<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF</id>
	<title>சைரந்திரி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-05T13:35:51Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF&amp;diff=373113&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Sumathy1959: /* வெளி இணைப்புகள் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF&amp;diff=373113&amp;oldid=prev"/>
		<updated>2024-09-05T21:59:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;வெளி இணைப்புகள்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;சைரந்திரி&amp;#039;&amp;#039;&amp;#039;, [[பாண்டவர்|பாண்டவர்களுடனான]] சூதாட்டத்தில் வென்ற [[கௌரவர்]]கள் விதித்த படி,   [[திரௌபதி]]யுடன் 12 ஆண்டு [[வன பருவம்|வனவாசம்]] முடித்த [[திரௌபதி]] உள்ளிட்ட [[பாண்டவர்]]கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, [[மத்சய நாடு|மத்சய நாட்டின்]] மன்னர் [[விராடன்|விராட அரண்மனையில்]] மாறுவேடத்தில் பணியில் சேர்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திரௌபதி, [[விராடன்|மன்னர் விராடனின்]] பட்டத்து இராணியான [[சுதேஷ்ணை| சுதோஷ்ணைக்கு]] சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக [[திரௌபதி|சைரந்திரி]] எனும் பெயரில் விராட அரண்மனைப் பணியில் சேர்கிறார்.&amp;lt;ref&amp;gt;[http://sacred-texts.com/hin/m04/m04009.htm Virata Parva, Section IX]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==பாண்டவர்களின் மாறுவேடப் பெயர்கள்==&lt;br /&gt;
[[தருமன்|தருமர்]] [[அந்தணர்]] வேடத்தில் [[கங்கன், மகாபாரதம்|கங்கன்]] எனும் பெயரில் [[விராடன்|விராட]] மன்னரின் அரசவை உறுப்பினராகவும் மற்றும் விராடனுடன் சொக்கட்டான் மற்றும் [[சதுரங்கம்]] ஆடும் பணியிலும் சேர்ந்தார். [[அருச்சுனன்]] விராட இளவரசி [[உத்தரை]]க்கு நாட்டியம் கற்றுத் தர  [[பிருகன்னளை]]  எனும் பெயரிலும், [[வீமன்]] அரண்மனை சமையல்காரராக [[வல்லபன்]] எனும் பெயரிலும், [[சகாதேவன்]] விராட நாட்டின் ஆநிரைகளை காக்கும்  பணியில் [[தந்திரிபாலன்]] எனும் பெயரிலும், [[நகுலன்]] குதிரைகளை பராமரிக்கும் [[கிரந்திகன்]] எனும் பெயரிலும், [[மத்சய நாடு|விராட நாட்டு]]  அரண்மனைப் பணிகளில் சேர்ந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சைரந்திரி மீது காமம் கொண்ட கீசகன்==&lt;br /&gt;
[[File:Raja Ravi Varma, Keechaka and Sairandhri, Oleograph.jpg| thumb|[[திரௌபதி|சைரந்திரியை]] அடையத் துடிக்கும் [[கீசகன்]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
விராட இராணி சுதோஷ்ணையின் அண்ணனும், விராடனின் தலைமைப் படைத் தலைவருமான [[கீசகன்]], அரண்மனையின்  அந்தப்புரத்திற்கு சென்ற போது, தனது தங்கை சுதோஷ்ணையின் பணிப்பெண்ணாக இருந்த [[திரௌபதி|சைரந்திரியைக்]] கண்டு, காமம் மிகுதியால் சைரந்திரியை அடைய ஆவல் கொண்டான்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
சைரந்திரி மீதான தனது காமத்தை, கீசகன் இராணி சுதோஷ்ணையிடம் தெரிவிக்க,   சுதோஷ்ணை [[திரௌபதி|சைரந்திரியை]] மது கோப்பையுடன் கீசகனின் மாளிகைக்கு செல்ல ஆணையிட்டாள். கீசகன் மாளிகைக்குச் சென்ற சைரந்திரியை&amp;lt;ref&amp;gt;[http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section15.html கீசகனிடம் சென்றாள் திரௌபதி! - விராட பர்வம் பகுதி 15] &amp;lt;/ref&amp;gt;, கீசகன் காம வெறியுடன் சைரந்திரியின் கையைப் பிடித்து வன்கொடுமை செய்ய முற்பட்ட போது, சைரந்திரி கீசகனின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுத்துத் கொண்டு, விராடனின் அரசவைக்கு ஒடிச் சென்று, கீசகனால் தனக்கு ஏற்பட்ட கொடுமையை எடுத்துரைத்து நீதி கேட்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Draupadi humiliated RRV.jpg| thumb|[[விராடன்|விராட]]  அரசவையில்,  [[விராடன்]] மற்றும்  [[கங்கன், மகாபாரதம்| கங்கன்]] முன்னிலையில் [[திரௌபதி| சைரந்திரி]]யை மானபங்கப்படுத்தும் [[கீசகன்]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசவையில் கூடியிருந்த மன்னர் [[விராடன்]],  சுதோஷ்ணை முதலானவர்கள், கீசகனுக்குப் பயந்து சைரந்திரியின் நிலையைக் கண்டு அமைதி காத்தனர்.  மேலும் அரசவையில் மாறுவேடத்தில் இருந்த [[கங்கன், மகாபாரதம்|கங்கன்]], [[பிருகன்னளை]] மற்றும் [[வல்லபன்|வல்லபனும்]] தாங்கள் வேடதாரிகள் என்பதை மறைக்கும் பொருட்டு சைரந்திரி விடயத்தில் தலையிடாமல் அமைதி காத்தனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
கீசகனை கண்டு விராட மன்னரே பயந்த நிலையில், அரண்மனைச் சமையல் அறையில் [[வல்லபன்]] பெயரில் மாறுவேடத்தில் இருந்த [[வீமன்|வீமனை]] அணுகிய [[திரௌபதி|சைரந்திரி]], கீசகனால் தனது கற்புக்கு ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து காக்க, கீசகனைக் கொல்லும் படி கூறினாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கீசகன் அழிவு==&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கீசகன் கடுமையாக ஆணையிட்டதின் பேரில், [[திரௌபதி|சைரந்திரி]] கீசகனின் காமப் பசியைப் போக்க, கீசகனின் அரண்மனைக்கு நடு இரவில் வருவதாக வாக்களித்தாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
சைரந்திரியும், [[வீமன்|வல்லாளனும்]] வகுத்த திட்டப்படி, நடு இரவில் கீசகனின் அரண்மனைக்கு சென்று, அங்கிருந்த கட்டிலில் பெண் வேடத்தில் [[வல்லபன்]] படுத்துக் கொண்டான். &lt;br /&gt;
&lt;br /&gt;
காமபசியுடன் சைரந்திரியை அனுபவிக்கும் வெறியுடன் வந்த கீசகன், கட்டிலில் பெண் வேடத்தில் படுத்திருந்த வல்லபனைத் தொட்டான். உடனே வல்லபவன் வெகுண்டெழுந்து, கீசகனின் கை, கால்களை முறித்துக் கொன்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சைரந்திரியின் கந்தர்வ கணவர்கள்==&lt;br /&gt;
யாராலும் வெல்ல முடியாத கீசகனை, சைரந்திரியைக் காக்கும் ஐந்து [[கந்தர்வர்|கந்தர்வக் கணவர்கள்]] தான் கொன்றதாக விராட நாட்டில் வதந்தி பரவியது. கீசகன் இறந்தான் என்ற செய்தி கேட்டு வந்த கீசகனின் தம்பியர்கள், கீசகன் அடைய விரும்பிய சைரந்திரியையும், கீசகனின் சடலத்துடன் வைத்து தீ மூட்ட முடிவு செய்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இச்செய்தி அறிந்த [[வல்லபன்]],  கீசகன் சவ உடலுடன் இழுத்துச் செல்லப்பட்ட சைரந்திரியை, சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் மறித்து, கீசகனின் தம்பியர்களை கொன்று, சைரந்திரியை மீட்டு [[விராடன்|விராட]] அரண்மனைக்கு அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;
  &lt;br /&gt;
==இதனையும் காண்க==&lt;br /&gt;
*[[விராட பருவம்]]&lt;br /&gt;
* [[விராட பருவம் (திரைப்படம்)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sumathy1959</name></author>
	</entry>
</feed>