<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>கருவூலம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-04T11:49:30Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=317404&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Nanjil Bala: கட்டுரையை இணைத்து மேம்படுத்துதல்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=317404&amp;oldid=prev"/>
		<updated>2024-07-13T06:25:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;கட்டுரையை இணைத்து மேம்படுத்துதல்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;கருவூலம்&amp;#039;&amp;#039;&amp;#039; (ஆங்கிலம்: [[:en:Treasury|Treasury]]) என்னும் சொல் அரசு-நிதியைப் பாதுகாத்து வழங்கும் இடம் ஆகும். இக்காலத்தில் இது அரசு [[நாணயம்|நாணயங்களைப்]] பேணும் இடமாகத் திகழ்கிறது. இவை தலைமைக் கருவூலம், கிளைக்கருவூலம் என்னும் அமைப்புகளில் இயங்கிவருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பண்டைக்காலக் கருவூலங்கள்==&lt;br /&gt;
பண்டைக்காலங்களில் அரசர்கள் தங்கள் செல்வங்களை நிதியறைகளில் சேமித்து வைத்தனர். அன்னியர்கள் படையெடுத்து வரும் போது இந்த நிதியறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செல்வங்களைக் கொள்ளையடித்துச் செல்வர். ஆகவே இந்த நிதியறைகள் மிகுந்த பாதுகாப்புடன் வலிமையானதாக அமைக்கப்பட்டு இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சங்ககாலக் கருவூலங்கள்==&lt;br /&gt;
தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் இருந்த கருவூலங்கள் பற்றிய செய்திகளைச் [[சங்க இலக்கியம்|சங்கநூல்கள்]] குறிப்பிடுகின்றன. &lt;br /&gt;
* மாந்தை - சேர அரசர்களின் கருவூலம் &amp;#039;&amp;#039;&amp;#039;[[மாந்தை (சேரர் துறைமுகம்)|மரந்தை அல்லது மாந்தை]]&amp;#039;&amp;#039;&amp;#039; என்னும் துறைமுக நகரத்தில் இருந்தது. [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] கடம்பர்களை வென்று கொண்டுவந்த செல்வத்தையும், இமயம் வரை வென்றதால் அடிபணிந்த மன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைச் செல்வத்தையும் இங்குப் பாதுகாத்தான்.&amp;lt;ref&amp;gt;சேரலாதன் கடம்பு அறுத்து, இமயத்து வில் பொறித்து, மரந்தை முற்றத்து ஒன்னார் பணிந்து திறை தந்த … நன்கலம் பொன் செய் பாவை வயிரமொடு நிலம் தினத் துறந்த நிதியம் – அகநானூறு 127, நிலம் தினத் துறந்த நிதியம் – மலைபடுகடாம் 575&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* குடந்தை - [[சோழர்]]களில் &amp;#039;கொற்றச் சோழர்&amp;#039; எனப் போற்றப்பட்டவர்கள் &amp;#039;&amp;#039;&amp;#039;[[கும்பகோணம்|குடந்தை]]&amp;#039;&amp;#039;&amp;#039; நகரில் அரசுச் செல்வத்தைப் பாதுகாத்தனர்.&amp;lt;ref&amp;gt;கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியம் - அகம் 60&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* காவிரிப்பூம்பட்டினம் - [[புகார்]]த் துறைமுகத்தில் அரசு விருந்தினர்களைப் பேணுவதற்காகச் அரசுச்செல்வம் வைக்கப்பட்டிருந்தது.&amp;lt;ref&amp;gt;காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன செழுநகர் நல்விருந்து அயர்மார் ஏமுற விழுநிதி - அகநானூறு 205&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* [[மருங்கூர்ப் பட்டினம்]] என்னும் துறைமுகப் பட்டினத்தில் பாண்டியர் தம் கருவூலத்தை வைத்திருந்தனர்.&amp;lt;ref&amp;gt;ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் … மருங்கூர்ப்பட்டினம் – அகநானூறு 227&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* [[நன்மாவிலங்கை|மாவிலங்கை]] என்னும் தன் தலைநகரில் [[நல்லியக்கோடன்]] என்னும் வள்ளல்-அரசன் தன் கருவூலத்தை வைத்திருந்தான்.&amp;lt;ref&amp;gt;வயவர் தந்த வான்கேழ் நிதியம் … பாண்டிலில் ஏற்றித் தருவான் – சிறுபாணாற்றுப்படை 249&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* [[பாடலி]] என்னும் நகரில் [[நந்தர்|நந்த]] அரசர்கள் [[கங்கை]] ஆற்று நீருக்கடியில் தம் கருவூலத்தை வைத்திருந்தனர்.&amp;lt;ref&amp;gt;நந்தர் சீர்மிகு பாடலி குழீஇ கங்கை நீர்முதல் கரந்த நிதியம் – அகம் 265&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* [[செங்கண்மா]] – அரசன் [[செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்]] தன் கருவூலத்தை அவனது தலைநகரில் வைத்திருந்தான்.&amp;lt;ref&amp;gt;நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பு – அகநானூறு 378, செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் ஊர் – மலைபடுகடாம் 478&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாற்றில் கருவூல அமைப்பு==&lt;br /&gt;
கொளடில்யம் எனும் நூல் கருவூலம் (நிதியறை) அமைக்க வேண்டிய அமைப்பைக் குறிப்பிடுகிறது. அதன்படி,&lt;br /&gt;
# நிதியறைகள் சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும். &lt;br /&gt;
#அதன் நாற்புறமும் நீர்க்கசிவில்லாதபடி பள்ளம் தோண்டி இருக்க வேண்டும்.  &lt;br /&gt;
#அதன் நாற்புறமும் அடிப்பரப்பும் பெரிய கற்களையும்,பருத்து வயிரம் ஏறிய மரங்களாகிய பஞ்சரத்தையும்  &lt;br /&gt;
#நிலமட்டத்தோடு ஒத்த மூன்று தளங்களையும் பலவகை உள்ளறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.மூன்று தளங்களில் நீரும், கல்லும் விரவி இறுக்கப்பட்டு மேல், நடு, கீழ் தளங்களாக இருக்க வேண்டும். &lt;br /&gt;
#பொறிகளால் அமைக்கப்பட்ட ஏணிகளையும், தெய்வப்படிவம் அமைந்த கதவினையும் உடையதாக நிலவறை அமைதல் வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அடிக்குறிப்பு ==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பொருளாதார முறைமைகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Nanjil Bala</name></author>
	</entry>
</feed>