<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>நுளம்பர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T03:28:04Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=418424&amp;oldid=prev</id>
		<title>imported&gt;NeechalBOT: மேற்கோள் உள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=418424&amp;oldid=prev"/>
		<updated>2024-09-29T06:52:59Z</updated>

		<summary type="html">&lt;p&gt;மேற்கோள் உள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;நுளம்பர்&amp;#039;&amp;#039;&amp;#039; என்னும் மரபினர் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும் 11-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் [[தென்னிந்தியா]]வில் நுளம்பபாடி என்னும் பகுதியை ஆட்சி செய்த [[குறுநில மன்னர்]]கள் ஆவர். தொடக்கத்தில் நுளம்பபாடி இன்றைய [[ஆந்திரா]], [[கர்நாடகா]] ஆகிய மாநிலங்களுக்குள் அடங்கியிருந்தது. பிற்காலத்தில் இது தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவடைந்தது. தொடக்ககால நுளம்பபாடி, &amp;#039;&amp;#039;நுளம்பபாடி 1000&amp;#039;&amp;#039; என அழைக்கப்பட்டது. விரிவடைந்த பின்னர் இது &amp;#039;&amp;#039;நுளம்பபாடி 32000&amp;#039;&amp;#039; எனப்பட்டது. விரிவடைந்த நுளம்பபாடியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள [[சித்திரதுர்க்கா]], [[தும்கூர்]], [[பெல்லாரி]], [[பெங்களூர்]], [[கோலார்]] ஆகிய பகுதிகளும், தற்போது தமிழகத்தில் உள்ள [[தர்மபுரி]], [[கிருட்டிணகிரி]], [[வட ஆற்காடு]] மாவட்டப் பகுதிகளும் அடங்கியிருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நுளம்ப மரபினர், [[மேற்குக் கங்கர்|கங்கர்]]களுக்கும், [[இராஷ்டிரகூடர்|ராட்டிரகூடர்]]களுக்கும் அடங்கியே ஆட்சிசெய்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் தங்களைப் [[பல்லவர்]]களின் வழியைச் சேர்ந்தவர்களாகக் கூறுகின்றனர். [[ஏமாவதித்தூண் கல்வெட்டு]] மூலம் இவர்களுடைய மரபு பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளன.&amp;lt;ref&amp;gt;Epigraphia Camatica,Vol.XII,C.24,28,35,36.&amp;lt;/ref&amp;gt; இக்கல்வெட்டில் நுளம்ப மன்னர்களாக,&lt;br /&gt;
# திரிநயன பல்லவன்&lt;br /&gt;
# மங்கள நுளம்பாதிராசன், &lt;br /&gt;
# சிம்மபோத்தன்&lt;br /&gt;
# சாரு பொன்னீரன்&lt;br /&gt;
#போலால் சோர நுளம்பன்&lt;br /&gt;
# [[மகேந்திர நுளம்பன்|நுளம்ப மகேந்திரன்]]&lt;br /&gt;
# [[ஐயப்பதேவன்]], &lt;br /&gt;
# அன்னிகன்&lt;br /&gt;
# திலிப்பரசன் &lt;br /&gt;
ஆகியோரின் பெயர்கள் கிடைக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்கள் சில கோயில்களைக் கட்டியுள்ளனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை [[தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயில்]], [[தருமபுரி கோட்டை மல்லிகார்சுனர் கோயில்]], [[தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்]]&amp;lt;ref&amp;gt;{{cite book | title=தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள் | publisher=நாம் தமிழர் பதிப்பகம் | author=இரா. இராமகிருட்டிணன் | year=2016 | location=சென்னை | pages=91}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==குறிப்புகள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு: தென்னிந்தியக் குறுநில மன்னர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நுளம்பர் மரபு]]&lt;br /&gt;
[[பகுப்பு:சிற்றரசர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;NeechalBOT</name></author>
	</entry>
</feed>