<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>விண்ணகம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T17:11:53Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=497792&amp;oldid=prev</id>
		<title>imported&gt;AntonBot: clean up, replaced: கிறித்து → கிறிஸ்து (2)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=497792&amp;oldid=prev"/>
		<updated>2024-07-03T19:35:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;clean up, replaced: கிறித்து → கிறிஸ்து (2)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{கிறித்தவம்}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணகம்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணுலகம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது, [[கடவுள்]] வாழும் இடத்தைக் குறிப்பிட [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் பயன்படுத்தப்படும் தமிழ் சொல் ஆகும். வானகம், [[மோட்சம்]], [[சொர்க்கம்]], சுவனம் போன்றவை இதற்கு இணையான சொற்கள் ஆகும். [[தேவதூதர்]]களும், [[புனிதர்]]களும் கடவுளின் மாட்சியில் பங்குபெறும் இடமாகவும் இது கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர் காரணம் ==&lt;br /&gt;
பூமியைச் சுற்றிக் காணப்படும் [[அண்ட வெளி]]யைக் குறிக்கும் &amp;#039;&amp;#039;&amp;#039;விண்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;வான்&amp;#039;&amp;#039;&amp;#039; என்ற சொல், பொதுவாக உயரே தெரிகின்ற [[ஞாயிறு (விண்மீன்)|சூரியன்]], [[நிலா|நிலவு]], [[விண்மீன்]]கள் ஆகியவற்றின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகையதோர் உயர்ந்த இடத்திலேயே [[கடவுள்]] இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. எனவேதான் [[கிறித்தவம்]],  கடவுளின் உறைவிடத்தை &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணகம்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணுலகம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்று பெயரிட்டு அழைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பழைய ஏற்பாட்டில் ==&lt;br /&gt;
[[பழைய ஏற்பாடு]] விண்ணகத்தை கடவுளின் [[அரியணை]]யாகவும், உலகத்தை அவரது கால்மணையாகவும் என்று குறிப்பிடுகிறது.&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[எசாயா (நூல்)|எசாயா]] 66:1&amp;#039;&amp;#039;&amp;#039; ஆண்டவர் கூறுவது இதுவே: &amp;quot;விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; &amp;quot;மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்&amp;quot; &amp;lt;ref&amp;gt;[[இணைச் சட்டம் (நூல்)|இணைச் சட்டம்]] 4:39&amp;lt;/ref&amp;gt; என்பது [[விவிலியம்|விவிலிய]]த்தின் போதனை. &amp;quot;இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை&amp;quot; &amp;lt;ref&amp;gt;[[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]] 8:23&amp;lt;/ref&amp;gt; என்று [[இசுரயேலர்]] கடவுளைப் புகழ்ந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழைய ஏற்பாட்டின் மக்கள் கடவுளை, விண்ணகத்தில் உறைபவராகவே கருதினர்.&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[2 குறிப்பேடு (நூல்)|2 குறிப்பேடு]] 20:6&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே! விண்ணகக் கடவுள் நீரே அன்றோ!&amp;quot;&amp;lt;/ref&amp;gt; &amp;quot;நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக!&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[இணைச் சட்டம் (நூல்)|இணைச் சட்டம்]] 26:15&amp;lt;/ref&amp;gt; &amp;quot;நீர் விண்ணிலிருந்து உமது அடியாருக்குத் தீர்ப்பு வழங்குவீராக!&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]] 8:32&amp;lt;/ref&amp;gt; &amp;quot;உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் செவி சாய்த்து மன்னிப்பீராக!&amp;quot;&amp;lt;ref&amp;gt;1 அரசர்கள் 8:39&amp;lt;/ref&amp;gt; என்று அவர்கள் மன்றாடினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விண்ணகம் கடவுளின் இருப்பிடமாக கருதப்பட்டாலும், அதைப் படைத்தவர் கடவுளே என்ற கருத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ளது.&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[2 அரசர்கள் (நூல்)|2 அரசர்கள்]] 19:15&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!&amp;quot;&amp;lt;/ref&amp;gt; &amp;#039;ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்&amp;#039;&amp;lt;ref&amp;gt;[[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 20:11&amp;lt;/ref&amp;gt; என்று விவிலியம் குறிப்பிடுகிறது. &amp;quot;விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக!&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[2 குறிப்பேடு (நூல்)|2 குறிப்பேடு]] 2:12&amp;lt;/ref&amp;gt; என்பது [[யூதர்|யூத]] மக்களின் புகழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடவுளின் மேன்மையும் விண்ணகத்தின் உயரமும் ஒன்றையொன்று பெருமைப்படுத்துவதாக [[இசுரயேலர்]] கருதினர்: &amp;quot;மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன&amp;quot; என்கிறார் ஆண்டவர்.&amp;lt;ref&amp;gt;[[எசாயா (நூல்)|எசாயா]] 55:9&amp;lt;/ref&amp;gt; &amp;quot;விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்!&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[நெகேமியா (நூல்)|நெகேமியா]] 2:20&amp;lt;/ref&amp;gt; என்று அவர்கள் கூறினர். &amp;quot;விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[யூதித்து (நூல்)|யூதித்து]] 9:12&amp;lt;/ref&amp;gt; என்று அவர்கள் உதவி வேண்டினர். [[இறைவாக்கினர்]] [[எலியா]] விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்வும்&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;2 அரசர்கள் 2:11&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;#039;எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.&amp;#039;&amp;lt;/ref&amp;gt; பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புதிய ஏற்பாட்டில் ==&lt;br /&gt;
[[இயேசு கிறிஸ்து]] [[இறையரசு|விண்ணரசு]] பற்றி போதித்த செய்தியை [[புதிய ஏற்பாடு]] நமக்கு தருகிறது. &amp;quot;ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 5:3&amp;lt;/ref&amp;gt; என்றும், &amp;quot;நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது&amp;quot;&amp;lt;ref&amp;gt;மத்தேயு 5:10&amp;lt;/ref&amp;gt; எனவும் இயேசு போதித்தார். &amp;quot;என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் &amp;#039;&amp;#039;விண்ணுலகில்&amp;#039;&amp;#039;&amp;#039; உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்&amp;quot;&amp;lt;ref&amp;gt;மத்தேயு 5:11-12&amp;lt;/ref&amp;gt; என்றும் அவர் கற்பித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும், [[தந்தையாம் கடவுள்|கடவுள்]] நம் &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணகத் தந்தை&amp;#039;&amp;#039;&amp;#039; என்று மக்களுக்கு இயேசு அறிமுகம் செய்தார். &amp;quot;உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்;&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 11:25-26&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்&amp;quot;&amp;lt;/ref&amp;gt; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்&amp;quot;&amp;lt;ref&amp;gt;மத்தேயு 5:44-45,48&amp;lt;/ref&amp;gt; என்று அவர் போதித்தார். &amp;quot;&amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணுலகில்&amp;#039;&amp;#039;&amp;#039; இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணுலகில்&amp;#039;&amp;#039;&amp;#039; நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!&amp;quot;&amp;lt;ref&amp;gt;மத்தேயு 6:9-10&amp;lt;/ref&amp;gt; என்று தொடங்கும் [[கிறிஸ்து கற்பித்த செபம்|இறைவேண்டலை]]யும் அவர் கற்பித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இயேசுவின் பிறப்பு]] பற்றி குரு செக்கரியா, &amp;quot;நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணிலிருந்து&amp;#039;&amp;#039;&amp;#039; விடியல் நம்மைத் தேடிவருகிறது&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:79&amp;lt;/ref&amp;gt; என்று இறைவாக்கு உரைத்தார். இயேசு பிறப்பை இடையர்களுக்கு அறிவித்த தூதரோடு இணைந்து, &amp;quot;உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!&amp;quot; என்று &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணக&amp;#039;&amp;#039;&amp;#039;த் தூதரணி கடவுளைப் புகழ்ந்தது.&amp;lt;ref&amp;gt;[[லூக்கா]] 2:13&amp;lt;/ref&amp;gt; &amp;quot;&amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணகத்தில்&amp;#039;&amp;#039;&amp;#039; இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[யோவான் நற்செய்தி|யோவான்]] 6:51&amp;lt;/ref&amp;gt; என்று தம்மைப் பற்றிக் கூறுகிறார். சிலுவையில் இறந்து, மூன்றாம் நாள் [[இயேசுவின் உயிர்ப்பு|உயிர்த்தெழுந்த]] ஆண்டவர் இயேசு நாற்பது நாட்களாக சீடர்களுக்கு காட்சி அளித்த பின்பு, [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றம்]] அடைந்து [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] வலப்புறம் அமர்ந்தார்&amp;lt;ref&amp;gt;மாற்கு 16:19&amp;lt;/ref&amp;gt; என்று புதிய ஏற்பாடு குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணுலகில்&amp;#039;&amp;#039;&amp;#039; இருக்க வேண்டும்&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 17:24&amp;lt;/ref&amp;gt; என்று [[பேதுரு (திருத்தூதர்)|திருத்தூதர் பேதுரு]] எடுத்துரைக்கிறார். &amp;quot;உலகையும், அதிலுள்ள அனைத்தையம் படைத்த கடவுள் &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணுக்கும்&amp;#039;&amp;#039;&amp;#039; மண்ணுக்கும் ஆண்டவர்&amp;quot;&amp;lt;ref&amp;gt;திருத்தூதர் பணிகள் 17:24&amp;lt;/ref&amp;gt; என்றும், &amp;quot;கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[எபேசியருக்கு எழுதிய திருமுகம்|எபேசியர்]] 1:10&amp;lt;/ref&amp;gt; எனவும் [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] குறிப்பிடுகிறார். [[எருசலேம் கோவில்]] விண்ணகத்தின் சாயல்&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[எபிரேயருக்கு எழுதிய திருமுகம்|எபிரேயர்]] 8:5&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;இவர்கள் வழிபடும் இடம் &amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணக&amp;#039;&amp;#039;&amp;#039;க் கூடாரத்தின் சாயலும் நிழலுமே.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; என [[எபிரேயருக்கு எழுதிய திருமுகம்]] கூறுகிறது. &amp;quot;&amp;#039;&amp;#039;&amp;#039;விண்ணகத்தில்&amp;#039;&amp;#039;&amp;#039; கடவுளின் கோவில் திறக்கப்பட்டது&amp;quot;&amp;lt;ref&amp;gt;[[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாடு]] 11:19&amp;lt;/ref&amp;gt; என்று [[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாடு]] நூல் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
{{reflist|3}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.scborromeo.org/ccc/p123a12.htm Catechism of the Catholic Church &amp;#039;&amp;#039;I believe in Life Everlasting&amp;#039;&amp;#039;] Explanation of Catholic teaching about Heaven, Hell &amp;amp; Purgatory.&lt;br /&gt;
* [http://www.newadvent.org/cathen/07170a.htm Catholic Encyclopedia: Heaven]&lt;br /&gt;
* [http://jewishencyclopedia.com/articles/7440-heaven Jewish Encyclopedia: Heaven]&lt;br /&gt;
* [http://plato.stanford.edu/entries/heaven-hell/ Stanford Encyclopedia of Philosophy entry on Heaven and Hell.]&lt;br /&gt;
* [http://www.nytimes.com/1989/04/30/movies/film-view-in-films-heaven-s-no-paradise.html?pagewanted=all In Films, Heaven’s No Paradise New York Times Wed. July 22, 2009:]&lt;br /&gt;
* [http://www.independent.co.uk/opinion/faith/heaven-a-fools-paradise-1949399.html Heaven: A fool&amp;#039;s paradise], &amp;#039;&amp;#039;The Independent&amp;#039;&amp;#039;, April 21, 2010&lt;br /&gt;
* [http://www.swedenborgdigitallibrary.org/contets/HH.html Swedenborg, E. &amp;#039;&amp;#039;Heaven and its Wonders and Hell. From Things Heard and Seen&amp;#039;&amp;#039;] (Swedenborg Foundation, 1946)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[la:Caelum]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;AntonBot</name></author>
	</entry>
</feed>