<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF</id>
	<title>சகுனி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-02T21:58:55Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&amp;diff=349220&amp;oldid=prev</id>
		<title>imported&gt;தமிழ்க்குரிசில்: பிழை திருத்தம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&amp;diff=349220&amp;oldid=prev"/>
		<updated>2025-08-01T14:54:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;பிழை திருத்தம்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;சகுனி&amp;#039;&amp;#039;&amp;#039; ([[சமசுகிருதம்]]: &amp;#039;&amp;#039;शकुनि&amp;#039;&amp;#039;) ([[ஆங்கிலம்]]: &amp;#039;&amp;#039;Shakuni&amp;#039;&amp;#039;) மகாபாரதக் கதையில் வரும் [[கௌரவர்]]களின் தாயான [[காந்தாரி]]யின் அண்ணன் ஆவார். இவர் தனது மருமகனான [[துரியோதனன்|துரியோதனனிடம்]] மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் [[பாண்டவர்]]களுடன் சூதாடி, அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். சகுனியின் தந்தை [[சுபலன்]]. சகுனியின் மகன் [[உல்லூகன்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போர்க் களத்தில்]], [[சகாதேவன்|சகாதேவனால்]] சகுனி கொல்லப்பட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சகுனியின் சகோதரர்கள் வருஷன், அசலன்.&amp;lt;ref&amp;gt;ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம்;779&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== காந்தாரி - ஓர் விதவை ==&lt;br /&gt;
காந்தார நாட்டு மன்னன் [[சுபலன்]] இவரின் கடைசி மகன்தான் சகுனி. [[காந்தாரி]] திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர பீஷ்மர், ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும், அதனால் [[காந்தாரி]]யை ஒரு ஆட்டுக்கடாவுக்கு &amp;lt;ref name = &amp;quot;one&amp;quot;&amp;gt;ஜைன மகா பாரதம்&amp;lt;/ref&amp;gt; மணம் செய்வித்தும், பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள், நுணுக்கமாய் அன்றைய சாத்திரப்படி பார்த்தால் [[காந்தாரி]] ஒரு விதவை ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சிறையில் ===   &lt;br /&gt;
ஆடு மட்டும் பலி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் [[கௌரவர்]]களின் தந்தை ஆட்டுகடாவாகியிருக்கும் என்று சோதிடர்கள் கூறியது [[பீஷ்மர்]]க்கு அதிக கோபத்தைத் தூண்டியது. &amp;quot;என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான், ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன், உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே, சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்&amp;quot; என்று சுவலனையும், அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார். ஒரு குடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த [[பீஷ்மர்]] தினமும் ஒரு கைப்பிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார். &amp;quot;ஒரு குடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த [[பீஷ்மர்]] அந்த நியதியை மீறாமல் சிறிது உணவே தருகிறார். இன்னும் கொஞ்சம் உணவை கேட்பதும் நமக்கு அதர்மம் எனவே பட்டினி கிடந்து தான் மடியவேண்டும். உணவு தரப்படும்போது மகளின் வீட்டிலிருந்து ஓடுவதும்&amp;quot; அதர்மம் என்று [[சுபலன்]] அறிந்திருந்தார். நாட்கள் செல்லச்செல்ல நிலைமை மோசமாகியது, சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது, [[சுபலன்]] ஒரு யோசனை சொன்னான் &amp;quot;நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து, இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்&amp;quot; இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்.&amp;lt;ref name = &amp;quot;two&amp;quot;&amp;gt;Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சகுனி தோற்றம் ===&lt;br /&gt;
வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், &amp;quot;இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வொரு முறை நொண்டும் போதும் [[கௌரவர்]] செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே&amp;quot; என்றார். சகுனிக்கு [[தாயம்|தாயத்தின்]] மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் &amp;quot;நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பியபடியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்&amp;quot; என்றார். சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்துப் போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் [[பீஷ்மர்|பீஷ்மரின்]] கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். [[கௌரவர்|கௌரவர்களின்]] நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் [[பீஷ்மர்]] தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டுக்கொண்டே இருந்தான்.&amp;lt;ref name=&amp;quot;two&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சகுனியின் திட்டம் ==&lt;br /&gt;
[[பாண்டவர்கள்|பாண்டவர்களின்]] [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்திலிருந்து]] அவமானப்பட்டு திரும்பிய [[துரியோதனன்]] மனமுடைந்துப் போயிருந்தான், பொறாமை எனும் தீ அவனுக்குள் பொங்கி வழிந்தது. அவர்களின் [[நாடு]] என்னுடையதைவிட செல்வமிக்கது, அவர்களின் செல்வாக்கோ மிகப் பெரியது என்ற தாழ்வான மன அழுத்தத்தில் இருந்தான். [[துரியோதனன்|துரியோதனனின்]] மன ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான். அறத்தில் [[தருமர்]] உயர்ந்தவராக இருக்கலாம், ஆனால் அவரிடம் கூட ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம் அவரை சூதாட்டத்திற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது. &amp;quot;உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் தாய ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியுடனும் பாண்டவர்கள் வைத்திருக்கும் எல்லாவற்றையும் உனக்கு பிடுங்கித் தருகிறேன், நீ [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்தின்]] மன்னனாக முடிசூட்டிக்கொள், [[பாண்டவர்]]கள் பிச்சைக்காரர்களாகி நிற்பார்கள்&amp;quot;. இதற்கு [[துரியோதனன்]] இரட்டிப்பு சந்தோசமடைந்தான், ஆனால் தன் மாமன் குரு வம்சத்தையே அழிக்கப் போகிறான் என்பதை உணராத [[துரியோதனன்]].&amp;lt;ref name=&amp;quot;two&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சூதாட்டம் ==&lt;br /&gt;
[[ஹஸ்தினாபுரம்|ஹஸ்தினாபுரத்திலிருந்து]] சூதாட்டப்போட்டிக்கு அழைப்பு வந்தது, அதை ஏற்காவிட்டால் நன்றாக இருக்காது என்றார் [[தருமர்]]. சூதாட்ட அழைப்பு வந்தபோது [[கிருட்டிணன்|கிருஷ்ணன்]] துவாரகையில் [[சிசுபாலன்|சிசுபாலனின்]] சினேகிதர்களான சால்வன் மற்றும் தந்தவக்கிரனுடன் போர்புரிந்து கொண்டுருந்தார். சூதாட்ட நாளன்று [[கிருட்டிணன்|கிருஷ்ணனோ]],[[திரௌபதி|திரௌபதியோ]] தங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று காத்திராமல் சூதாட சென்றார்கள் [[பாண்டவர்]]கள். [[கௌரவர்]] சார்பில் சகுனியும், [[பாண்டவர்]] சார்பில் [[தருமர்|யுதிஷ்டிரனும்]] சூதாடினார்கள். துவக்கத்தில் பணயத்தொகை குறைவாக இருந்தது. சகுனி ஒவ்வொருமுறையும் [[தாயக் கட்டையை]] உருட்டிவிட்டு பார் நான் வென்றுவிட்டேன் என்பார். இழந்ததை எல்லாம் மீட்க வேண்டும் என்ற [[தருமர்|யுதிஷ்டிரனின்]] ஆசையை கிளரிவிட்டு, ஒவ்வொரு தடவையும் &amp;quot;நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்&amp;quot;, என்று [[தருமர்|யுதிஷ்டிரனின்]] விளையாட்டு வேகத்தைக் கூட்டி ஆட்டம் சூடுபிடித்து வரும் வேளையில் &amp;quot;போதும் நிறுத்துங்கள்&amp;quot; பின் வாங்குவதில் அவமானமில்லை, [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுராவை]] மீட்கும்போது 17 முறை [[கிருட்டிணன்|கிருஷ்ணனும்]]  பின் வாங்கியுள்ளார் என்றனர் [[பாண்டவர்]], ஆனால் [[தருமர்]] ஏற்க மறுத்துவிட்டார். [[பீஷ்மர்]], [[விதுரன்]], [[துரோணர்]], [[கிருபர்]] போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுருந்தனர். &amp;quot;இந்த பைத்தியக்கார ஆட்டத்தை நிறுத்துங்கள்&amp;quot; என்றார் [[விதுரன்]]. [[திருதராஷ்டிரன்]] கூடாது, [[தருமர்]] ஒரு மன்னன் என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர் என்றார்.&amp;lt;ref name=&amp;quot;two&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== இழப்பு ==&lt;br /&gt;
[[தருமர்]] சூதாட்டத்தில் தனது ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அனைத்தையும் இழந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதினொராவது ஆட்டத்தில் தன் சகோதரர்கள் ஒவ்வொருவராக பணயம் வைக்க தொடங்கினார். முதலில் [[நகுலன் (மகாபாரதம்)|நகுலன்]], பின் [[சகாதேவன்]], தொடர்ந்து [[பீமன்]], வில்வித்தையில் தேர்ந்த [[அருச்சுனன்]] என எல்லோரையும் இழந்தார். இறுதியில் [[தருமர்]] தன்னையே வைத்து இழந்தார். ஆனால் ஆட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. &amp;quot;[[திரௌபதி]]யை பணயமாக வைக்கப்போகிறேன்&amp;quot; என்றார், மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்தார்கள் [[துரியோதனன்]] புன்னகைத்து பணயத்தை ஏற்றுக்கொண்டார். பதினேழாவது முறையாக சகுனி தாயக்கட்டையை உருட்டினார். &amp;quot;பார் நான்தான் வென்றேன்&amp;quot; என்றார், அனைத்தையும் இழந்து நின்றார் [[தருமர்]]. [[துரியோதனன்]] தம்பி [[துச்சாதனன்|துச்சாதனனை]] அழைத்து [[திரௌபதி|திரௌதியை]] சூதாட்ட மண்டபத்திற்கு வழுக்கட்டாயமாக இழுத்து வரச்செய்து துகிலுரியச் செய்தான். தொடர்ந்து பாண்டவர்களையும் அவ்வாறே செய்ய [[துரியோதனன்]] கட்டளையிட்டான் யாரும் எதுவும் பேசவில்லை, மூத்தவர்கள் பீஷ்மர் உட்பட அனைவரும் அமைதி காத்தனர்.&amp;lt;ref name=&amp;quot;two&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் பாண்டவர்களில் ஒருவரான [[சகாதேவன்|சகாதேவனால்]] [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கொல்லப்பட்டார். சகுனியின் மகன் [[உல்லூகன்]] [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]]வால் கொல்லப்பட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;தமிழ்க்குரிசில்</name></author>
	</entry>
</feed>