<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>பதிகம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T11:14:24Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=430681&amp;oldid=prev</id>
		<title>07:15, 19 பெப்பிரவரி 2026 இல் Ruban</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=430681&amp;oldid=prev"/>
		<updated>2026-02-19T07:15:00Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;//wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;diff=430681&amp;amp;oldid=425316&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Ruban</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=425316&amp;oldid=prev</id>
		<title>imported&gt;சா அருணாசலம்: Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=425316&amp;oldid=prev"/>
		<updated>2024-09-07T06:51:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;a href=&quot;//wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;diff=425316&amp;amp;oldid=103484&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>imported&gt;சா அருணாசலம்</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=103484&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Thiagalingam: &quot;நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது &#039;&#039;&#039;பதிகம்&#039;&#039;&#039;. நூலில் பாயும் பொருளைக் கூறுவது &#039;&#039;&#039;பாயிரம்&#039;&#039;&#039;. இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொ...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=103484&amp;oldid=prev"/>
		<updated>2024-07-16T07:07:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&amp;quot;நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது &amp;#039;&amp;#039;&amp;#039;பதிகம்&amp;#039;&amp;#039;&amp;#039;. நூலில் பாயும் பொருளைக் கூறுவது &amp;#039;&amp;#039;&amp;#039;&lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;பாயிரம்&quot;&gt;பாயிரம்&lt;/a&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;. இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொ...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது &amp;#039;&amp;#039;&amp;#039;பதிகம்&amp;#039;&amp;#039;&amp;#039;. நூலில் பாயும் பொருளைக் கூறுவது &amp;#039;&amp;#039;&amp;#039;[[பாயிரம்]]&amp;#039;&amp;#039;&amp;#039;. இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. &amp;lt;ref&amp;gt;வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன [[ஐங்குறுநூறு]] [[மருதத்திணை]]யில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.&amp;lt;/ref&amp;gt; இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு, பத்து என்றே குறிப்பிடுகிறது. &amp;lt;ref&amp;gt;10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் பெரியாழ்வார் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.&amp;lt;/ref&amp;gt; தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். &amp;lt;ref&amp;gt;கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநள்ளாறு பதிகம்.&amp;lt;/ref&amp;gt; பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின. &amp;lt;ref&amp;gt;[[பாய்ச்சலூர்ப் பதிகம்]], [[மயிலாப்பூர் பத்தும் பதிகம்]],&amp;lt;/ref&amp;gt; [[பாட்டியல்]] நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம். &amp;lt;ref&amp;gt;[[பன்னிரு பாட்டியல்]] நூற்பா 312.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பாயிரம் என்னும் சொல் மொழி-வழக்கிற்கு வந்த காலம் ==&lt;br /&gt;
:[[பாயிரம்]] என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான &amp;#039;பழமொழி&amp;#039;யில்தான் பயிலப்பட்டுள்ளது.நல்லாட்சி புரியும் அரசன் ஒருவனை எதிர்க்க வரும் பகைவர்கள் பலராக ஒன்று திரண்டு &amp;#039;பாயிரம்&amp;#039; கூறிக்கொண்டு வந்தாலும் ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் போல நல்லரசன் ஒருவன் தாக்கும்போது ஓடிவிடுவர் என்கிறது, பழமொழி பாடல். &amp;lt;ref&amp;gt;பழமொழி பாடல் எண் 249 கழகப்பதிப்பு&amp;lt;/ref&amp;gt; அடுத்து, &amp;#039;பெருங்கதை&amp;#039; நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று &amp;#039;பாயிரம்&amp;#039; கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்,&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொல்காப்பியப் பாயிரம் ==&lt;br /&gt;
:தொல்காப்பியத்தில் பாய்ந்துவரும் செய்திகளையும், நூல் அரங்கேற்றம் முதலான தொடர்புடைய செய்திகளையும் கோத்துத் தொல்காப்பியருடன் பயின்ற ஒருசாலை மாணாக்கர் [[பனம்பாரனார்]] பாடியுள்ளார். அது தொல்காப்பிய நூலுக்குப் பாயிரமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;h1&amp;gt; சங்க நூல்களில் பதிகநெறி &amp;lt;/h1&amp;gt;&lt;br /&gt;
== பதிற்றுப்பத்து - பதிகங்கள் ==&lt;br /&gt;
:பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், [[ஐங்குறுநூறு]] நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் [[திருக்குறள்]], [[முதுமொழிக்காஞ்சி]], [[ஐந்திணை ஐம்பது]] போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஐங்குறுநூறு - பதிகநெறி ==&lt;br /&gt;
:ஐங்குறு நூலில் 500 படல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல் மேனி 5 திணைக்கும் 500 பாடல். அவற்றில் ஒவ்வொரு 100 பாடலும் 10, 10 ... பாடல்களாகப் பகுப்புநிலை கொண்டுள்ளன. ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனித் தலைப்புகள் உள்ளன. இந்தப் பாங்கு திருக்குறளிலும் காணப்படுகிறது. ஐங்குறுநூறு அகத்திணை நூல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==காப்பியங்களில் பதிகம்==&lt;br /&gt;
:[[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]] ஆகிய காப்பியங்களில் உள்ள பதிகங்கள் [[பதிற்றுப்பத்து]] நூலிலுள்ள பதிகங்களைப் போலவே நூலின் உள்ளடக்கத்தையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் &amp;#039;&amp;#039;&amp;#039;பதித்துக் காட்டும் பதிகங்களாக&amp;#039;&amp;#039;&amp;#039; உள்ளன. இந்தப் பதிகங்கள் நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல. &lt;br /&gt;
* [[சங்கரவிலாசம்]] என்னும் நூலில் உள்ள பதிகம் நூலாசிரியரே தொகுத்துக் காட்டியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;h1&amp;gt; அறநூல்களில் பதிகம் &amp;lt;/h1&amp;gt;&lt;br /&gt;
== திருக்குறள் - பாயிரம் ==&lt;br /&gt;
:திருக்குறளில் பாயிரம் என்பது எது என்பதில் பல்வேறு கருத்துகள் நம் முன்னோரிடையேயும் நிலவி வந்துள்ளன. திருக்குறளில் உள்ள முதல் நான்கு அதிகாரங்களைப் பாயிரம் என்பாரும், திருவள்ளுவ மாலை தொகுப்பில் உள்ள பாடல்களைப் பாயிரம் என்பாரும் உள்ளனர். இவற்றைத் [[திருக்குறள் பாயிரம்|திருக்குறளில் பாயிரம்]] என்னும் தலைப்பிலும், [[திருவள்ளுவ மாலை]] என்னும் தலைப்பிலும் தனித்தனியே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== திருக்குறள் - பதிகநெறி ==&lt;br /&gt;
:திருக்குறளில் உள்ள 1330 பாடல்களும் 133 அதிகாரத் தொகுப்புகளாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு அதுகாரத்துக்கும் 10 பாடல். பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு - ஆகிய நூல்களில் காணப்படும் இந்த முறையானது, பதிற்றுப்பத்து நூலில் &amp;#039;பதிகம்&amp;#039; என்னும் பெயராலும், ஐங்குறுநூறு நூலில் &amp;#039;பத்து&amp;#039; பத்து என்னும் பெயராலும், திருக்குறளில் &amp;#039;அதிகாரம்&amp;#039; என்னும் பெயராலும் தொகுக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். &amp;#039;&amp;#039;&amp;#039;நன்னூல் பதிகம் என்னும் சொல்லைப் பதிவுப்பொருள் எண்ணும் கண்ணோட்டத்தில் பார்ப்பது காலத்தின் கோலம்&amp;#039;&amp;#039;&amp;#039;. சமய நூல்களிலும் 10 என்னும் எண்ணிக்கைத் தொகுப்பையே காணமுடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முதுமொழிக் காஞ்சி - பதிகநெறி ==&lt;br /&gt;
:திருக்குறளில் ஈரடிப் பாடல் 10 கொண்ட அதிகாரத்தைப் பார்க்கிறோம். முதுமொழிக்காஞ்சி நூலில் ஓரடிப் பாடல் 10 தொகுக்கப்பட்டுள்ள பதிகநெறியைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல் இங்குத் தரப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
# பேரிற் பிறந்தமை ஈரத்தின் அறிப&lt;br /&gt;
# ஈரம் உடைமை ஈகையின் அறிப&lt;br /&gt;
# சோரா நன்னட்பு உதவியின் அறிப&lt;br /&gt;
# கற்றது உடைமை காட்சியின் அறிப&lt;br /&gt;
# ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப&lt;br /&gt;
# சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப&lt;br /&gt;
# சூத்திரம் செய்தலில் களவனாதல் அறிப&lt;br /&gt;
# சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப&lt;br /&gt;
# அறிவுசோர்வு உடைமையின் பிறிது சோர்பு அறிப&lt;br /&gt;
# சீருடை ஆண்மை செய்கையின் அறிப&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;h1&amp;gt; சமய நூல்களில் பதிகநெறி &amp;lt;/h1&amp;gt;&lt;br /&gt;
== சைவத் திருமுறைகள் ==&lt;br /&gt;
:அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய சமய குரவர் நால்வரின் பாடல்களும், ஒனபதாம் திருமுறைத் தொகுப்பில் உள்ள காரைக்கால் அம்மையார் பொன்றோரின் பாடல்களும் பதிக முறையிலேயே அமைந்துள்ளன.&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;திருக்கடைக் காப்பு&amp;#039;&amp;#039;&amp;#039; - சம்பந்தர், சுந்தரர் பாடல்களில் பதிகத்தின் இறுதியில் பதினோராம் பாடல் ஒன்று வரும். இது பதிகத்தின் கடைசியில் பதிகத்துக்கும், பதிகம் பாடுவோருக்கும் காப்பாக அமையும் பாடல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆழ்வார் பாடல்கள் ==&lt;br /&gt;
:திருவாய்மொழி தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பாடல்கள் பா வடிவ அளவினைப் பொருத்த பாடல்களாகவும், பொருள்நோக்குத் தொகுப்புப் பாடல்களாகவும் உள்ளன. பெரியாழ்வார் பாடல்கள் பொருள் நோக்கிலும், ஊர்நோக்கிலும் அமைந்துள்ளன. இவை 10. 10, ... பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;பல சுருதி&amp;#039;&amp;#039;&amp;#039; - பெரியாழ்வார் பாடல்களில் 10 பாடல் (சில பத்தில் 9 பாடல்) முடிந்த பின்னர், 11-ஆவது (சிலவற்றில் 10-ஆவது) பாடல் ஒன்று வரும். இதனைப் பல சுருதி என்பர். இது பதிகத்தைப் பாடுவோர் அடையும் பயனைக் கூறும். பயனைக் குறிக்கும் வடசொல் பலன் என்பர். சுருதி என்பது வேதம். பயனைச் சொல்லும் வேதம் என்பது இதன் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நன்னூல் தரும் விளக்கம் ==&lt;br /&gt;
:நன்னூல் பாயிரத்தைப் பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகைப்படுத்துகிறது. &lt;br /&gt;
== பொதுப் பாயிரம் ==&lt;br /&gt;
# நூல் - நூலின் பெயர்&lt;br /&gt;
# நுவல்வோன் - நூல் உரைக்கும் ஆசிரியன் பெயர்&lt;br /&gt;
# நுவலும் திறன் - நூல் சொல்லிச் செல்லும் பாங்கு&lt;br /&gt;
# கொள்வோன் - நூல் பயில்வோன் எப்படி இருக்கவேண்டும்&lt;br /&gt;
# கோடல் - பயிலவேண்டிய முறைமை&lt;br /&gt;
இந்த ஐந்து பாங்கினையும் கூறுவது பொதுப் பாயிரம்.&lt;br /&gt;
== சிறப்புப் பாயிரம் ==&lt;br /&gt;
# நூலாசிரியனின் பெயர்&lt;br /&gt;
# நூல் தோன்றிய மரபுவழி&lt;br /&gt;
# நூல் சொல்லும் பொருளுக்கு எல்லை&lt;br /&gt;
# நூலின் பெயர்&lt;br /&gt;
# நூல் சொல்லும் பொருள்&lt;br /&gt;
# யாப்பு - நூலின் சொற்பொருள் கட்டுக்கோப்பாக யாக்கப்பட்டுள்ள முறைமை&lt;br /&gt;
# நூல் சொல்லும் பொருள்&lt;br /&gt;
# நூலைக் கேட்போர் எய்தும் பயன்&lt;br /&gt;
ஆகிய எட்டுப் பாங்குகளைக் கூறுவது சிறப்புப் பாயிரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொல்லமைதி விளக்கம் ==&lt;br /&gt;
: பதிகம், பாயிரம் என்னும் பழஞ்சொற்களை இக்காலத்தில் மேலும் பல சொற்களால் குறிப்பிட்டுப் பயன்படுத்திவருகிறோம். இதன் பொருளமைதி நுட்பமானது.&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| அணிந்துரை || நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை || நன்னூல்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| தந்துரை || நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism || நன்னூல்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| நூன்முகம் ||உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம் || நன்னூல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| பதிகம் || பத்து எண்ணிக்கை கொண்ட பாடல்களின் தொகுப்பு || திருமுறைகள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| பாயிரம் || நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது || நன்னூல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| புறவுரை || நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி || நன்னூல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| புனைந்துரை || நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை || நன்னுல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| மதிப்புரை || நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும் || இக்காலம் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| முகவுரை || முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை || நன்னூல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| முன்னுரை || நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம் || இக்காலம் &lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் காண்க==&lt;br /&gt;
* [[சிற்றிலக்கிய வகை]]&lt;br /&gt;
* [[பாயிரம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
[[பகுப்பு:பதிகம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Thiagalingam</name></author>
	</entry>
</feed>