<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>அத்வைதம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T10:27:33Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=210419&amp;oldid=prev</id>
		<title>imported&gt;சா அருணாசலம்: 27.60.174.201ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=210419&amp;oldid=prev"/>
		<updated>2024-10-24T09:53:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;27.60.174.201ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[படிமம்:Shri Gaudapadacharya Statue.jpg|thumb|215px|சங்கரரின் குருவாகிய கௌடபாதர்]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;அத்வைதம்&amp;#039;&amp;#039;&amp;#039; (அ + துவைதம், அத்துவிதம்) ([[IAST]] &amp;#039;&amp;#039;{{IAST|Advaita Vedānta}}&amp;#039;&amp;#039;; [[சமஸ்கிருதம்]]: {{Unicode|अद्वैत वेदान्त}} ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் [[ஈஸ்வரன்|இறைவனின்]] தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும்.  சீவன் ([[ஜீவாத்மா]]) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக [[ஆத்மா|ஆத்மாவாக]] விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.&amp;lt;ref&amp;gt;http://www.advaita-vedanta.org/avhp/ad_faq.html#1 Advaita Vedanta&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 788-820-ம் காலத்தே வாழ்ந்த [[ஆதிசங்கரர்]] (இவரது காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.&amp;lt;ref&amp;gt;இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்&amp;lt;/ref&amp;gt; இவர் [[கேரளம்|கேரளத்திலுள்ள]] (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய [[கௌடபாதர்]] எழுதிய [[மாண்டூக்ய காரிகை]] பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள் ==&lt;br /&gt;
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. &amp;#039;&amp;#039;[[பிரும்மம்]]&amp;#039;&amp;#039; என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப் பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் [[ஜீவாத்மா]], வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் [[பிரம்மம்]], ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. [[உபநிடதம்|உபநிடதங்கள்]] மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்)  [உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்...&lt;br /&gt;
:1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.&lt;br /&gt;
:2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.&lt;br /&gt;
:3. உலகத்தின் உண்மையற்ற நிலை.&lt;br /&gt;
எனக் கூறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சமணம்]], [[பௌத்தம்]], [[துவைதம்]], [[விசிஷ்டாத்வைதம்]] முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே [[மகாவீரர்]] [[புத்தர்]] [[மத்வர்]] [[இராமானுஜர்]] ஆகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
துவைதம் [[விசிஷ்டாத்வைதம்]] மற்றும் அத்வைதம் [[இந்து சமயம்|இந்து சமய]] தத்துவங்களாக இன்று அடையாளங் காணப்படுகின்றன. [[ஆன்மீகம்]] என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1| [[இந்துக் கலைக்களஞ்சியம்]] - தொகுதி 1 - பக்கம் 87]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&lt;br /&gt;
* அத்வைதம், தினமலர் http://temple.dinamalar.com/news_detail.php?id=3473&lt;br /&gt;
{{இந்திய மெய்யியல்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அத்துவிதம்|அத்வைதம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வேதாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;சா அருணாசலம்</name></author>
	</entry>
</feed>