<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>மாதோட்டம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T00:42:32Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=464310&amp;oldid=prev</id>
		<title>imported&gt;S. ArunachalamBot: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் (3) using AWB</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=464310&amp;oldid=prev"/>
		<updated>2024-12-26T16:21:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் (3) using &lt;a href=&quot;/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF:AWB&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;தமிழர்விக்கி:AWB (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;AWB&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox settlement&lt;br /&gt;
| name = மாதோட்டம்&lt;br /&gt;
| native_name = {{lang|ta|மாந்தை}}&amp;lt;br&amp;gt;{{lang|si|මන්තොට}}&lt;br /&gt;
| settlement_type = துறைமுக நகரம்&lt;br /&gt;
|image_skyline = &lt;br /&gt;
|imagesize        = &lt;br /&gt;
|image_caption    = &lt;br /&gt;
| pushpin_map = Sri Lanka Northern Province&lt;br /&gt;
| subdivision_type = நாடு &lt;br /&gt;
| subdivision_name = [[இலங்கை]]&lt;br /&gt;
| subdivision_type2 = மாகாணம்&lt;br /&gt;
| subdivision_name2 = [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணம்]]&lt;br /&gt;
| subdivision_type3 = மாவட்டம்&lt;br /&gt;
| subdivision_name3 = [[மன்னார் மாவட்டம்|மன்னார்]]&lt;br /&gt;
| subdivision_type4 = பிரதேச செயலர் &lt;br /&gt;
| subdivision_name4 = மாந்தை மேற்கு &lt;br /&gt;
| government_footnotes = &lt;br /&gt;
| government_type = &lt;br /&gt;
| leader_title =&lt;br /&gt;
| leader_name =&lt;br /&gt;
| leader_party = &lt;br /&gt;
| unit_pref = [[Metric system|Metric]]&lt;br /&gt;
| area_footnotes = &lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_land_km2 = &lt;br /&gt;
| area_water_km2 = &lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_footnotes = &lt;br /&gt;
| population_note = &lt;br /&gt;
| population_total = &lt;br /&gt;
| population_density_km2 = &lt;br /&gt;
| population_density_sq_mi = &lt;br /&gt;
| timezone = [[இலங்கை சீர் நேரம்]]&lt;br /&gt;
| utc_offset = +5:30&lt;br /&gt;
| timezone_DST = &lt;br /&gt;
| utc_offset_DST = &lt;br /&gt;
| coordinates     = {{coord|8|59|22|N|79|59|53|E|region:LK|display=inline}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;மாதோட்டம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது, இலங்கைத் தீவில், பல [[நூற்றாண்டு]]களுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். [[பாளி]] மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை &amp;#039;&amp;#039;மாதொட்ட&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;மகாதித்த&amp;#039;&amp;#039; என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் &amp;#039;&amp;#039;மாந்தை&amp;#039;&amp;#039; என்றும் &amp;#039;&amp;#039;மாதோட்டம்&amp;#039;&amp;#039; என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த [[நாணயம்|நாணயங்களும்]], [[போசலின்]] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் [[அகழ்வாய்வு]]கள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
இது [[இலங்கை]]த் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய [[வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்தின்]] [[மன்னார்]] மாவட்டத்தில் அமைந்திருந்தது. [[மல்வத்து ஓயா]] என அழைக்கப்படும் ஆற்றின் [[கழிமுகம்|கழிமுகத்தை]] அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான [[அனுராதபுரம்|அனுரதபுரத்துடன்]] சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு வசதியாக இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே [[திருக்கேதீச்சரம்]] எனப்படும் புகழ் பெற்ற [[சிவன்|சிவன்கோயில்]] இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பண்டைய மாதோட்டத்தின் முக்கியத்துவம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் குறையத் தொடங்கியது. [[தென்கிழக்கு ஆசியா]]வின் [[ஸ்ரீவிஜய இராச்சியம்]], கிழக்கு - மேற்குக் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக மாறியதால், [[அரபிக் கடல்]] பகுதியின் வணிக முக்கியத்துவம் வங்கக் கடலுக்கு மாறியது. மாதோட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைநகர் அனுரதபுரத்தையும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அண்மையாக இருந்த [[பொலநறுவை]]க்கு மாற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் மாதோட்டம், இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமான வணிகத்துக்கு முக்கிய துறையாக விளங்கியது. 13 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னர் இத் துறைமுகமும் பட்டினமும் பழைய முக்கியத்துவத்தை முற்றாகவே இழந்து விட்டன எனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தேவாரங்களில் மாதோட்டம்==&lt;br /&gt;
இலங்கையில் உள்ள சிவத்தலங்களுள் பாடல் பெற்றதலங்கள் இரண்டு. அவற்றுள் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் ஒன்று. சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்கள் இங்குள்ள சிவன் மேல் தேவாரப் [[பதிகம்|பதிகங்களைப்]] பாடியுள்ளார்கள். இவற்றில் அடங்கியுள்ள பெரும்பாலான பாடல்களில் மாதோட்டத்தின் சிறப்புப் பற்றிய அடிகள் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சம்பந்தர் பாடிய &amp;#039;&amp;#039;விருது குன்றமா மேருவில் நாணற&amp;#039;&amp;#039; என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் [[கடற்கரை]] அமைவிடச் சிறப்புப் பற்றியும், அங்கு அமைந்திருந்த, [[பூஞ்செடி]]களையும், பயன்தரு பழ மரங்களையும் கொண்ட [[சோலை]]கள் பற்றியும், அதன் பொருள் வளம் குறித்தும், கற்றோரும், படைவீரரும் நிறைந்திருந்தமை பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt;சம்பந்தரின் பதிகத்தில் வரும் மாதோட்டத்தின் சிறப்பைக் கூறும் பகுதிகளைக் கீழே காண்க.&lt;br /&gt;
*....கனைகடற் கடிகமழ்&lt;br /&gt;
பொழிலணி மாதோட்டங்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....இருங்கடற் கரையினில்&lt;br /&gt;
எழில்திகழ் மாதோட்டம்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....இச்சையி னுழல்பவர்&lt;br /&gt;
உயர்தரு மாதோட்டத்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்&lt;br /&gt;
மறிகடல் மாதோட்டத்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்&lt;br /&gt;
மலிகடல் மாதோட்டத்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*...வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற&lt;br /&gt;
மருவிய மாதோட்டக்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை&lt;br /&gt;
நடமிடு மாதோட்டந்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....கடல்வாயப்&lt;br /&gt;
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்&lt;br /&gt;
பொருந்திய மாதோட்டத்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா&lt;br /&gt;
தோட்டநன் னகர்மன்னித்.....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....மாதோட்டத்&lt;br /&gt;
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்....&lt;br /&gt;
&lt;br /&gt;
*....முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்ட....&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சுந்தரமூர்த்தி நாயனாருடைய &amp;#039;&amp;#039;நத்தார்படை ஞானன்&amp;#039;&amp;#039; என்று தொடங்கும் பதிகத்திலும், இதே போன்ற குறிப்புகள் வருகின்றன&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
சுந்தரமூர்த்தி நாயனாருடைய &amp;#039;&amp;#039;நத்தார்படை ஞானன்&amp;#039;&amp;#039; என்று தொடங்கும் பதிகத்தில் வரும் மாதோட்டம் பற்றிய குறிப்புகள்.&lt;br /&gt;
*....வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்....&lt;br /&gt;
*....வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்....&lt;br /&gt;
*....வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்....&lt;br /&gt;
*....மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்....&lt;br /&gt;
*....மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்....&lt;br /&gt;
*....கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்....&lt;br /&gt;
&amp;lt;/ref&amp;gt;. அத்துடன், அங்கே கப்பல்கள் வந்து குவிவதையும் அவர் குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;....வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்....&lt;br /&gt;
&amp;lt;/ref&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
==குறிப்புகள்==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[இலங்கையின் பண்டைய துறைமுகங்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இலங்கையின் பண்டைய துறைமுகங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;S. ArunachalamBot</name></author>
	</entry>
</feed>