<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81</id>
	<title>சால்வ நாடு - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&amp;action=history"/>
	<updated>2026-06-03T08:29:36Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&amp;diff=356244&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Sumathy1959: /* மகாபாரதக் குறிப்புகள் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&amp;diff=356244&amp;oldid=prev"/>
		<updated>2025-04-19T14:56:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;மகாபாரதக் குறிப்புகள்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Image:EpicIndia.jpg|right|thumb|250px|[[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்|இதிகாச கால]] நாடுகள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;சால்வ நாடு&amp;#039;&amp;#039;&amp;#039; (Salwa kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] மேற்கு நாடுகளில் ஒன்றாகும். [[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் சால்வ நாட்டுடன் [[மத்திர நாடு|மத்திர நாடும்]] ஒன்றாக குறிக்கப்பட்டுள்ளது. சால்வ நாட்டின் தலைநகரம் &amp;#039;&amp;#039;சௌபா&amp;#039;&amp;#039;   ஆகும். [[புராணம்|புராணங்களில்]] குறிப்பிடப்படும் சால்வ நாட்டின் இளவரசன் [[சத்தியவான் சாவித்திரி கதை|சத்தியவான்]], மத்திர நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகள் [[சாவித்திரி|சாவித்திரியின்]] கணவன் ஆவான். மகாபாரத [[வன பருவம்|வன பருவத்தில்]], [[சத்தியவான் சாவித்திரி கதை|சத்தியவான் சாவித்திரி வரலாறு]] கூறப்படுகிறது. (3: 291 - 3: 297).&lt;br /&gt;
&lt;br /&gt;
==மகாபாரதக் குறிப்புகள்==&lt;br /&gt;
===மத்திர நாட்டவர்களும், சால்வ நாட்டவர்களும்===&lt;br /&gt;
வேத கால மன்னர் [[புரு]]வின் ஏழு மகன்களில் மூவர் சால்வர்களாகவும்; நால்வர் மத்திரர்களாகப் பிரிந்து நாட்டை பங்கிட்டு ஆண்டதாக மகாபாரதத்தின் [[ஆதி பருவம்|ஆதி பருவத்தில்]] கூறப்பட்டுள்ளது (1:121).&lt;br /&gt;
&lt;br /&gt;
===சால்வ நாட்டு இளவரசனும் பீஷ்மரும்===&lt;br /&gt;
சால்வ நாட்டு இளவரசன் (5:179)  [[காசி நாடு|காசி நாட்டின்]] இளவரசிகளில் ஒருவரான [[அம்பா]]வின் காதலன் ஆவார். [[குரு நாடு|குரு நாட்டின்]] இளவரசன் [[விசித்திரவீரியன்|விசித்ரவீரியனுக்கு]], [[காசி நாடு|காசி நாட்டு]] இளவரசிகளை திருமணம் செய்து வைக்க வேண்டி, சுயம்வர மண்டபத்தில் இருந்த காசி நாட்டு இளவரசிகளான [[அம்பா]], [[அம்பிகை]] மற்றும் [[அம்பாலிகா]] ஆகியவர்களை [[பீஷ்மர்]] தனது தேரில் வைத்து கடத்திச் செல்கையில், சால்வ நாட்டு இளவரசன் தனது காதலியான அம்பாவை மீட்க, பீஷ்மருடன் போரிட்டு தோற்கிறான். அம்பா, சால்வ இளவரசனின் காதலி என அறிந்த பீஷ்மர், அம்பாவை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் சால்வ இளவரசன் அம்பாவை மணக்க மறுத்தான். தன் காதலனை அடைய தடையாக இருந்த பீஷ்மரை அடுத்த பிறவியில் கொல்லச் சபதம் மேற்கொண்டு தீக்குளிக்கிறாள். அம்பா மறுபிறவியில் [[சிகண்டி]]யாகப் பிறந்து, பீஷ்மரைக் கொல்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===சால்வனும் கிருஷ்ணரும்===&lt;br /&gt;
[[தந்தவக்ரன்]] மற்றும் [[உருக்மி]]யின் கூட்டாளியான மற்றொரு சால்வ நாட்டு மன்னர் ஒன்று சேர்ந்து (3:12, 7:11)  [[துவாரகை]] நகரை தாக்க வந்த போது, சால்வன், [[கிருட்டிணன்|கிருட்டிணால்]] கொல்லப்படுகிறான். சால்வ நாட்டு மன்னன் வானில் பறக்கும் சௌபம் எனும் விமானத்தை வைத்திருந்தான் எனக் கூறப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;http://www.harekrsna.com/philosophy/associates/demons/dwarka/salva.htm&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===குருச்சேத்திரப் போரில் சால்வ நாட்டவர்கள்===&lt;br /&gt;
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] சால்வ நாட்டுப் படைகள் [[கௌரவர்]] அணியின் சார்பாக, [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] எதிராகப் போரிட்டனர் (5: 161). சால்வ நாட்டின் வேறு ஒரு இளவரசன், பாண்டவர் அணியில் போரிட்டதாக கூறப்படுகிறது (7: 23).&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதனையும் காண்க==&lt;br /&gt;
[[பரத கண்டம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==உசாத்துணை==&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதத்தில் நாடுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sumathy1959</name></author>
	</entry>
</feed>