<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>மதனவர்மன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-05T12:01:21Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=458028&amp;oldid=prev</id>
		<title>imported&gt;தணிகைவேல் மாரியாயி: தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=458028&amp;oldid=prev"/>
		<updated>2022-10-27T05:31:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox royalty&lt;br /&gt;
| name         = மதனவர்மன்&lt;br /&gt;
| succession   = செசகபுக்தியின் அரசன்&lt;br /&gt;
| reign        = அண்மை. 1128–1165 பொ.ச.&lt;br /&gt;
| predecessor  = பிரிதிவிவர்மன்&lt;br /&gt;
| successor    = இரண்டாம் யசோவர்மன் அல்லது பரமார்தி&lt;br /&gt;
| father       = பிரிதிவிவர்மயசோவர்மன்&lt;br /&gt;
| dynasty      = [[சந்தேலர்கள்]]&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;மதனவர்மன்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Madanavarman&amp;#039;&amp;#039;) (ஆட்சிக் காலம் பொ.ச. 1128-1165 ) மத்திய [[இந்தியா|இந்தியாவின்]] [[புந்தேல்கண்ட்]] பகுதியை ஆண்ட [[ராஜ்புத்|இராஜபுத்திர அரசகுலத்தை]] சேர்ந்த [[சந்தேலர்கள்|சந்தேல]] அரசனாவான். இவன் தனது தந்தை பிருத்விவர்மனுக்குப் பிறகு செசகபுக்தி பகுதியின் ஆட்சியாளரானான். அண்டை இராச்சியங்களை அடிபணியச் செய்ததன் மூலம் இவன் சந்தேல மகிமையை புத்துயிர் அளித்தான். மேலும் பல ஏரிகளையும் கோவில்களையும் நிர்மானித்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இராணுவ வாழ்க்கை ==&lt;br /&gt;
மதனவர்மனின் வாரிசுகளின் கல்வெட்டுகள் வழக்கமான புகழைப் பயன்படுத்தி இவனது இராணுவ சாதனைகளை விவரிக்கின்றன. ஆனால் எந்த குறிப்பிட்ட விவரங்களையும் வழங்கவில்லை. {{Sfn|R. K. Dikshit|1976|pp=129-130}}&lt;br /&gt;
&lt;br /&gt;
=== அண்டை நாடுகளுடனான உறவுகள் ===&lt;br /&gt;
[[மவூ, உத்தரப் பிரதேசம்|மவூ]] கல்வெட்டு, சந்தேல மன்னன் மற்ற அனைத்து மன்னர்களையும் அடிபணியச் செய்ய மதனவர்மனின் மந்திரி கதாதரன் உதவி செய்ததாகக் கூறுகிறது. {{Sfn|R. K. Dikshit|1976}} மதனவர்மனின் பெயரைக் கேட்டு [[சேதி நாடு|சேதி]] மன்னன் ஓடிவிட்டான். [[வாரணாசி|காசியின்]] அரசன் இவனுக்கு பயந்து நட்பாக இருந்தான். [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வாவின்]] மன்னன் விரைவில் இவனுக்கு மரியாதை செலுத்தினர் என்று அக்கல்வெட்டுக் கூறுகிறது. இவை ஒரு அரசவைக் கவிஞரின் வெளிப்படையான மிகைப்படுத்தல்கள் என்றாலும், மதனவர்மன் இந்த ஆட்சியாளர்கள் மீது அரசியல் செல்வாக்கைச் செலுத்த முடிந்தது என்று தோன்றுகிறது. {{Sfn|Sisirkumar Mitra|1977}}&lt;br /&gt;
&lt;br /&gt;
=== செயசிம்ம சித்தராசனுடனான மோதல் ===&lt;br /&gt;
[[கிருட்டிணன்]] [[கம்சன்|கம்சனை]] தோற்கடித்தது போல், மதனவர்மன் குர்ஜர மன்னனை தோற்கடித்ததாக [[கலிஞ்சர் கோட்டை|கலிஞ்சர்]] கல்வெட்டு கூறுகிறது. இங்கு குர்ஜரம் என்பது குசராத்தைக் குறிக்கிறது. மேலும் அதன் மன்னர் குசராத்தின் [[சோலாங்கிப் பேரரசு|சோலாங்கி]] ஆட்சியாளர் [[செயசிம்ம சித்தராசன்|செயசிம்ம சித்தராசனுடன்]] அடையாளம் காணப்படுகிறான். சோலாங்கியப் பேரரசும், [[சந்தேலர்கள்|சந்தேலப் பிரதேசமும்]] [[பரமாரப் பேரரசு|பரமாரப் பேரரசால்]] பிரிக்கப்பட்டன.{{Sfn|R. K. Dikshit|1976|p=133}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிருவாகம் ==&lt;br /&gt;
மதனவர்மனின் தந்தையிடம் பணியாற்றிய கற்றறிந்த [[பிராமணர்|பிராமணனான]] கதாதரன் என்பவன் இவனிடம் பிரதம அமைச்சராக இருந்துள்ளான். கதாதரனின் [[வேதம்|வேதங்கள்]] பற்றிய அறிவையும், தெட்டு கிராமத்திற்கு அருகில் ஒரு [[விட்டுணு]] கோவிலையும், ஒரு குளத்தையும் கட்டியது உட்பட கதாதரனின் தயாள செயல்களை மவூ கல்வெட்டு  புகழ்கிறது. {{Sfn|R. K. Dikshit|1976|p=136}}&lt;br /&gt;
&lt;br /&gt;
அஜயபாலன் என்பவன் மதனவர்மனின் சேனாதிபதியாக இருந்துள்ளான. பரமார்தியின் செம்ரா கல்வெட்டு சேனாபதி கில்கனனின் மகன் என்று இவனைப் பற்றிக் கூறுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மதனவர்மன் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்களை வெளியிட்டான். [[அனுமன்]] உருவம் கொண்ட செப்புக் காசுகளையும் வெளியிட்டான். இந்த நாணயங்களில் &amp;quot;ஸ்ரீமான் மதன-வர்ம-தேவன்&amp;quot; என்று அவனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. {{Sfn|P. C. Roy|1980|p=52}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== பொதுப் பணிகள் ==&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;பரமலா-ராசோ&amp;#039;&amp;#039;வின் கூற்றுப்படி, மதனவர்மன் ஏராளமான ஏரிகளையும் கோயில்களையும் உருவாக்கினான். இவன் பிராமணர்களுக்கு ஏராளமான தங்கம், நகைகள், குதிரைகள், யானைகளை பரிசாக அளித்தான் எனவும் தெரிகிறது. {{Sfn|R. K. Dikshit|1976|p=138}}&lt;br /&gt;
&lt;br /&gt;
கலிஞ்சரிலும், [[அஜய்கர்|அஜய்கரிலும்]] உள்ள கட்டிடங்கள் மதனைவர்மனைப் பற்றி கூறுகிறது. மகோபாவில் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள சிதிலமடைந்த சிவன் , விஷ்ணு கோயில்கள் இவருடையது என்று கூறப்படுகிறது. அகரில் ([[திகம்கர் மாவட்டம்]]) உள்ள மதனேச-சாகர-புரத்தி பாழடைந்த கோயிலும் இவனது பெயரைக் கொண்டுள்ளது. இவனது நினைவாக &amp;quot;மதன-சாகரம்&amp;quot; (அல்லது மதன் சாகர்) என பெயரிடப்பட்ட ஏரிகள் திகம்கர் மாவட்டத்தில் மகோபா, சதாரா, அகர்-நாராயண்புரம் பகுதியில் அமைந்துள்ளன. இவனால் நிறுவப்பட்ட கோயில்கள் இந்த ஏரிகளின் கரையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தன. பல இடங்கள் மதனவர்மனின் பெயரால் அழைக்கப்படுகின்றன. [[ஜான்சி|ஜான்சி மாவட்டத்தில்]] மதன்புரா, மகோபாவிற்கு அருகிலுள்ள மதன்கேரா ஆகியவை இதில் அடங்கும். {{Sfn|R. K. Dikshit|1976|pp=136-137}}&lt;br /&gt;
&lt;br /&gt;
அகர், [[கஜுராஹோ]], மகோபா, பாபௌரா மற்றும் பிற இடங்களில் இவனது ஆட்சிக் காலத்திலிருந்த [[சைனம்|சமண]] [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] பல உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. {{Sfn|R. K. Dikshit|1976|p=137}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொந்த வாழ்க்கை ==&lt;br /&gt;
மதனவர்மனின் பொ.ச.1192 ஆண்டு கல்வெட்டு, ஒன்று இப்போது [[பாரத் கலா பவன்|பாரத் கலா பவனில்]] உள்ளது. அதில் மகாராணி (தலைமை ராணி) வல்கனா-தேவி, ரசனி லக்கமாதேவி , ரசனி சாந்தலா தேவி என இவனது மூன்று இராணிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. {{Sfn|Sisirkumar Mitra|1977|p=117}}&lt;br /&gt;
&lt;br /&gt;
கலிஞ்சர் கல்வெட்டு படி, பிரதாபவர்மன் இவனது இளைய சகோதரன் ஆவான். {{Sfn|R. K. Dikshit|1976|pp=135-136}} இரண்டாம் யசோவர்மன் மதனவர்மனின் மகனாவான். இவனது பேரன் பரமார்திதேவன். யசோவர்மன் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை அல்லது மிகக் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தான். மதனவர்மனுக்குப் பிறகு பரமார்தி ஆட்சி செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. {{Sfn|R. K. Dikshit|1976}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== சான்றுகள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
=== உசாத்துணை ===&lt;br /&gt;
* {{cite book |url=https://books.google.com/books?id=f2Et2zZGJPUC&amp;amp;pg=PA53 |title=The Coinage of Northern India |author=P. C. Roy |publisher=Abhinav |year=1980 |isbn=9788170171225 }}&lt;br /&gt;
* {{cite book |url=https://books.google.com/books?id=a9j9ZJGJOV0C&amp;amp;pg=PA130 |title=The Candellas of Jejākabhukti |author=R. K. Dikshit |publisher=Abhinav |year=1976 |isbn=9788170170464 }}&lt;br /&gt;
* {{cite book |url=https://books.google.com/books?id=irHN2UA_Z7gC&amp;amp;pg=PA113 |title=The Early Rulers of Khajurāho |author=Sisirkumar Mitra |publisher=Motilal Banarsidass |year=1977 |isbn=9788120819979 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:குசராத் வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;தணிகைவேல் மாரியாயி</name></author>
	</entry>
</feed>