;&amp;gt;பரிபாடல் 20&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப&amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 6&amp;quot;&amp;gt;பரிபாடல் 6&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
மெய்யுணர்வு&lt;br /&gt;
# அரிதினின் தோன்றிய யாக்கை &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 141&amp;quot;&amp;gt;கலித்தொகை 141&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# தொல்வினைக்கு என் பேதுற்றனை &amp;lt;ref name=&amp;quot;நற்றிணை 88&amp;quot;&amp;gt;நற்றிணை 88&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
உவமை&lt;br /&gt;
# செவ்வியாழ் நரம்பன்ன கிளவியார் &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 118&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# உப்பியல் பாவை உறை உற்றது போல் &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 138&amp;quot;&amp;gt;கலித்தொகை 138&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# மருந்து அறைகோடலின் கொடிது --- தலைவன் கைவிடல் &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 129&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் --- இருள் வர &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 130&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# அல்லது கொடுப்பவன் அருள் கொண்ட முகம் போல --- மதி சீப்ப &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 149&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# அறுகு பதியா அம்பி &amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 6&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
வேதம்&lt;br /&gt;
:முக்கோல் அந்தணர் முதுமொழி &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 126&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
வாழ்வியல்&lt;br /&gt;
:மாலை அணிய விலை தந்தான், மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் &amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 20&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
சத்தியம் செய்யும் பழக்கம்&lt;br /&gt;
# தலைதொட்டேன் தண்பரங்குன்று &amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 6&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# பெருங்கடல் தெய்வநீர் நோக்கித் தெளித்து, --- மணந்தான் &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 131&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
பொங்கல் திருநாள் நினைவு&lt;br /&gt;
: பூளை பொலமலர் ஆவிரை வேய் வென்ற தோளன் எமக்கு ஈந்த பூ &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 138&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
:(பொங்கலுக்குக் காப்புக் கட்டும்போதும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்குத் தோரணம் கட்டும்போதும் இக்காலத்திலும் பூளைப்பூ, ஆவிரம்பூ, மூங்கில்-கொத்து ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டுகின்றனர்.)&lt;br /&gt;
புராணக் கதை&lt;br /&gt;
# ஆவிரங்கண்ணி நெடியோன் மகன் (முருகன்) &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 140&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# நேமியான் நிறம் போல இருள்வர &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 119&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# மாயவன் மார்பில் திருப்போல அவள் சேர &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 144&amp;quot;&amp;gt;கலித்தொகை 144&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
அரசியல்&lt;br /&gt;
# தென்னவற் தெளித்த தேஎம் போல இன்னகை எய்தினன் &amp;lt;ref&amp;gt;கலித்தொகை143&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# போர்வல் வழுதிக்கு அருந்திறை போல &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 141&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# முரைசு மூன்று ஆள்பவர் – கலித்தொகை 132&lt;br /&gt;
அசுணமா விலங்கு -இசைக்கு மயங்கும் உயிரினம்&lt;br /&gt;
:மறையில் தன் யாழ் வேட்ட மானை அருளாது அறை கொன்று --- பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 143&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
மகன்றில் விலங்கு - dolphin போன்ற நீர்வாழ் உயிரினம்&lt;br /&gt;
:மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி &amp;lt;ref&amp;gt;பரிபாடல் 8&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
பொறியியல்&lt;br /&gt;
:பொறிசெய் புனைபாவை போல --- செல்வேன் &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 145&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
தமிழ்ச்சங்கம்&lt;br /&gt;
# மாசில் பனுவற் புலவர் புகல் புலநாவிற் புனைந்த நன்கவிதை &amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 6&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# தமிழ்வையைத் தண்ணம் புனல் &amp;lt;ref name=&amp;quot;பரிபாடல் 6&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
தமிழ்&lt;br /&gt;
# வானேர்பு இரங்கி &amp;lt;ref&amp;gt;அகம் 43&amp;lt;/ref&amp;gt; - செய்பு வாய்பாட்டு வினையெச்சம்&lt;br /&gt;
# பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக &amp;lt;ref&amp;gt;கலித்தொகை 136&amp;lt;/ref&amp;gt; - பாண்டியம் = பாடுபடுதல்&lt;br /&gt;
# துயரால் இறை இறை பொத்திற்றுத் தீ &amp;lt;ref name=&amp;quot;கலித்தொகை 144&amp;quot;/&amp;gt; - இறையிறை = சிறிது சிறிதாக&lt;br /&gt;
# கடல் விளை அமுதம் (உப்பு) &amp;lt;ref name=&amp;quot;நற்றிணை 88&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்==&lt;br /&gt;
{{Reflist|2}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF&amp;diff=342794</id>
		<title>கொல்லன் அழிசி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF&amp;diff=342794"/>
		<updated>2022-11-30T10:47:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;கொல்லன் அழிசி&#039;&#039;&#039; சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 4 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை: [[குறுந்தொகை]] 26, 138, 145, 240.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரும்புக் கருவிகள் செய்பவரையும், பொன்னணிகள் செய்பவரையும் [[கொல்லன்]] என்பர். [[அழிஞ்சி]] என்பது [[சுண்டைக்காய்]]ப் பருமன் கொண்ட வெண்ணிறமுள்ள ஒரு பழம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவர் சொல்லும் செய்திகள்==&lt;br /&gt;
===குறுந்தொகை 26===&lt;br /&gt;
* திணை - குறிஞ்சி&lt;br /&gt;
காதலனை நினைத்துக் காதலியின் உடலும் உள்ளமும் இளைத்துப் போயின. தன் மகளின் இந்த நிலையைக் கண்டு [[செவிலித்தாய்|செவிலித்தாயும்]] பெற்ற [[நற்றாய்|நற்றாயும்]] கட்டுவிச்சியை அழைத்துத் தன் மகள் இளைத்ததற்குக் காரணம் கேட்கின்றனர். அப்போது தோழி முந்திக்கொண்டு நிகழ்ந்ததைக் கூறுகிறாள்.&lt;br /&gt;
* தோழி அறத்தொடு நிற்றல்&lt;br /&gt;
அரும்பு இல்லாமல் எல்லாமே பூத்துக் கிடக்கும் [[வேங்கை (மரம்)|வேங்கை]] மரக் கிளையில் இருக்கும் மயில் பூப் பறிக்கும் பெண்மகள் போலத் தோன்றும் நாடன் அவன். அவன் தகாதவன் போலத் தோன்றினாலும் எந்தத் தீயதையும் வாயால்கூடச் சொல்லமாட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நான் கூறுவதை நீங்கள் பொய் என்று நினைக்கலாம். அன்று கொக்கு என்னும் மாவிலையைத் தின்றுகொண்டிருந்த வரையாட்டுக் குட்டியின் தந்தை அவனை அறியும். மாம்பழத்தைத் தின்றுகொண்டிருந்த ஆண்குரங்கு கடுவனும் அறியும் - என்கிறாள் தோழி.&lt;br /&gt;
&lt;br /&gt;
===குறுந்தொகை 138===&lt;br /&gt;
* திணை - [[குறிஞ்சி]]&lt;br /&gt;
பகலில் குறியிடத்துக்கு வந்த தலைவன் தலைவியை அடையமுடியாமல் மீள்கிறான். பின்னும் வருகிறான். தோழி இரவில் வா என்று குறியிடம் சொல்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊரே தூங்கிவிட்டாலும் நாங்கள் தூங்கமாட்டோம். எங்கள் வீட்டிலிருந்து ஏழு வீட்டுக்கு அப்பால் மயிலின் காலடி  போன்று இலைகளைக் கொண்ட நொச்சி பூத்திருக்கிறது. அது ஆடும் ஓசை கேட்கிறதா என்று உற்றுக் கேட்டுக்கொண்டேயிருப்போம். (அங்கு வந்து நொச்சிச் செடியை ஆட்டு என்று குறியிடம் சொல்கிறாள் தோழி)&lt;br /&gt;
&lt;br /&gt;
===குறுந்தொகை 145===&lt;br /&gt;
* திணை - [[நெய்தல்]]&lt;br /&gt;
திருமணக் காலம் தள்ளிக் கொண்டே செல்கிறது. தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் வாழவேண்டிய ஊர் இது அன்று. அவர் ஊர். அவன் கானலஞ் சேர்ப்பன். அவன் திருமணம் செய்துகொள்ளாது காலம் கடத்திக் கொடுமைப்படுத்துகிறான். அதனால் எனக்கு அமைதி இல்லாத துயரம். இந்தத் துயரத்தோடு வருந்திக்கொண்டு நான் [[நள்ளிரவு|நள்ளிரவிலும்]] தூங்காமல் இருக்கிறேன். ஊரெல்லாம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. இரவு எனக்கு மட்டுந்தான் நீண்டுகொண்டே போகிறது. என்ன செய்வேன்? - என்கிறாள் தலைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
===குறுந்தொகை 240===&lt;br /&gt;
* திணை - [[முல்லை]]&lt;br /&gt;
தலைவன் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்படும் தோழியிடம் தலைவி சொல்லும் செய்திகள் இவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பனியில் காய்க்கும் [[அவரைக் காய்]] கிளியின் வாய் போலக் காய்த்துக் கிடக்கும் பனிக்காலம் வந்துவிட்டது. காட்டுப் பூனையின் பல்வரிசை  போல் முல்லைப்  பூக்கும் மாலை வேளையும் வந்துவிட்டது. இந்த வேளையில் அவரது மலையைப் பார்க்கிறேன். கடலில் செல்லும்போது மரக்கலம் ([[கப்பல்]]) மறைவது போல அவர் மலையும் என் கண்ணிலிருந்து மறைகிறது. - இதுதான் என் நிலை என்கிறாள் தலைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=478782</id>
		<title>மோரியர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=478782"/>
		<updated>2022-11-30T10:11:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[படிமம்:Maurya empire in 265 BCE.jpg|thumb|300px|right|மோரியர் ஆட்சிப் பரப்பு]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[மௌரியப் பேரரசு]] [[சங்க இலக்கியம்|சங்கத்தமிழ்]] &#039;&#039;&#039;மோரியர்&#039;&#039;&#039; என்று குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
எங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்பாடலில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.&amp;lt;ref&amp;gt;வெல்கொடி துனைகால் அன்னை, புனைதேர் [[கோசர்]], தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம்முனை சிதைத்த ஞான்றை, [[மோகூர்]] பணியாமையின், பகை தலைவந்த மாபெருந்தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 [[மாமூலனார்]].&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லாண்மை மிக்க [[வடுகர்]] படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.&amp;lt;ref&amp;gt;மயில் ஒழித்த பீலி வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கணை குரல் இசைக்கும் விரை செலல் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென்-திசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து, ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து அவரோ சென்றனர் – அகநானூறு 281-8 மாமூலனார்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதுள்ள [[மங்களூர்]] மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.&amp;lt;ref&amp;gt;வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த [[உலக இடைக்கழி]] அறைவாய் - புறம் 175-6 [[கள்ளில் ஆத்திரையனார்]].&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர். (பொருள் தேடச் சென்ற தமிழர்) - அகம் 69-10 [[உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]].&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===இணைத்துப் பார்க்கவேண்டியது===&lt;br /&gt;
:[[ஆரியர் (சங்ககாலம்)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
===சான்று===&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க காலம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:231D:AB7C:1:2:8DFF:296D</name></author>
	</entry>
</feed>