<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=42.104.129.234</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=42.104.129.234"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/42.104.129.234"/>
	<updated>2026-06-04T10:38:00Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=363998</id>
		<title>சீறாப் புராணம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=363998"/>
		<updated>2024-11-06T12:12:34Z</updated>

		<summary type="html">&lt;p&gt;42.104.129.234: ஆதாரம் இல்லாத கட்டுரை எழுத்துக்கள்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த [[இசுலாமிய தமிழ் இலக்கியம்|இசுலாமிய இலக்கியம்]]  &#039;&#039;&#039;சீறாப் புராணம்&#039;&#039;&#039; ஆகும். இந்நூல் இறைதூதர் [[நபி]]கள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[உமறுப் புலவர்]] ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக &#039;&#039;&#039;சின்னசீறா&#039;&#039;&#039; என்னும் நூலினை &#039;&#039;&#039;பனு அகமது&#039;&#039;&#039; படைத்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சீறாப்புராண அமைப்பு==&lt;br /&gt;
இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் என நூல் முழுவதும் 92 (45+47) படலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
===முதற்பாகம்===&lt;br /&gt;
முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 45 படலங்கள் உள்ளன. அவை கீழ்க்கண்டவாறு பிரிந்துள்ளன.&lt;br /&gt;
====1.விலாதத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்)====&lt;br /&gt;
முதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 24 படலங்கள் உள்ளன....................&lt;br /&gt;
#கடவுள் வாழ்த்துப் படலம்&lt;br /&gt;
#நாட்டுப் படலம்&lt;br /&gt;
#தலைமுறைப் படலம்&lt;br /&gt;
#நபியவதாரப் படலம்&lt;br /&gt;
#அலிமா முலையூட்டுப் படலம்&lt;br /&gt;
#இலாஞ்சனை தரித்த படலம்&lt;br /&gt;
#புனல் விளையாட்டுப் படலம்&lt;br /&gt;
#புகைறா கண்ட படலம்&lt;br /&gt;
#பாதை போந்த படலம்&lt;br /&gt;
#சுரத்திற் புனலழைத்த படலம்&lt;br /&gt;
#பாந்தள்வதைப் படலம்&lt;br /&gt;
#நதிகடந்த படலம்&lt;br /&gt;
#புலிவசனித்த படலம்&lt;br /&gt;
#பாந்தள் வசனித்த படலம்&lt;br /&gt;
#இசுறாகாண் படலம்&lt;br /&gt;
#கள்வரை நதிமறித்த படலம்&lt;br /&gt;
#சாமு நகர் புக்க படலம்&lt;br /&gt;
#கரம் பொருத்து படலம்&lt;br /&gt;
#ஊசாவைக் கண்ட படலம்&lt;br /&gt;
#கதீசா கனவு கண்ட படலம்&lt;br /&gt;
#மணம் பொருத்து படலம்&lt;br /&gt;
#மணம்புரி படலம்&lt;br /&gt;
#கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்&lt;br /&gt;
&lt;br /&gt;
====2.நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்) ====&lt;br /&gt;
இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நபிப்பட்டம் பெற்ற படலம்&lt;br /&gt;
&lt;br /&gt;
#தொழுகை வந்த வரலாற்றுப் படலம்&lt;br /&gt;
#தீனிலைக்கண்ட படலம்&lt;br /&gt;
#உமறுகத்தாபீமான் கொண்ட படலம்&lt;br /&gt;
#உடும்பு பேசிய படலம்&lt;br /&gt;
#உத்துபா வந்த படலம்&lt;br /&gt;
#அபீபு மக்கத்துக்கு வந்த படலம்&lt;br /&gt;
#மதியையழைப்பித்த படலம்&lt;br /&gt;
#தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்&lt;br /&gt;
#அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்&lt;br /&gt;
#ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்&lt;br /&gt;
#மானுக்குப் பிணை நின்ற படலம்&lt;br /&gt;
#ஈத்தங்குலை வரவழைத்த படலம்&lt;br /&gt;
#ஒப்பெழுதித் தீர்ந்த படலம்&lt;br /&gt;
#புத்து பேசிய படலம்&lt;br /&gt;
#பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்&lt;br /&gt;
#பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்&lt;br /&gt;
#அத்தாசீமான் கொண்ட படலம்&lt;br /&gt;
#சின்களீமான் கொண்ட படலம்&lt;br /&gt;
#காம்மாப் படலம்&lt;br /&gt;
#விருந்தூட்டுப் படலம்&lt;br /&gt;
&lt;br /&gt;
===இரண்டாம் பாகம் ===&lt;br /&gt;
இப்பாகத்தில் இறுதிக்காண்டமான, இசிறத்துக்காண்டம்(&#039;&#039;&#039;ஹிஜிறத்துக் காண்டம்&#039;&#039;&#039;-செலவியல் காண்டம் &amp;lt;small&amp;gt;)&amp;lt;/small&amp;gt; அமைந்துள்ளது. இக்காண்டம், மொத்தம் 47 படலங்களைப் பெற்றுள்ளது.அவை வருமாறு;-&lt;br /&gt;
#ஈமான் கொண்ட படலம்&lt;br /&gt;
#மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்&lt;br /&gt;
#யாத்திரைப் படலம்&lt;br /&gt;
#விடமீட்ட படலம்&lt;br /&gt;
#சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்&lt;br /&gt;
#உம்மி மகுபதுப் படலம்&lt;br /&gt;
#மதீனம்புக்க படலம்&lt;br /&gt;
#கபுகாபுப் படலம்&lt;br /&gt;
#விருந்திட்டீமான் கொள்வித்த படலம்&lt;br /&gt;
#உகுபான் படலம்&lt;br /&gt;
#சல்மான் பாரிசுப் படலம்&lt;br /&gt;
#ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்&lt;br /&gt;
#ஓநாய் பேசிய படலம்&lt;br /&gt;
#வத்தான் படைப் படலம்&lt;br /&gt;
#பாத்திமா திருமணப் படலம்&lt;br /&gt;
#சீபுல் பகுறுப் படலம்&lt;br /&gt;
#புவாத்துப் படலம்&lt;br /&gt;
#அசீறாப் படலம்&lt;br /&gt;
#பத்னுன்ன குலாப் படலம்&lt;br /&gt;
#பத்றுப் படலம்&lt;br /&gt;
#சவீக்குப் படலம்&lt;br /&gt;
#குதிரிப் படலம்&lt;br /&gt;
#தீயம்றுப் படலம்&lt;br /&gt;
#அபிறாபிகு வதைப் படலம்&lt;br /&gt;
#அசனார் பிறந்த படலம்&lt;br /&gt;
#அபூத்தல்ஹா விருந்துப் படலம்&lt;br /&gt;
#உகுதுப் படலம்&lt;br /&gt;
#அமுறாப் படலம்&lt;br /&gt;
#ககுபு வதைப் படலம்&lt;br /&gt;
#சுகுறாப் படலம்&lt;br /&gt;
#பதுறு சுகுறாப் படலம்&lt;br /&gt;
#உசைனார் பிறந்த படலம்&lt;br /&gt;
#தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்&lt;br /&gt;
#சாபிர் கடன் றீர்த்த படலம்&lt;br /&gt;
#முறைசீக்குப் படலம்&lt;br /&gt;
#கந்தக்குப் படலம்&lt;br /&gt;
#உயை வந்த படலம்&lt;br /&gt;
#பனீ குறைலா வதைப் படலம்&lt;br /&gt;
#லுமாமீமான் கொண்ட படலம்&lt;br /&gt;
#செயினபு நாச்சியார் கலியாணப் படலம்&lt;br /&gt;
#ஒட்டகை பேசிய படலம் &lt;br /&gt;
#மழையழைப்பித்த படலம்&lt;br /&gt;
#அந்தகன் படலம்&lt;br /&gt;
#கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்&lt;br /&gt;
#உமுறாவுக்கு போன படலம்&lt;br /&gt;
#சல்மா பொருத படலம்&lt;br /&gt;
#உறனிக் கூட்டத்தார் படலம்&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரம்==&lt;br /&gt;
*சீறாப்புராணம் (மூலமும் பொழிப்புரையும்), உரையாசிரியர்:மகாமதி சதாவதானி [[செய்குத்தம்பி பாவலர்|செய்குத் தம்பிப் பாவலர்]]&lt;br /&gt;
*[https://www.tamilvu.org/ta/library-l4410-html-l4410con-141975/ சீறாப்புராணம் ]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தமிழ்க் காப்பியங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:17 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>42.104.129.234</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=363317</id>
		<title>சீதக்காதி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=363317"/>
		<updated>2024-11-06T12:09:29Z</updated>

		<summary type="html">&lt;p&gt;42.104.129.234: ஆதாரம் இல்லாத கட்டுரைகள் எழுத்துக்கள்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;சீதக்காதி&#039;&#039;&#039; பதினேழாம் நூற்றாண்டில் தென் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழ்ந்த புகழ் பெற்ற [[வள்ளல்]] ஆவார். இவர் பெயர் &#039;ஷெய்க் அப்துல் காதர்&#039; என்றும் அழைக்கப்பெறும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
இவரின் தந்தையார் &#039;மவ்லா சாகிப்&#039; என்ற &#039;பெரியதம்பி மரக்காயர்&#039; ஆவார். தாயார் &#039;முஹம்மது பாத்திமா நாய்ச்சியார்&#039;. இத்தம்பதியருக்கு மூன்று [[பிள்ளை]]கள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற &#039;முகம்மது அப்துல் காதிறு&#039;; இவரின் தம்பியார் &#039;ஷைகு இப்றாகீம் மரக்காயர்&#039; ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கல ஆயர் மரபில் வந்தவர்கள், அதாவது [[கப்பல்|கப்பலில்]] வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; சீதக்காதியின் தாயைப் பெற்ற பாட்டனார் &#039;வாவலி மரக்காயர்&#039; ஆவார். இவர் இறந்த நாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஊர் ==&lt;br /&gt;
இவர் பிறந்து வளர்ந்த ஊர் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது [[கீழக்கரை]] என்றும், [[காயல்பட்டினம்]] என்றும் இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. காயல் என்ற பெயரில் [[பழையகாயல் ஊராட்சி|பழையகாயல்]], [[புன்னக்காயல் ஊராட்சி|புன்னைக்காயல்]], [[கீழக்கரை]], [[காயல்பட்டினம்]] என்ற நான்கு ஊர்கள் உண்டு. அவற்றுள் [[கீழக்கரை]] என்பதே சீதக்காதியின் ஊர் என்பர் ஆய்வாளர்&amp;lt;ref&amp;gt;முகம்மது ஹுசைன் நயினார்,&#039;&#039;&#039;சீதக்காதி வரலாறு&#039;&#039;&#039;, மதராஸ்:சுல்தானா அப்துல்லாஹ் வெளியீடு,1953.&amp;lt;/ref&amp;gt; [[கீழக்கரை|கீழக்கரைக்குத்]] தென்காயல் என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.அந்த நகருக்குப் பௌத்திரமாணிக்கம், அனுத்தொகைமங்கலம், செம்பிநாடு, நினைத்தது முடித்தான் பட்டினம், வகுதை, வச்சிரநாடு முதலிய பெயர்களும் உண்டு என்பர் ஆய்வாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== காலம் ==&lt;br /&gt;
இவர் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி; தோராயமாகக் கி.பி.1650-1720 என்பர்.&lt;br /&gt;
சீதக்காதி ஒரு [[தமிழர்]]. [[இசுலாம்]] சமயத்தவர்; புகழ்பெற்ற வள்ளல். இந்து-முசுலீம் என்று வேற்றுமை பாராட்டாது அனைவரையும் சமமாகக் கருதி ஆதரித்தவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றிய பெருமகனார்.&lt;br /&gt;
சீதக்காதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இசுலாமியப் பெரியார் &#039;சதக்கத்துல்லா வலி&#039; ஆவார்; இவர் இசுலாமியப் பேரறிஞர்; மார்க்கக் கல்வியைப் பரவச் செய்தவர். இவர் சீதக்காதியின் நண்பரும் குருவும் ஆவார்.&lt;br /&gt;
[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தை]] ஆண்ட [[இரகுநாத கிழவன்|கிழவன்சேதுபதி]] இவரின் நெருங்கிய நண்பர். கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி மதியுரை அமைச்சர் போன்று விளங்கினார். கிழவன் சேதுபதி அவர்களின் இயற்பெயர் &#039;விசய இரகுநாதத் தேவர்&#039; என்பதாகும்; இவர் 1692 ஆம் ஆண்டில் [[மதுரை|மதுரையின்]] கீழ் உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தனியாட்சி நடத்தத் தொடங்கினார். அப்பொழுது பாதுகாப்பிற்காக [[இராமநாதபுரம்|இராமநாதபுரக்]] கோட்டையும் அரண்மனையும் புதிதாக விரிவாக்கிப் பெரும் பாதுகாப்புடன் கட்டப்பட்டன. அதற்குப் பொன்னும், பொருளும் கொடுத்து உதவியவர் சீதக்காதி என்பர் &amp;lt;ref&amp;gt;ஆய்வறிஞர்(2.மு.உ.நயினார்,1953.)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கிழவன் சேதுபதி, சீதக்காதியை உரிமை பாராட்டி அவருக்கு &#039;விசயரகுநாதப் பெரியதம்பி&#039; எனத் தன்பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== செய்தக்காதி(சீதக்காதி)நொண்டிநாடகத்தில் ==&lt;br /&gt;
இந்நிலம்புகழ்ப்ர தாபன் விசய/ &lt;br /&gt;
இரகுநாத பெரிய தம்பி மகீபன்,&lt;br /&gt;
கன்னாவு தாரனையன் புகழ்பாடி நொண்டி/ &lt;br /&gt;
களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.(1)&lt;br /&gt;
 &lt;br /&gt;
-எனச் சீதக்காதி, &#039;விசயஇரகுநாத பெரியதம்பி&#039; எனப் புகழப்படுவதைக் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்காலத்தே [[டில்லி]]யை ஆண்ட முகலாயப்பேரரசர் [[அவுரங்கசீப்]] சீதக்காதியின்பால் பெருமதிப்புக் கொண்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== செல்வவளம் ==&lt;br /&gt;
இவர் பரம்பரையாகப் பெரும் செல்வமிக்க வணிகக்குடும்பத்தில் தோன்றியவர்; அன்றியும் இவரே கப்பல் வணிகம் செய்து பெரும்பொருளீட்டினார்.அக்காலத்தில் இங்கு வணிகம் செய்யவந்த ஆங்கிலக் கம்பெனி யாருக்குச் சீதக்காதியார் எழுதிய கடிதக்குறிப்புக்கள் உண்டு. அதில் &amp;quot;கும்பெனியாருக்கு எவ்வளவு மிளகு தேவையாயிருந்தாலும்தம்மால் அனுப்பமுடியும்&amp;quot; என்று அவர் எழுதிய கடிதக்குறிப்புஉண்டு.எனவே,அக்கால மிளகுவணிகம் முழுவதும் இவர்மூலமாகவே நடந்து வந்தது என்பர் ஆய்வறிஞர்.எனவே வணிகத்தின்   மூலம் வானளாவிய செல்வத்தை ஈட்டினார்.ஈட்டிய செல்வத்தினை அனைவருக்கும் வழங்கிச் &amp;quot;செல்வத்துப் பயனே ஈதல்&amp;quot; என்ற கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இலக்கியங்கள் ==&lt;br /&gt;
பெரும்கொடைவள்ளலான இவர்மீது பல சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் எழுந்துள்ளன. அவை:&lt;br /&gt;
&lt;br /&gt;
*1.செய்தக்காதி நொண்டிநாடகம்.&lt;br /&gt;
*2.செய்தக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து- ஆசிரியர் உமறு கத்தாப் புலவர்.&lt;br /&gt;
*3.சீதக்காதி பேரில் தனிப்பாடல்கள்.(படிக்காசுப்புலவர், நமச்சிவாயப்புலவர், தாசி முதலியோர் பாடியவை).&lt;br /&gt;
&lt;br /&gt;
== வள்ளல்தன்மை ==&lt;br /&gt;
நபிகள்நாயக மான்மியத்தைச் &#039;[[சீறாப் புராணம்|சீறாப்புராணம்]]&#039; மூலமாக, உலகிற்குப் பரப்பப் பொருள்வளம் மிக்க சீதக்காதி பெரிதும் உதவினார். ஆனால் சீறாப்புராணத்தில் இவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அபுல்காசிம் என்பவர் பற்றிய குறிப்புண்டு; மார்க்கப் பேரறிஞர் சதக்கத்துல்லா வலி பற்றிய குறிப்புண்டு; வள்ளல் சீதக்காதியை ஏன் அவர் சுட்டவில்லை என்பது குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்கள்  எழுந்ததுண்டு.&lt;br /&gt;
&#039;செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே.&lt;br /&gt;
== பஞ்சகாலத்தில் ==&lt;br /&gt;
அவர் காலத்தில் மிகப்பெரும் பஞ்சமொன்று வந்தது. அதில் ஏராளமானோர் உண்ண உணவின்றி மடிந்தனர். விலைவாசி உச்சக்கட்டத்தினை அடைந்தது. அத்தகைய பஞ்ச காலத்தில் ஏழை எளியோருக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் உணவு வழங்கி உதவினார் சீதக்காதி. இதனை,&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கார்தட்டிய பஞ்ச காலத்திலே  தங்கள் காரியப்பேர்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே&lt;br /&gt;
&lt;br /&gt;
-என்ற படிக்காசுப்புலவரின் பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சீதக்காதி இறந்தபின் [[படிக்காசுப்புலவர்]] பாடிய பாடல் படிப்போர் உள்ளத்தினை உருக்குவதாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவரின் மகள்வழிச் சந்ததியார் இன்னும் தமிழகத்தில் [[கீழக்கரை|கீழக்கரையில்]] வாழ்ந்துவருகின்றனர்.&lt;br /&gt;
இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்ற சீதக்காதி வள்ளல் மிகப்பெரும் புகழ்வாழ்வு வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் [[தமிழர்]] நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சீதக்காதி வள்ளல்மேல் பாடிய தனிப்பாடல்கள் ==&lt;br /&gt;
*படிக்காசுப்புலவர் பாடியவை&lt;br /&gt;
&lt;br /&gt;
=== &amp;lt;span lang=&amp;quot;en&amp;quot; dir=&amp;quot;ltr&amp;quot;&amp;gt;பாடல்&amp;lt;/span&amp;gt;: 1. ===&lt;br /&gt;
&lt;br /&gt;
:நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்/&lt;br /&gt;
:பூசிக்கு நின்கைப் பொருளொன்றுமே, மற்றைப் புல்லர் பொருள்/&lt;br /&gt;
:வேசிக்கும், சந்து நடப்பார்க்கும், வேசிக்கு வேலைசெய்யும்/&lt;br /&gt;
:தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பாடல்: 2. ===&lt;br /&gt;
&lt;br /&gt;
:ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/&lt;br /&gt;
:கார்தட்டிய பஞ்ச காலத்திலே, தங்கள் காரியப்பேர்/&lt;br /&gt;
:ஆர்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு/&lt;br /&gt;
:மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பாடல்: 3. ===&lt;br /&gt;
&lt;br /&gt;
:கஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன எட்டிமரம்/ &lt;br /&gt;
:காயாதிருந்தென்ன, காய்த்துப் பலனென்ன கைவிரித்துப்/&lt;br /&gt;
:போய்,யாசகம்என உரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்/&lt;br /&gt;
:ஓயாமல் ஈபவன், மால்சீதக் காதி ஒருவனுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பாடல்: 4. ===&lt;br /&gt;
&lt;br /&gt;
:காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே/&lt;br /&gt;
:தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில் பன்னூல்/&lt;br /&gt;
:ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் அனுதினமும்/&lt;br /&gt;
:ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ் முசுலிம் நபர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமியத் தமிழ் இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>42.104.129.234</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=290023</id>
		<title>உமறுப் புலவர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=290023"/>
		<updated>2024-11-06T12:07:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;42.104.129.234: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;உமறுப் புலவர்&#039;&#039;&#039; (4 திசம்பர் 1642 - 28 சூலை 1703)&amp;lt;ref name=&amp;quot;Hindu&amp;quot;&amp;gt;{{Cite web |url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1939400.ece |title=Umaru Pulavar memorial inaugurated |date=30 அக்டோபர் 2007 |publisher=[[தி இந்து]] |archive-url=https://archive.today/20151007075625/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1939400.ece |archive-date=7 அக்டோபர் 2015|access-date=7 அக்டோபர் 2015 |url-status=live }}&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;TNT&amp;quot;&amp;gt;{{Cite web |url=https://tamilnadu-favtourism.blogspot.com/2016/06/umaru-pulavar-memorial-ettayapuram.html |title=Umaru Pulavar Memorial, Ettayapuram |date=24 சூன் 2016 |website=Umaru Pulavar Memorial, Ettayapuram |archive-url=https://web.archive.org/web/20170909091928/https://tamilnadu-favtourism.blogspot.com/2016/06/umaru-pulavar-memorial-ettayapuram.html |archive-date=9 செப்டம்பர் 2017 |url-status=|access-date=7 அக்டோபர் 2019}}&amp;lt;/ref&amp;gt; [[முகம்மது நபி]] அவர்களின் வரலாற்றை அடியொற்றித் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] மரபிற்கேற்பச் [[சீறாப் புராணம்]] என்ற காப்பியத்தைப் பாடியவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வாழ்க்கைக் குறிப்பு ==&lt;br /&gt;
உமறுப்புலவர் [[தூத்துக்குடி மாவட்டம்]], நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். [[எட்டயபுரம்|எட்டயபுர]] மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய [[கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவரிடம்]] உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். ஆண்டுதோறும் இவரது பிறந்தநாளை அரசு விழாவாக மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்டம் [[எட்டயபுரம்|எட்டயபுரத்தில்]] கொண்டாட 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite news |title=அரசு சார்பில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழா: முதல்வருக்கு பாராட்டு |url=https://www.dinamani.com/tamilnadu/2018/oct/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3021771.html |accessdate=7 August 2022 |publisher=தினமணி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சீறாப்புராணம் இயற்றல் ==&lt;br /&gt;
{{main|சீறாப் புராணம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படி &#039;&#039;&#039;உமறுப்புலவர்&#039;&#039;&#039; சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் &#039;&#039;&#039;சீறாப்புராணம்&#039;&#039;&#039; (3 காண்டம் + 92 படலம் + 5027 பாடல்கள்) நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உமறுப்புலவர் &#039;&#039;&#039;முதுமொழிமாலை&#039;&#039;&#039; என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:1642 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1703 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமியத் தமிழறிஞர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>42.104.129.234</name></author>
	</entry>
</feed>