<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF</id>
	<title>யூகி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-02T12:06:42Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF&amp;diff=480493&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Selvasivagurunathan m: /* மறைந்திருந்து நண்பனுக்கு உதவி */  *திருத்தம்*</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF&amp;diff=480493&amp;oldid=prev"/>
		<updated>2015-04-17T07:07:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;மறைந்திருந்து நண்பனுக்கு உதவி: &lt;/span&gt;  *திருத்தம்*&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;யூகி&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;lt;ref&amp;gt;{{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[ கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}}&amp;lt;/ref&amp;gt; என்பவன் [[பெருங்கதை]] இலக்கியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். இவன் பிரமசுந்தர முனிவருக்கும் பரமசுந்தரிக்கும் பிறந்த மகன். காட்டில் [[மிருகாபதி]] பெற்றெடுத்த மகன் [[உதயணன்|உதயணனைப்]] பிரமசுந்தர முனிவர் வளர்த்தபோது உதயணனும் யூகியும் நண்பர்களாயினர். பிரமசுந்தரரும் [[சேடகன்|சேடக முனிவரும்]] கற்பித்த கலைகளில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இயற்கை அறிவாலும், கற்பித்த செயற்கை அறிவாலும் அவர்கள் மேம்பட்டு விளங்கினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமசுந்தர முனிவர் இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசையால் யானைகளை வயப்படுத்த வல்லதுமான [[கோடபதி]] என்னும் யாழையும் உதயணனுக்கு வழங்கினார். அந்த யாழை உதயணன் மீட்டியபோது பல யானைகளின் வலிமையெல்லாம் ஒருங்கமையப்பெற்ற [[தெய்வயானை]] ஒன்று தன் பெரும் பிடிக் கூட்டத்துடன் உதயணனுக்கு அடிமைப்பட்டு வந்ததை அறிந்த பிரமசுந்தர முனிவர் தன் மகன் யூகியையும் உதயணனுக்கு உதவி புரியுமாறு உதயணனிடம் ஒப்படைத்தார். &lt;br /&gt;
==சேதி நாட்டு அரசன்==&lt;br /&gt;
உதயணன் தன் தாய்மாமன் [[விக்கிரமன்|விக்கிரமனால்]] சேதி நாட்டு மன்னன் ஆனபோது அவனது முதலமைச்சனாக இருந்து உதயணனுக்குப் பேருதவியாக விளங்கினான். உதயணன் சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பை யூகியிடம் ஒப்படைத்தான். [[பிரச்சோதனன்]] தாக்கியபோது, போர் புரிந்துகொண்டிருக்கையில், தன் நண்பன் உதயணன் சிறைபட்ட செய்தி வரவே, அவனுக்கு உதவுவதற்காகத் தன் போலி உடலை எரிக்கும்படி செய்து, தான் இறந்துவிட்டதாக மற்றவர்கள் நம்பும்படி செய்தான்.    &lt;br /&gt;
==மறைந்திருந்து நண்பனுக்கு உதவி==&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பெருங்கதை கதைமாந்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Selvasivagurunathan m</name></author>
	</entry>
</feed>