<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88</id>
	<title>உத்தர கீதை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-05T09:42:28Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88&amp;diff=289461&amp;oldid=prev</id>
		<title>imported&gt;NeechalBOT: சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88&amp;diff=289461&amp;oldid=prev"/>
		<updated>2024-12-13T03:31:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Unreferenced}}&lt;br /&gt;
கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த [[பகவத் கீதை]]யைத் தவிர [[உத்தவ கீதை]], [[ஹம்ச கீதை]], [[பிட்சு கீதை]], [[இராம கீதை]] போன்று பல கீதைகள் இந்துசமய நூல்களில் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் உத்தரகீதை. இதுவும் கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னதுதான். ஆனால் இது [[மகாபாரதப்போர்]] முடிந்து பாண்டவர்கள் அரசாண்டுகொண்டிருந்தபோது, அர்ஜுனன் திரும்பவும் கேட்கும் கேள்விகளுக்கு  விடையாக கண்ணன் உபதேசித்த நூல். &lt;br /&gt;
&lt;br /&gt;
==நூல்==&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நூல் [[மகாபாரத]]த்தில் அடங்கியதாயினும் அச்சிடப்பட்ட எந்தப்பதிப்பிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சென்னை, மும்பை முதலிய நகரங்களில் சில நூல்நிலையங்களில் அச்சிடப்பட்டதாகவும், கையெழுத்து பிரதியாகவும், சுவடிகளிலும் காணப்படுகிறது. இது  மூன்று அத்தியாயங்களில் 119  வடமொழி சுலோகங்கள் கொண்டது.&lt;br /&gt;
[[உத்தவ கீதை]]யென்று வேறொன்று உள்ளது.  [[உத்தவர்]] கிருஷ்ணரிண் சிற்றப்பா மகனாவார் அவருக்கு வடமதுரையில் உள்ள கோவர்தன் மலையில் உபதேசம் வழங்கப்பட்டதையே உத்தவ கீதையாக கருதப்படுகிறது. அது வேறு,  உத்தர கீதை வேறு. &amp;#039;உத்தர&amp;#039; என்றால், பின்னால் வருவது.  மகாபாரதப் போர்க்களத்தில் சொல்லப்பட்டதற்குப் பின்னால் வெகு காலத்திற்குப் பிறகு அதே அர்ஜுனனுக்கு சொல்லப்பட்ட கீதை  உத்தர கீதை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==முதல் அத்தியாயம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் அத்தியாயத்திலுள்ள 56 சுலோகத்தில் உள்ள கருத்துக்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
:* [[ஓம்]] என்ற [[பிரணவ மந்திரம்]] உபாசனை.&lt;br /&gt;
:* தியான முறை&lt;br /&gt;
:* ஆன்மதத்துவத்தை உணர்ந்தறிந்தவனுக்கு செய்யவேண்டியதொன்றுமில்லை.&lt;br /&gt;
:* தத்துவஞானிகளுடைய இலக்கணம்&lt;br /&gt;
:* பிந்து, நாதம், கலை&lt;br /&gt;
:* முயற்சிகள் எதுவரை?&lt;br /&gt;
&lt;br /&gt;
==இரண்டாவது அத்தியாயக் கருத்துக்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது அத்தியாயத்தில் 46 சுலோகங்கள் உள்ளன. அவைகளில் உள்ள கருத்துக்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
:* பரமனுடன் இரண்ட்றக்கலத்தல் யாது?&lt;br /&gt;
:* ஞானியின் முக்திநிலை&lt;br /&gt;
:* இளா, பிங்களா, சுஷும்னா நாடிகள்&lt;br /&gt;
:* உலகமனைத்தும் உடலில் உள்ளது&lt;br /&gt;
:* அவைகளின் லயம்&lt;br /&gt;
:* உடல் வேறுபடினும் [[ஆன்மா]] ஒன்றே&lt;br /&gt;
&lt;br /&gt;
==முடிவு==&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மவிசாரம் (ஆன்மாவைப் பற்றிய உள்வினவல்) ஒன்றே வழி. கல்வி அறிவு [[பிரம்மம்|பிரஹ்ம]] உபாசனத்திற்கு (மெய்யறிவிற்கு) இடையூறே. யோகநிலையை அடைய விரும்பும் யோகி இடையில் ஏற்படும் யோகசித்திகளை விரும்பாது பிரஹ்மத்திலேயே நிலைக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஒரு சுலோகம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
:: அனந்த சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம் அல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னாஹ் /&lt;br /&gt;
:: யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவம்புமிஸ்ரம் //&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: விவேகியான யோகி நூல்களனைத்திலும் சாரமான அத்யாத்மநூல்களையே எடுத்துக்கொள்ளவேண்டும். சாஸ்திரங்கள் எல்லையில்லாதவை. அறிய்வேண்டியவை கடலளவு. காலமோ குறைவு. இடையூறுகள் பல. அதனால் அன்னப்பறவை எவ்விதம் நீரோடு கலந்திருப்பினும் பாலை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறதோ அதுபோல் சாஸ்திரங்களை நன்கு கடைந்து எடுத்து சாரத்தை மட்டும் ஏற்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==துணைநூல்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
*உத்தரகீதை. தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீராஜகோபால சர்மா.  &amp;#039;அண்ணா&amp;#039; எழுதிய ஆங்கில கருத்துரையுடன் கூடியது. ஸ்ரீராம கோசஸ்தானம், 54, அப்பர்சுவாமி கோயில் தெரு. சென்னை 4. 1962&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு: இந்து சமய நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;NeechalBOT</name></author>
	</entry>
</feed>