<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>கமகம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T06:16:32Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=314548&amp;oldid=prev</id>
		<title>18:42, 27 செப்டெம்பர் 2021 இல் imported&gt;Krishnamurthy GovindaReddy</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=314548&amp;oldid=prev"/>
		<updated>2021-09-27T18:42:50Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;கமகம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[கருநாடக இசை]]யில் இசையொலிகளுக்கு அழகூட்டும் &amp;#039;&amp;#039;ஒலி அசைவுகள்&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;அலைவுகள்&amp;#039;&amp;#039; ஆகும். இதனைப் பழந்தமிழில் &amp;#039;&amp;#039;&amp;#039;உள்ளோசைகள்&amp;#039;&amp;#039;&amp;#039; என அழைத்தனர். [[சுரம்|சுரங்களைப்]] பாடும்போது அல்லது [[இசைக்கருவி]]களில் வாசிக்கும்போது இனிமையும் அழகுணர்வும் கூடுவதற்குச் சில குறிப்பிட்ட இடங்களில் தக்க ஒலி அசைவுகள் உண்டாக்குதலைக் கமகம் என்பர். இராகங்களின் சிறப்பு இயல்புகளைக் காட்ட இக்கமக அசைவுகள் மிகவும் இன்றியமையாதவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பழந்தமிழ் இலக்கியங்களில் கமகம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
கமகங்களில் பல வகைகள் உள்ளன. பழந்தமிழில் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] கூறியபடி இவை எட்டு வகையாகும். அவையாவன &amp;#039;&amp;#039;வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை&amp;#039;&amp;#039; என்பன.&lt;br /&gt;
&lt;br /&gt;
:வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்&lt;br /&gt;
:சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்&lt;br /&gt;
:ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த&lt;br /&gt;
:பட்ட வகைதன் செவியின் ஓர்த்த&lt;br /&gt;
:(சிலப்.17, கானல் வரி-12-6)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பிங்கல நிகண்டு]] உள்ளோசைகள் ஆறு என்று கூறுகின்றது. அவையாவன:&lt;br /&gt;
:முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் &lt;br /&gt;
:விழைவும் நுணக்கமும் உள்ளோசை என்ப (பிங்கலம் 1436)&lt;br /&gt;
&lt;br /&gt;
பிங்கல நிகண்டில் கூறிய &amp;#039;&amp;#039;ஞெளிர்&amp;#039;&amp;#039; என்பது ஏங்குதல் இரங்குதல் போன்று ஒலிப்பது ஆகும். &amp;#039;&amp;#039;தெளிர்&amp;#039;&amp;#039; என்பது தற்காலத்தில் ரவை என்று அழைக்கப்படுகின்றது. &amp;lt;ref&amp;gt;முனைவர் சுந்தரம், வீ. ப. கா., &amp;#039;&amp;#039;பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்&amp;#039;&amp;#039;, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், [[1986]].&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கமகங்களின் வகைகள்==&lt;br /&gt;
கமகம் என்பது 15 வகைப்படும் என்றும் அவைகளுக்கு மாத்திரை அளவு உண்டு என்றும் &amp;#039;&amp;#039;சங்கீத ரத்னாகரம்&amp;#039;&amp;#039; என்ற நூலில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த &amp;#039;&amp;#039;சாரங்கதேவர்&amp;#039;&amp;#039; குறிப்பிடுகிறார். அனுபவத்தில் பார்த்தால் எந்த கமகத்தையும் 1/4, 1/2 மாத்திரைக்கு உபயோகிப்பது சாத்தியமில்லை. வாய்ப்பாட்டில் குரல் வளத்திற்கும், இசைத் திறமைக்கும ஏற்றவாறு கமக அழகுகளைக் கூட்டிப் பாட முடியும். [[வீணை]], [[வயலின்]] முதலிய இசைககருவிகளில் கமகங்களை (உள்ளோசைகளை)ப் பயன்படுத்தி இசைப்பதைப் பார்க்க முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிற்காலத்தில் 10 வகையான கமகங்களே பயன்படுத்தப் படுகின்றன. [[சென்னை]]யில் இருந்த சின்னசாமி முதலியார் அவர்கள் ஊக்குவித்தபடி [[முத்துசுவாமி தீட்சதர்|முத்துசுவாமி தீட்சதரின்]] தம்பி பாலுசாமி அவர்களின் பெயரரான [[சுப்பராம தீட்சதர்]] அவர்கள் 10 வகையான கமகங்களை (உள்ளோசைகளை) சீரமைத்து [[1904]] இல் புத்தகமாக வெளியிட்டார். அக் கமகங்களாவன: &amp;#039;&amp;#039;கம்பிதம், ஸ்புரிதம், பிரத்யாகதம்,  நொக்கு, ரவை, கண்டிப்பு, வலி, ஏற்றஜாரு, இறக்கஜாரு ஒடுக்கல், ஒரிகை&amp;#039;&amp;#039; என்பனவாகும். இவையன்றியும் பிற பெயர்களும் வழங்குகின்றன. கம்பிதம் என்பதைத் தமிழில் கம்பலை (நடுக்கம்) என்பர் (பிங்கல நிகண்டு 1441).&lt;br /&gt;
&lt;br /&gt;
==இன்று வகைப்படுத்தப்பட்டுப் பயன்படும் கமகங்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
# ஆரோகண கமகம்: [[ஆரோகணம்|ஆரோகண]] வரிசையில் அமைந்துள்ள ஸ்வரக்கோர்வைகளில் அசைவினால் தோன்றுவது &amp;#039;&amp;#039;ஆரோகண கமகம்&amp;#039;&amp;#039; (ஏற்றஜாரு ஒடுக்கல்) ஆகும்.&lt;br /&gt;
#* உ-ம் : ஸ ரி க ம ப த நி ஸ்&lt;br /&gt;
# அவரோகண கமகம்: [[அவரோகணம்|அவரோகண]] முறையில் அமைந்துள்ள ஸ்வரக்கோர்வைகளின் அசைவினால் தோன்றுவது &amp;#039;&amp;#039;அவரோகண கமகம்&amp;#039;&amp;#039; (இறக்கஜாரு ஒடுக்கல்) ஆகும்.&lt;br /&gt;
#* உ-ம் : ஸ் நி த ப ம க ரி ஸ&lt;br /&gt;
# டாலு: பாடும் போதோ அல்லது இசைக்கருவிகளில் வாசிக்கும் போதோ கீழ் ஸ்தானத்திலிருந்து கொண்டே மேல் ஸ்தானத்தை எழுப்பும் போது உண்டாகும் கமகம் &amp;#039;&amp;#039;டாலு&amp;#039;&amp;#039; எனப்படும். (இது &amp;#039;&amp;#039;வலி&amp;#039;&amp;#039; என்னும் கமகத்திற்கு ஒத்தது)&lt;br /&gt;
#* உ-ம் : ஸகா - ஸமா - ஸபா&lt;br /&gt;
# ஸ்புரித கமகம்: ஜண்டை ஸ்வரங்களில் வரும் முதல் ஸ்வரத்தை சாதாரணமாகவும் இரண்டாவதாக வரும் ஸ்வரத்தை அடித்து பிடிக்கையில் வரும் கமகம் &amp;#039;&amp;#039;ஸ்புரித கமகம்&amp;#039;&amp;#039; எனப்படும். (இதனை தமிழில் &amp;#039;&amp;#039;அடுக்கல்&amp;#039;&amp;#039; என்பர். தமிழில் நான்கடுக்கு, ஆறடக்கு முதலியனவும் இரட்டை அடுக்கல்களாகவே வரும்)&lt;br /&gt;
#* உ-ம் : ஸஸ ரிரி கக மம&lt;br /&gt;
# கம்பித கமகம்: ஸ்வரங்களை தக்க இடங்களில் தக்க அளவில் கம்பீரமாக அழுத்தமாக அசைத்துப் பாடும் போது ஏற்படும் கமகம் &amp;#039;&amp;#039;கம்பித கமகம்&amp;#039;&amp;#039; ஆகும். (இதனைத் தமிழில் &amp;#039;&amp;#039;கம்பலை&amp;#039;&amp;#039; என்பர்)&lt;br /&gt;
#* உ-ம் : [[தன்யாஸி]] இராகத்தில் ஸகாமபநிஸ், இதில் &amp;#039;க&amp;#039; வும், &amp;#039;நி&amp;#039; யும் கம்பீரமாக அழுத்திப் பாடப்படுகிறது. அதே போல் [[அடாணா]]வில் ஸ்நிதாபமகாரிஸ. இதில் &amp;#039;த&amp;#039; வும், &amp;#039;க&amp;#039; வும் அழுத்திப் பாடப்படுகிறது.&lt;br /&gt;
# ஆகத கமகம்: ஸரி - ரிக - கம - மப போன்ற ஸ்வரக்கோர்வைகளை தக்க முறையில் அசைத்துப் பாடுதல் &amp;#039;&amp;#039;ஆகத கமகம்&amp;#039;&amp;#039; ஆகும்.&lt;br /&gt;
# பிரத்தியாகத கமகம்: ஸ்நி - நித - தப - பம போன்ற ஸ்வரக்கோர்வைகளைத் தக்க முறையில் அசைத்துப் பாடுதல் &amp;#039;&amp;#039;பிரத்தியாகத கமகம்&amp;#039;&amp;#039; ஆகும்.&lt;br /&gt;
# திரிபுச்சம்: ஸ்வரங்களை ஸஸஸ ரிரிரி ககக மமம என்று மும்மூன்று ஸ்வர அமைப்பு முறையில் பிடிக்கும் போது ஏற்படும் கமகம் &amp;#039;&amp;#039;திரிபுச்சம்&amp;#039;&amp;#039; ஆகும். (தமிழில் &amp;#039;&amp;#039;மூவடுக்கல்&amp;#039;&amp;#039;)&lt;br /&gt;
# ஆந்தோளித கமகம்: ஸரிஸதாத, ஸரிஸபாபா என்ற முறையில் [[வீணை]] போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் போது கீழுள்ள ஒரு ஸ்வரத்தின் மேல் சிறிது நின்று பின் தந்தியை இழுத்தோ அல்லது விரலை நகர்த்திச் சென்றோ மேல் ஸ்வரத்தைப் பிடிக்கும் போது ஏற்படும் கமகம் &amp;#039;&amp;#039;ஆந்தோளித கமகம்&amp;#039;&amp;#039; ஆகும்.&lt;br /&gt;
# மூர்ச்சனை கமகம்: ஸ்வரக் கோர்வையிலுள்ள ஸ்வரங்களை மிகத் துரிதமாக பிடித்து ஒவ்வொரு ஸ்வரக்கோர்வையின் கடைசி ஸ்வரத்தின் மேல் நிற்கும் போது ஏற்படும் கமகம் &amp;#039;&amp;#039;மூர்ச்சனை கமகம்&amp;#039;&amp;#039; ஆகும்.&lt;br /&gt;
#* உ-ம் : ஸரிகமபதநீ - ரிகமபதநிஸா - கமபதநிஸரீ&lt;br /&gt;
&lt;br /&gt;
==உசாத்துணை==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கருநாடக இசை]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Krishnamurthy GovindaReddy</name></author>
	</entry>
</feed>