<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88</id>
	<title>அம்மானை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-02T22:42:44Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=100633&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Lingam: &quot;அம்மானை விளையாட்டு &#039;&#039;&#039;அம்மானை&#039;&#039;&#039; என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=100633&amp;oldid=prev"/>
		<updated>2024-07-03T11:33:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Game_Ammanai.jpg&quot; title=&quot;படிமம்:Game Ammanai.jpg&quot;&gt;thumb|200px|right|அம்மானை விளையாட்டு&lt;/a&gt; &amp;#039;&amp;#039;&amp;#039;அம்மானை&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது &lt;a href=&quot;/w/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&quot; title=&quot;தமிழ்&quot;&gt;தமிழ்நாட்டு&lt;/a&gt; மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;table style=&quot;background-color: #fff; color: #202122;&quot; data-mw=&quot;interface&quot;&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;tr class=&quot;diff-title&quot; lang=&quot;ta&quot;&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;← பழைய திருத்தம்&lt;/td&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;11:33, 3 சூலை 2024 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
				&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;4&quot; class=&quot;diff-notice&quot; lang=&quot;ta&quot;&gt;&lt;div class=&quot;mw-diff-empty&quot;&gt;(வேறுபாடு ஏதுமில்லை)&lt;/div&gt;
&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;!-- diff cache key mediawiki:diff:1.41:old-250658:rev-100633 --&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>imported&gt;Lingam</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=250658&amp;oldid=prev</id>
		<title>08:14, 24 நவம்பர் 2020 இல் imported&gt;Ushanandhiniashokkumar</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=250658&amp;oldid=prev"/>
		<updated>2020-11-24T08:14:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[படிமம்:Game Ammanai.jpg|thumb|200px|right|அம்மானை விளையாட்டு]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;அம்மானை&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[தமிழ்|தமிழ்நாட்டு]] மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் [[விளையாட்டு|விளையாட்டாகும்]].  இது விளையாட்டாக இருந்தாலும், [[கவிதை]] புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவர் ஆடுவது [[சங்ககாலம்|சங்ககாலப்]] [[சங்ககாலப் பந்தாட்டம்|பந்து விளையாட்டு]]. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் [[தஞ்சாவூர்|தஞ்சைப்பகுதி]] அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. இணைப்பு [[ஓவியம்|ஓவியமும்]] அவர்கள் விளையாடிய பாங்கைப் காட்டுவதேயாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் பெண்பற் பிள்ளைத்தமிழில் கடை மூன்று பிரிவுகளில் முதலானதாகும். சான்றாக - [[அம்மானை]], நீராடல், [[ஊசல்]] என்பதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்று பேர் விளையாடுவதாலும், அம்மானைப் பாடல் மூன்று பேர் பாடுவதாக அமைந்துள்ளமையாலும் இதனை &amp;#039;&amp;#039;&amp;#039;மூவர் அம்மானை&amp;#039;&amp;#039;&amp;#039; என்றும் குறிப்பிடுகின்றனர். &amp;lt;ref&amp;gt;{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=32}}&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=303}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைப்பு==&lt;br /&gt;
மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, [[அரசன்]] புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு  அம்மானைக் காயை வீசி விளையாடும்  விளையாட்டே “ அம்மானை “ [[விளையாட்டு|விளையாட்டாக]] அமைந்தது. இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயை வீசிப் பிடித்து &amp;#039;அம்மானை&amp;#039; என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி &amp;#039;அம்மானை&amp;#039; என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி  காயை வீசிப் பிடித்து &amp;#039;அம்மானை&amp;#039; என்பாள். இதுவே &amp;#039;அம்மானை&amp;#039; விளையாடும் முறையாகும். சான்றாகத் திருவெங்கைக் கலம்பகத்து  அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை [[பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்]] பாடியுள்ளார்.  அப்பாடலாவது,&lt;br /&gt;
&lt;br /&gt;
முதற்பெண் (பொதுச்செய்தி)&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Cquote|தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளு &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மானவர் தாம் [[ஆண்]][[பெண்]] [[திருநங்கை|அலி]]யலர் காணம்மானை}} &lt;br /&gt;
&lt;br /&gt;
[[வண்டு|வண்டுகள்]] விரும்பும் சோலைகள் சூழ்ந்த [[திருவரங்கம்|திருவரங்கநாதர்]] எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும்&lt;br /&gt;
ஆணும் பெண்ணும் [[திருநங்கை|அலியும்]] அல்லர் அம்மானை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது பெண் (வினா) &lt;br /&gt;
&lt;br /&gt;
{{Cquote|ஆனவர் தாம் [[ஆண்]] [[பெண்]] அலியலரே யாமாகில் &lt;br /&gt;
[[சீதை|சானகியை]] கொள்வரோ தாரமாய் அம்மானை?}}&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறான [[திருவரங்கம்|திருவரங்கர்]] ஆணும் பெண்ணும் [[திருநங்கை|அலியும்]] அல்லாதவரேயானால் [[சீதை|சீதையை]] மணந்தது ஏன்.?&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாவது பெண் (விடை)&lt;br /&gt;
{{Cquote|“தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை”}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சீதை|சீதையை]] மணந்ததும் ஒரு சாபத்தால்  அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், [[சிவன்|சிவபிரானது]] [[வில்|வில்லால்]] என்னும் இருபொருள் பட விடை கூறி  அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சிலப்பதிகாரத்தில்  அம்மானை==&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி.2 ஆம் நூற்றாண்டில் அம்மானை முதன் முதலாக [[இலக்கியம்|இலக்கிய வடிவம்]] பெற்றது. நாட்டார் [[வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி இலக்கியத்தை]] முதன்முதலில் இலக்கியத்தில் பதிவு செய்த இளங்கோவடிகளே அம்மானையையும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வாழ்த்துக் காதையில் &amp;#039;அம்மானை வரி&amp;#039; என்ற பகுதியில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளது. இப்பாடல்களில் [[சோழர்|சோழ மன்னர்கள்]], [[மனுநீதிச் சோழன்]], [[கரிகால் சோழன்]], [[சிபிச் சக்கரவர்த்தி|சிபி மன்னன்]], [[தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்]] ஆகியோரின் அருஞ் செயல்களைப் பாடி அவர்களை அடைய வேண்டும் என்று மூவர், [[சோழர்|சோழர்களின்]] தலைநகரான [[பூம்புகார்]] நகரைப் பாடுவதாக அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மாணிக்கவாசகரின் திருவம்மானை==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[மாணிக்கவாசகர்]] அருளிச் செய்த  அம்மானைப் பாட்டு [[திருவாசகம்|திருவாசகத்தின்]] ஒரு பகுதியாக &amp;#039;திருவம்மானை&amp;#039; என்று விளங்குகிறது. இது இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடி, ஆடிய  அம்மானையாதலால் &amp;#039;திரு&amp;#039; என்று அடைமொழி கூட்டி திருவம்மானை எனப்பட்டது. இப்பாட்டு பலர் நின்று தத்தம் முறை வரும்போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருக்கின்றது. எனவே இவ்விளையாட்டில் மூவர் என்ற வரையறையின்றி சூழ்நிலைக்கேற்ப எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாமெனக் கொள்ளலாம். [[மாணிக்கவாசகர்]], [[அரசன்]], வள்ளல்களன்றி இறைவன் அருளை வேண்டி  அம்மானையாகப் பாடியுள்ள முறை பிற்காலத்தில் [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களாகப்]] பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[குமரகுருபரர்]] இவ்வம்மானைப் பாடல்களைத் தாம் பாடிய [[மதுரைக் கலம்பகம்]], [[காசிக் கலம்பகம்]] ஆகிய நூல்களில் ஒரு [[கலம்பகம் (இலக்கியம்)|கலம்பக]] உறுப்பாக வைத்துப் பாடியுள்ளனர். [[குமரகுருபரர்]] தாம் பாடிய [[மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்|மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்]] மீனாட்சியம்மையின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பத்து  அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கிய வரலாற்றுச் சான்றுகள்==&lt;br /&gt;
கி.பி.1640 ஆம் ஆண்டைச் சேர்ந்த இராமப்பய்யன் அம்மானை மூலம்	நாயக்கர் வரலாற்றை அறிய முடிகிறது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/courses/diploma/a071/a0714/html/a07143l6.htm தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி]&amp;lt;/ref&amp;gt; [[கிறிஸ்தவம்|கிறித்துவத்]] [[தமிழ்|தமிழ்த்]] தொண்டரான [[வீரமாமுனிவர்]] &amp;#039;கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை&amp;#039; என்ற நூலையும், [[இஸ்லாம்|இசுலாமியத்]] தமிழ்த் தொண்டரான [[உமறுப்புலவர்]] மகன் கவிக்களஞ்சியப் புலவர் &amp;#039;அம்மானை&amp;#039; என்ற நூலையும், [[சையத் மீராப் புலவர்]] காலிப் அலியைத் தலைவனாகக் கொண்டு &amp;#039;பரத்தியர் அம்மானை&amp;#039; என்ற நூலையும் பாடியிருக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புகழேந்தி &amp;lt;ref&amp;gt;15ஆம் நூற்றாண்டு&amp;lt;/ref&amp;gt; பாடிய அம்மானைப் பாடல்==&lt;br /&gt;
* செப்பலோசை என்னும் [[வெண்பா]] ஓசை குன்றாமலும், குன்றிய கலிநடையிலும் நாற்சீர் அடிகளால் எளிய தமிழில் எழுதப்பட்ட பாடல்கள்.&lt;br /&gt;
எடுத்துக்காட்டு&lt;br /&gt;
::செப்பலோசை நடை&lt;br /&gt;
:வெந்தசோ றுண்டு விதமறியாப் பஞ்சவர்கள்&lt;br /&gt;
:பச்சிலையும் காய்கனியும் பாத்துண்ணும் பஞ்சவர்கள் &amp;lt;ref&amp;gt;பஞ்சபாண்டவர் வனவாசம்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
:சித்திரைக்குச் சித்திரையில் சீரார் பவுரணையில்&lt;br /&gt;
:விரதமது தானிருந்து வெண்பட்டுத் தானுடுத்தி &amp;lt;ref&amp;gt;சித்திரபுத்திர நாயனார் கதை&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
::கலி என்னும் துள்ளலோசை நடை&lt;br /&gt;
:அழகில் மதனரடி அரிவையர்க்கு மணவாளர்&lt;br /&gt;
:அருச்சுனரைப் பார்த்தாலே அருங்களைகள் தீர்ந்துவிடும் &amp;lt;ref&amp;gt;அல்லியரசாணி மாலை&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதனையும் பார்க்க==&lt;br /&gt;
:[[தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வாய்மொழி இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Ushanandhiniashokkumar</name></author>
	</entry>
</feed>