<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF</id>
	<title>மாதங்கி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-03T06:50:01Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;diff=464088&amp;oldid=prev</id>
		<title>imported&gt;பாஸ்கர் துரை: தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;diff=464088&amp;oldid=prev"/>
		<updated>2025-02-27T05:53:46Z</updated>

		<summary type="html">&lt;p&gt;தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox deity&amp;lt;!--Wikipedia:WikiProject Hindu mythology--&amp;gt;&lt;br /&gt;
| type = [[இந்து சமயம்]]&lt;br /&gt;
| image = Goddess Matangi.jpg&lt;br /&gt;
| caption = மாதங்கி&lt;br /&gt;
| alt = &lt;br /&gt;
| name =மாதங்கி&lt;br /&gt;
| Devanagari = मातङ्गी&lt;br /&gt;
| Sanskrit_transliteration = Mātaṅgī&lt;br /&gt;
| affiliation = மகாவித்தியா, பார்வதி சரசுவதி  &lt;br /&gt;
| god_of = ஞானம், கலைகள், நாவாண்மை, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் &lt;br /&gt;
| abode =காடுகள் போன்ற பாரம்பரிய சமூகத்தின் சுற்றளவு மற்றும் பேச்சில்  &lt;br /&gt;
| consort =[[சிவன்]] அம்சமான மாதங்க பைவரவர் &lt;br /&gt;
| son =[[கணபதி]] அம்சம் கொண்ட  உச்சிஷ்ட கணபதி &lt;br /&gt;
| dasa avataram = &lt;br /&gt;
| member_of = [[தச மகா வித்யா]]க்கள்&lt;br /&gt;
| other_names = ராஜ மாதங்கி, மாந்திரீக தேவி &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;மாதங்கி&amp;#039;&amp;#039;&amp;#039;  (ஆங்கிலம்: &amp;#039;&amp;#039;&amp;#039;Matangi&amp;#039;&amp;#039;&amp;#039;; சமஸ்கிருதம்: &amp;#039;&amp;#039;&amp;#039;मातंगी&amp;#039;&amp;#039;&amp;#039;) என்பவர் [[தச மகா வித்யா]] எனப்படும் பத்து [[தந்திரம்|தந்திர]]  தெய்வங்களிள் ஒருவர். இவர் [[பார்வதி]]யின் ஆங்கார அம்சமாகக் கருதப்படுகிறார். மாதங்கி என்பவர் சைவ சமயக்கடவுளான [[சிவன்|சிவபெருமானின்]] மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்க முனிவரின் மகள் எனப்படுகிறார். மேலும், மாதங்கி  [[சரஸ்வதி]] யின் தாந்த்ரீக வடிவமாகக் கருதப்படுகிறாள். சரசுவதியைப் போலவே, மாதாங்கியும்,  பேச்சு, இசை, அறிவு மற்றும் கலைகளுக்கு அதிபதி ஆவார். அமானுஷ்ய சக்திகளைப் பெறுவதற்கும், குறிப்பாக எதிரிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், மக்களைத் தன்னிடம் ஈர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், உயர்ந்த அறிவைப் பெறுவதற்கும் மாதங்கி தேவியின்  வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாதங்கி வழிபாடு பெரும்பாலும் மாசுபாடு, தீங்கு விளைவித்தல் மற்றும் இந்து சமுதாயத்தின் கடைநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது, இஃது அவரது மிகவும் பிரபலமான வடிவத்தில் காணப்படுகிறது.  இவ் வடிவம்  &amp;#039;&amp;#039;&amp;lt;nowiki/&amp;gt;&amp;#039;[[உச்சிஷ்டா]] - சண்டலினி&amp;#039;&amp;#039;&amp;#039;  அல்லது  &amp;#039;&amp;#039;&amp;lt;nowiki/&amp;gt;&amp;#039;உச்சிஷ்டா-மாதாங்கினி&amp;#039;&amp;lt;nowiki/&amp;gt;&amp;#039;&amp;#039;  என அழைக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;கின்ஸ்லி (1997) ப. 217&amp;lt;/ref&amp;gt; அவள் ஒரு [[தலித்]]  இன மக்களின் கடவுளாக ([[சந்தலா|சந்தலினி]]) என்று விவரிக்கப்படுகிறாள். மேலும், ( &amp;#039;&amp;#039;உச்சிஷ்டா&amp;#039;&amp;#039; ) என்பது சாப்பிட்ட பிறகு கழுவப்படாத கைகள் அல்லது இடது கையில் உணவு உண்பது போன்ற பொருளில் உள்ளதால் இவை இரண்டும் பண்டைய இந்து மதத்தில் தூய்மையற்றதாகக் கருதப்பட்டன.&amp;lt;ref&amp;gt;Kinsley (1997) p. 217&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மாதங்கி என்பது மரகத பச்சை வண்ணத்தைக் குறிக்கிறது. உச்சிஷ்டா மாதங்கினியின் கைகளில் உடுக்கை, வாள், மண்டையோடு போன்றவை காணப்படுகிறது. இவரின் இன்னொரு தோற்றமான ராஜ மாதங்கியின் உருவம் வீணை வாசிப்பவராகவும், கிளியை வைத்திருப்பவராகவும் சித்திரிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர்க்காரணம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பிகை, மதங்கரின் மகளாக பிறந்தமையால் &amp;#039;&amp;#039;மாதங்கி&amp;#039;&amp;#039; என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்தத் தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=15795 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-08-18 |archive-date=2013-05-06 |archive-url=https://web.archive.org/web/20130506153500/http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15795 |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மதங்க முனிவர்==&lt;br /&gt;
மதங்க முனிவர் கடுமையாகத தவம் செய்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மதங்கருக்குக் காட்சியளித்தார். அப்பொழுது மதங்கர் &amp;quot;அனைவருக்கும் தந்தையான ஈசனே, தாங்கள் எனக்கு உறவாக இருக்கும் வரம் தர வேண்டும்&amp;quot; என்று வேண்டினார். அவ்வாறே சிவபெருமானும் பார்வதி தேவி மாதங்கியாக அவருக்குப் பிறப்பார் என்றும், மாதங்கியைத் தான் மணம் முடிப்பதாகவும் வரம் தந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மாதங்கி, சிவன் - திருமணம்==&lt;br /&gt;
மாதங்கி சிவபெருமான் திருமணம் திருவெண்காட்டில் நிகழ்ந்தது. அப்பொழுது மாதங்கியின் வீட்டார், சிவபெருமானுக்குச் சீர் செய்யாததைக் கண்டு தேவர்கள் கேலி பேசினர். அதனைத தடுத்த சிவபெருமான், சீர் கொடுப்பதும், பெறுவதும் தவறு என்று உரைத்தார். ஆனால் திருமணத்தின் சடங்கு எனத் தேவர்கள் வாதிட்டனர். அவர்களைச் சாந்தம் செய்வதற்காகக் கையிலையில் உள்ள பெருஞ்செல்வத்தினை நந்தி தேவரிடம் கூறி எடுத்துவரும்படி செய்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்புராணத்தைத் திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் கோயில் தலபுராணம் விவரிக்கிறது.&amp;lt;ref&amp;gt;http://koyil.siththan.com/archives/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/227{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வழிபாடு ==&lt;br /&gt;
[[படிமம்:Matangi_yantra_color.jpg|thumb|The yantra of Matangi, which is used in her worship]]&lt;br /&gt;
மகாவித்யா, பாகலமுகி  தவிர, மாதங்கி என்று அழைக்கப்படும்  இவரின் வழிபாடு முதன்மையாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறப் பரிந்துரைக்கப்படுகிறது. &amp;#039;மகா-பாகவத புராணத்தில்&amp;#039; ஒரு பாடல் ஒருவரின் எதிரிகளைக் கட்டுப்படுத்த இவரது அருளைக் கேட்கிறது, அதே நேரத்தில் &amp;#039;தந்திரசர&amp;#039; எனச் சொல்லப்படும் இவரின் மந்திரத்தை ஓதுவது, இவரது வடிவத்தைப் பற்றி தியானம் செய்வது மற்றும் இவரது சடங்கு வழிபாடு ஆகியவை மக்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுக்கும் என்று நம்மப்படுகிறது.&amp;lt;ref name =&amp;quot;kinsley220ff&amp;quot;&amp;gt;Kinsley (1997) pp. 220–22&amp;lt;/ref&amp;gt; அவரது பக்தர்கள், குறிப்பாகத்  &amp;#039;&amp;#039;தாந்த்ரீக சாதகாக்கள் &amp;#039;(சாதுக்கள்), மாதங்கி தேவிக்குப் படைக்கப்பட்ட  மீதமுள்ள அல்லது ஓரளவு சாப்பிட்ட உணவை வழங்குவதன் மூலம் தங்களின் இழிநிலையைக் கடந்ததாகக் கருதப்படுகிறது ( உச்சிஷ்டா&amp;#039;&amp;#039; ) இதனால் அவர்களின் கர்வம் அழிகிறது.  மாதாங்கியின் வழிபாடு அவரது பக்தருக்குத் தடைசெய்யப்பட்ட மற்றும் மாசுபாட்டை எதிர்கொள்ள அனுமதிக்கும் வகையில் விவரிக்கப்படுகிறது.  அவரை வழிபடும் பக்தர்களை இரட்சிப்பிற்கு இட்டுச் செல்கிறது அல்லது உலக இலக்குகளுக்கு அமானுஷ்ய சக்திகளைப் பெற அனுமதிக்கிறது எனக் கருதப்படுகிறது.&amp;lt;ref name=&amp;quot;foulston&amp;quot;&amp;gt;{{cite book|last=Foulston|first=Lynn|author2=Abbott, Stuart|title=Hindu goddesses: beliefs and practices|publisher=Sussex Academic Press|year=2009|page=[https://archive.org/details/hindugoddessesbe0000foul/page/123 123]|isbn=978-1-902210-43-8|url=https://archive.org/details/hindugoddessesbe0000foul/page/123}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;புராச்சார்யனவா&amp;#039; என்பது மாதங்கி தேவியின் தோத்திரங்களை அவள் காதுகளில் கிசுகிசுப்பதன் மூலம்  தேவி மகிழ்வதை விவரிக்கிறது.  பக்தரின் அனைத்துக் கேள்விகளுக்கும் தெய்வம் பதிலளிக்கும் என நம்பப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாதாங்கி பெரும்பாலும் [[சரஸ்வதி]] யுடன் தொடர்புடைய  &amp;#039;&amp;#039;&amp;quot;ஐம்&amp;quot;&amp;#039;&amp;#039;  என்ற மந்திர எழுத்துடன் வணங்கப்படுகிறார், மேலும் இஃது அறிவு, கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் விதை-எழுத்தாகும். இருபது எழுத்துகள் கொண்ட  நீண்ட மந்திரமும் பயன்படுத்தப்படுகிறது:&amp;lt;ref name=&amp;quot;Frawley142ff&amp;quot;&amp;gt;Frawley pp. 142–3&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
‘&amp;#039;ॐ ह्रीं ऐं श्रीं नमो भगवति उच्छिष्टचाण्डाली श्री मातङ्गेश्वरी सर्वजनवसंकरी स्वाहा ॥ (ஓம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீரிம் நமோ பகவதி உச்சிஷ்டசண்டலி ஸ்ரீ மாதங்கேஸ்வரி சர்வஜனவசங்கரி ஸ்வாகா )&amp;lt;nowiki&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;lt;/nowiki&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே குறிப்பிட்ட மந்திரமானது பத்தாயிரம் எண்ணிக்கை அளவு ஜெபிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆயிரம் எண்ணிக்கை முடிந்தவுடன் பூக்கள் மற்றும் [[நெய்]] வேள்வியில் சமர்பிக்கப்படுகிறது. அல்லது ஒவ்வொரு நூறு எண்ணிக்கை முடிந்தபின்பும் &amp;quot;நீர்&amp;quot; தாரை வார்க்கப்படுகிறது. அல்லது அந்தணர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.&amp;lt;ref name=&amp;quot;kinsley220ff3&amp;quot;&amp;gt;Kinsley (1997) pp. 220–22&amp;lt;/ref&amp;gt; மாதங்கி தேவியின் யந்திரமும் பூசையில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சில பொருள்களை இவ் வழிபாட்டின் போது தானம் செய்வதின் மூலமாக வேண்டிய பலன்களைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.  பேல் இலைகளின் பிரசாதம் ராஜ்யத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது; உப்பு கட்டுப்படுத்தும் சக்தியை அளிக்கிறது; மஞ்சள் முடக்குவதற்கான சக்தியை அளிக்கிறது; வேப்பம் கிளைகள் செல்வத்தைக் கொண்டுவருகின்றன; சந்தனம், கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஒரு பிரசாதம் அல்லது ஒரு உப்பு மற்றும் தேன் கலவை மக்களை ஈர்க்கும் சக்தியை வழங்குகிறது எனப் பொருட்களின் பலன்கள் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
புராணங்களிலும் இதிகாசங்களிலும் மாதங்கி தேவி, “கடம்பவனவாசினி” என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். இந்தப் பெயர் லலிதா சஹஸ்ரநாமத்திலும் சொல்லப் படுகிறது. ஶ்ரீசக்கரம் எனப்படும் மஹாமேருவில் கடம்பவனம் எனும் பகுதியில் இந்தத் தேவி வாசம் செய்கிறாள். ஶ்ரீசக்கரத்தின் உட்பொருளான அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் அமைச்சராகவும் இருக்கிறாள். [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்]] வீற்றிருக்கும் அன்னை மீனாட்சி, இவரது அவதாரமாகக் கருதப்படுகிறார். அதனாலேயே, அன்னைக்குச் செய்யப்படும் ஆறு கால பூஜைகளில் ஒன்றில் அவள் சியாமளையாக அலங்கரிங்கப்படுகிறாள். “சியாமளா” என்பது கருத்த நீல நிறத்தினைக் கொண்டவள் என்று பொருள்படும். இந்த அன்னை பெரும்பாலாக பச்சை மற்றும் நீல நிறங்களில் சித்திரிக்கப்படுவதால், சியாமளை என்ற திருநாமம் கொண்டிருக்கிறாள். அன்னையின் மூத்த சகோதரனாகக் கருதப்படும் [[விஷ்ணு|மகாவிஷ்ணு]]&amp;lt;nowiki/&amp;gt;வுக்கும் “சியாமளன்” என்ற பெயர் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கதைகளின்படி, ரகுவம்சம், [[அபிஞான சாகுந்தலம்|அபிஞானசாகுந்தலம்]], [[மேகதூதம்]] போன்ற கதைகளை இயற்றிய வடமொழி கவிஞரான [[காளிதாசன்|காளிதாசர்]] முற்காலத்தில் கல்வியறிவு இல்லாதவராக இருந்தாராம். அவருக்கு மாதங்கி தேவி நேரில் தரிசனம் தந்து ஞானத்தை அருளியதால், அவள் பெயரில் “சியாமளா தண்டகம்” என்ற துதிப்பாடல் ஒன்றனை இயற்றினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
==துதிகள்==&lt;br /&gt;
# சியாமளா தண்டகம் &lt;br /&gt;
# சியாமளா நவரத்னமாலை &lt;br /&gt;
# சியாமளா ஆவரணம் &lt;br /&gt;
# சியாமளா அசுடோத்திரம்&lt;br /&gt;
# சியாமளா கவசம்  &lt;br /&gt;
# ராஜமாதங்கி மந்திரம்&lt;br /&gt;
# மாதங்கி தோத்திரம்&lt;br /&gt;
# மாதங்கி சுமுகி கவசம்&lt;br /&gt;
# மாதங்கி ருதயம்&lt;br /&gt;
# மாதங்கி சகசுரநாமம்&lt;br /&gt;
# சியாமளா சகசுரநாமம்&lt;br /&gt;
&lt;br /&gt;
==தொடர்புடைய இணைப்புகள்==&lt;br /&gt;
* [[மோகினி]]&lt;br /&gt;
* [[பார்வதி]]&lt;br /&gt;
* [[ஆதிசக்தி]]&lt;br /&gt;
* [[மதங்கமனுகோசம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்களும், மேற்கோள்களும்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
[http://temple.dinamalar.com/Slogandetails.php?id=644 சியாமளா வழிபாடு]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சாக்தம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சிவபெருமான் மனைவியர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பார்வதியின் வடிவங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து பெண் தெய்வங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;பாஸ்கர் துரை</name></author>
	</entry>
</feed>