<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D</id>
	<title>நாவாய் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T12:25:18Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&amp;diff=414897&amp;oldid=prev</id>
		<title>00:00, 7 அக்டோபர் 2021 இல் imported&gt;Krishnamurthy GovindaReddy</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&amp;diff=414897&amp;oldid=prev"/>
		<updated>2021-10-07T00:00:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை &amp;#039;&amp;#039;&amp;#039;நாவாய்&amp;#039;&amp;#039;&amp;#039; என்றனர். இந்த நாவாய் [[வங்கம்]], [[மரக்கலம்|கலம்]] என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது தமிழக நாவாய் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
*நாவாய் என்பது கடலில் ஓடும் மரக்கலக் கப்பல். &amp;lt;ref&amp;gt;கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (திருக்குறள் 496)&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
==துறைமுகத்தில்==&lt;br /&gt;
*நாவாயில் வந்த வெள்ளைக் குதிரைகளும், வடதிசையிலிருந்து வந்த வளப்பொருள்களும் [[நீர்ப்பெயற்று]] என்னும் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
நீர்ப்பெயற்று எல்லை போகிப் பால்கேழ்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வால்உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை (பெரும்பாணாற்றுப்படை 319-321)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
*[[சாலியூர்]] துறைமுகத்தில் நாவாய்கள் ஆடிக்கொண்டே நின்றன.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
ஆடு இயல் பெரு நாவாய்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மழை முற்றிய மலை புரைய&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
துறை முற்றிய துளங்கு இருக்கை&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தெண் கடல் குண்டு அகழி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சீர் சான்ற உயர் நெல்லின்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஊர் கொண்ட உயர் கொற்றவ (மதுரைக்காஞ்சி 83-88)&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்மார்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியோடு அனைத்தும் (பாண்டிநாட்டு நெய்தல் வளம் – மதுரைக்காஞ்சி 321-323)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
*[[புகார்]] துறைமுகத்தில், யானை கட்டியிருக்கும் வெளிறு என்னும் கூடம் போல,  அலைமோதும் கடலில் கூம்பில் கொடி பறக்கும் நாவாய்கள் பல நெருக்கமாக நின்றுகொண்டிருந்தன. &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
வெளில் இளக்கும் களிறு போல,&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தீம் புகார்த் திரை முன்துறை,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
*கரிகாலனின் முன்னோர் காற்றைக் கட்டுப்படுத்தி நாவாய் என்னும் பாய்மரக் கப்பலை ஓட்டி வாணிகம் செய்துவந்தனர்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
களி இநல் யானைக் கரிகால் வளவ (புறம் 66)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==தோற்றம்==&lt;br /&gt;
*நாவாயில் உள்ள கூம்பில் இதை என்னும் பாய்களைக் கயிற்றால் பிணித்துக் கட்டியிருப்பார்கள். புயலில் இதைக்கயிறு அறுந்துபோவது உண்டு. &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ, இதை புடையூ,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
கூம்பு முதல் முருங்க எற்றி, காய்ந்து உடன்	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
கடுங் காற்று எடுப்ப, கல் பொருது உரைஇ,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல, (மதுரைக்காஞ்சி 375-379)	&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
*அவற்றில் நாட்டுக்கொடிகள் பறந்தன.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
காணாமோ (அகம் 110)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
*கட்டுக்குள் நில்லாது நாவாய்கள் அசைவது உண்டு.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போல (மதம் கொண்டு ஓடிற்று - புறம் 13)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==பன்னாட்டு நாவாய்==&lt;br /&gt;
*பன்னாட்டு நாவாய்கள் தமிழகத் துறைமுகங்களில் உலவின.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை (நற்றிணை 295)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
*[[வானவன்]] என்னும் சேரமன்னன் கடலில் நாவாய் ஓட்டும்போது பிற நாவாய்கள் செல்லக்கூடாது. (இது முசிறித் துறைமுக்க் கட்டுப்பாடு) &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
சினம் மிகு தானை வானவன் குடகடல்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பிற கலம் செல்லாது ஆங்கு (புறம் 126)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist|2}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:நீரூர்திகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் வாணிகம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Krishnamurthy GovindaReddy</name></author>
	</entry>
</feed>