<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88</id>
	<title>தெய்வயானை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-04T00:48:10Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=403357&amp;oldid=prev</id>
		<title>07:03, 30 அக்டோபர் 2013 இல் imported&gt;Sengai Podhuvan</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=403357&amp;oldid=prev"/>
		<updated>2013-10-30T07:03:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;தெய்வயானை&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;lt;ref&amp;gt;{{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= =[[ கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}} உ.வே.சா. முன்னுரை&amp;lt;/ref&amp;gt; என்பது காட்டு யானை ஒன்றுக்கு இடப்பட்டிருந்த பெயர். &amp;lt;ref&amp;gt;முருகனின் மனைவி &amp;#039;தெய்வயானை&amp;#039; அல்லது &amp;#039;தெவ்வானை&amp;#039; என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறாள். இது வேறு.&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[பிரமசுந்தர முனிவர்]] யானையின் சினத்தை அடக்கி வயப்படுத்தும் மந்திரம் ஒன்றை [[உதயணன்|உதயணனுக்குச்]] சொல்லிக்கோடுத்தார். மேலும் உதயணனுக்கு இசைப்பயிற்சி அளித்து, இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசையால் யானைகளை வயப்படுத்த வல்லதுமான [[கோடபதி]] என்னும் யாழையும் வழங்கினார். உதயணன் அந்த யாழை மீட்டும்போது அக் காட்டிலிருந்த யானைகளும், பிற விலங்குகளும், பறவைகளும் விரும்பிக் கேட்டு அவன் விருப்பப்படி செயல்பட்டன. இதனைக் கண்ட முனிவன் தன் மகன் [[யூகி]]யையும் உதயணனிடம் ஒப்படைத்து உதயணனுக்கு உயிர்த்துணையாக விளங்கும்படி அறிவுறுத்தினான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருநாள் தெய்வயானை ஒன்று பல பிடிகள் பெண்யானைகள் சூழ்ந்து வர, சினத்துடன் உதயணன் முன் தோன்றியது. அது பதினாயிரம் யானைகளின் பலத்தை ஒருங்கே கொண்டது. அப்போது உதயணன் தான் கற்றிருந்த யானையை வயப்படுத்தும் மந்திரத்தைச் சொல்லித் தன் கோடபதி யாழை மீட்டினான். தெய்வயானை உதயணனின் வயப்பட்டது. உதயணன் அதன்மீது ஏறிக்கொண்டு தன் இருப்பிடம் திரும்பினான். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருநாள் அந்த யானை உதயணன் கனவில் தோன்றியது. தன்மீது வேறு பாகரை ஏற்றினாலும், தோல் கயிற்றால் தன்னைக் கட்டினாலும், யானை உண்ணுவதற்கு முன்பு உதயணன் உண்டாலும் உதயணனை விட்டு விலகும் நிலை வரும் என அறிவித்த்து. அதுமுதல் உதயணனன் தெய்வயானையின் விருப்பப்படி கவனமுடன் அதனைப் பேணிவந்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
உதயணன் தன் தாய்மாமன் நாட்டு ஆட்சிப் பொறுப்பினை யூகியிடம் ஒப்படைத்துவிட்டுத் தந்தை தனக்களித்த நாட்டை ஆண்டுகொண்டு வருகையில் ஒருநாள் மகளிரின் ஆடல்பாடல்களில் மயங்கியிருந்தான். தனக்கு இருந்த பசி மயக்கத்தில் தெய்வயானைக்கு உணவு அளிக்கக மறந்து தான் முதலில் உண்டுவிட்டான். அப்போது அந்த தெய்வயானை மறைந்துவிட்டது. தேடினான்.  &lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:விலங்கியல் பெயருடையக் கட்டுரைகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sengai Podhuvan</name></author>
	</entry>
</feed>