<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>வீடுமர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T01:01:41Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=500880&amp;oldid=prev</id>
		<title>imported&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: /* தலைமுறை அட்டவணை */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=500880&amp;oldid=prev"/>
		<updated>2025-10-13T03:47:34Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;தலைமுறை அட்டவணை&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:The scene from the Mahabharata of the presentation by Ganga of her son Devavrata (the future Bhisma) to his father, Santanu..jpg|thumb|200px|[[கங்கை, இந்து மதம்|கங்கை]] பீஷ்மரை [[சந்தனு|சந்தனுவிடம்]] கையளிக்கும் காட்சி.]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பீஷ்மர்&amp;#039;&amp;#039;&amp;#039; [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் [[சந்தனு|சந்தனுவிற்கும்]] [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க்கும் பிறந்தவர். சந்தனு [[துஷ்யந்தன்|துஷ்யந்தனுக்கும்]], [[பரதன்|பரதனுக்கும்]] அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான [[பிரகஸ்பதி]]யிடம் இருந்தும், [[வேதம்|வேதங்களை]] [[வசிஷ்டர்|வசிஷ்ட முனிவரிடமிருந்தும்]], வில்வித்தையை [[பரசுராமர்|பரசுராமரிடம்]] இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, [[சத்தியவதி]] பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் [[தருமன்|தருமனுக்கு]] நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து [[விஷ்ணு சஹஸ்ரநாமம்]] எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தேவ விரதன் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[அட்ட வசுக்கள்|எட்டு வசுக்கள்]] வேத காலக் கடவுளர்கள். இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். [[வசிட்டர்|வசிட்டரின்]] பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டுமெனவும் அந்த எட்டுப் பேரின் தலைவனான [[பிரபாசன்]], தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடியதால் அதிககாலம் பூமியில் வாழ்வான் என்று வசிட்டர் சாபமிட்டார். என்வரும் தங்கள் தவறுக்காக மன்னிப்பு வேண்டினர். வசிட்டரும் அவர்களை மன்னித்து எட்டு வசுக்களில் ஏழு பேர் பிறந்த உடன் இறந்துவிடுவார் என்றும் [[பிரபாசன்]] மட்டும் அதிக காலம் வாழ்ந்து தர்மத்தினை காப்பான் என்றும் மேலும் அவன் பூமியில் வாழும் வரை அவனை வெல்பவர் எவரும் இருக்கமாட்டார் எனவும் தனது சாபத்தினை மாற்றினார். அந்த பிரபாசனே [[சந்திர வம்சம்|சந்திர வம்சத்தில்]] [[சந்தனு]] மற்றும் [[கங்கை, இந்து மதம்|கங்கை]] தம்பதியருக்கு எட்டாவது மகனான தேவ விரதன் பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட [[பீஷ்மர்]]  ஆவார். [[பீஷ்மர்|பீஷ்மரை]] வெல்ல அகிலத்தில் எவரும் இல்லாத பொழுதும், தன் தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியின்படி [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தினை]] காக்க [[கௌரவர்]] பக்கம் நின்று யுத்தம்புரிந்தார், மேலும் தர்மம் [[பாண்டவர்]] பக்கம் இருந்ததால் தன் உயிரையும் விட்டுக்கொடுத்து, தர்மத்தை காத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அம்பையின் சபதம்==&lt;br /&gt;
தம்பி [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனுக்காக]] [[காசி நாடு|காசி மன்னனின்]] மூன்று அரசகுமாரிகளை, சுயம்வரத்தின் போது கவர்ந்து வந்தார். அப்போது [[அம்பை]] மட்டும் [[சால்வ நாடு|சால்வன்]] என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து, அவளை சால்வனிடம் அனுப்பிவைத்தார். சால்வன் அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் [[அம்பை]], [[பீஷ்மர்|பீஷ்மரிடம்]] வந்து தன்னை ஏற்கவேண்டினாள். [[பீஷ்மர்|பீஷ்மரோ]] தான் செய்துள்ள சபதத்தைக் கூறி ஏற்க மறுத்தார். &amp;quot;நான் எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், சால்வனோ, [[விசித்திரவீரியன்|விசித்ரவீர்யனோ]] உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம்&amp;quot; என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றித் தேடினாள், எல்லா சத்திரியர்களும் [[பீஷ்மர்|பீஷ்மருக்காக]] பயந்தார்கள். அவள் இறுதியில் [[பரசுராமன்|பரசுராமனின்]] உதவியை நாடினாள், அவர் [[பீஷ்மர்|பீஷ்மரின்]] குரு. [[அம்பா]]வின் நிலையை அறிந்து அதிர்ந்துபோன [[பரசுராமர்]] தனது சீடருடன் சண்டையிட்டார், சண்டை பல நாட்கள், மாதங்கள் என நீடித்தது. இறுதியில் [[பரசுராமர்]] பீஷ்மரை யாராலும் தோற்கடிக்க முடியாது, அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் கொல்லவும் முடியாது சண்டையைத் தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று [[பரசுராமன்]] சண்டையை நிறுத்தினார். குழம்பிய [[அம்பை]], பீஷ்மரை கொல்ல தேவர்கள் எனக்கு வழி சொல்லாத வரை நான் ஊண், உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று [[சிவன்|சிவனை]] நோக்கி தவம் இருந்தாள். [[சிவன்]] அவள் முன் போன்றி &amp;quot;நீ பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில்&amp;quot; என வரம் தந்து மறைந்தார். விரைவில் பீஷ்மர் மரணமடைய விரும்பிய [[அம்பா]] தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ஊர்வசி, கங்கை, [[சத்தியவதி]] போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் [[அம்பை]] வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர்.&amp;lt;ref name = &amp;quot;one&amp;quot;&amp;gt;Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==போர்க்களத்தில் பெண்==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரின்]] பத்தாம் நாள் போர்த் தொடங்கியவுடன்,[[அருச்சுனன்]] [[பீஷ்மர்|பீஷ்மரை]] நோக்கி பல அம்புகளை எய்தான்,எதுவும் அவரை அச்சுறுத்தவில்லை கோபம் கொண்ட [[கிருட்டிணன்]] தேரிலிருந்து கீழே குதித்து தனியே கீழே கிடந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு [[பீஷ்மர்|பீஷ்மரை]] தாக்க ஓடினார்.&amp;quot;குருசேத்திரப் போரில் ஆயுதமே எடுக்க மாட்டேன்&amp;quot; என போருக்கு முன் சபதம் செய்துவிட்டு,இப்போது ஆயுதம் எடுத்துவட்டதை உணர்ந்து கிருட்டிணனை நோக்கி ஓடி &amp;quot;நான் [[பீஷ்மர்|பீஷ்மரைக்]] கொல்வேன்&amp;quot; என்று உறுதி எடுத்தான்.&amp;quot;தனது மரண நேரத்தை தானே முடிவு செய்யும் வரத்தைப் பெற்றவராயிற்றே,அவரை கொல்ல முடியாது னாலும் அவரை செயல் இழக்கச் செய்தால், அவர் உடலை அசைக்க முடியாதபடி படுக்கவைத்துவிட்டாலே போதும்&amp;quot; &amp;quot;ஆனால் அவர் கையில் வில் இருக்கும் வரை அது முடியாது&amp;quot;.&amp;quot;அப்படியானால் அவரை வில்லைப் பிடிக்காதபடி செய்&amp;quot; என்றார் கிருட்டிணன். &amp;quot;போர்க்களத்தில் வில்லை கீழே வைக்கமாட்டார்&amp;quot; என்றான் அருச்சுனன்.&amp;quot;ஒரு பெண் நின்றால் கூட வில்லை வைக்க மாட்டாரோ?&amp;quot; என்று கிண்டலாக கேட்டார் கிருட்டிணன்.&amp;quot;ஆனால் பெண்கள் போர்களத்தில் அனுமதிக்கப்படுவதில்லை&amp;quot;முடிவைத் தேடாமல் பிரச்சனையை மட்டுமே மனதில் கொண்டு பதில் சொன்னான் -[[அருச்சுனன்]].&amp;quot;[[திரௌபதி]]யின் மூத்த சகோதரன் [[சிகண்டி]] ஆணா? பெண்ணா? [[அருச்சுனன்|அருச்சுனா]] [[சிகண்டி]] ஓர் ஆண் என்று நீ நம்பினால் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு போ,[[சிகண்டி]] ஒரு பெண் என்று பீஷ்மர் எண்ணினால் [[பீஷ்மர்]] வில்லை கீழே வைத்துவிட்டு நீ போர் விதிகளை மீறிவிட்டாய் என்று கூறுவார்,அவரை வெற்றி கொள்ள அதுதான் உனக்கு வாய்ப்பு&amp;quot;.&amp;quot;இது அநியாயம்&amp;quot;-[[அருச்சுனன்]], அது ஒவ்வொருவர் கருத்தைப் பொறுத்தது-[[கிருட்டிணன்]].&amp;lt;ref name=&amp;quot;one&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அம்புப்படுக்கையில் வீடுமர்==&lt;br /&gt;
[[File:The Death of Bhishma.jpg|thumb|right|அம்புகளின் படுக்கையில் வீடுமர்]]&lt;br /&gt;
[[சிகண்டி]] [[அருச்சுனன்]] தேரில் ஏறிக்கொண்டு [[பீஷ்மர்|பீஷ்மரை]] நோக்கி சவால்விட்டான்,[[சிகண்டி|சிகண்டியைக்]] கண்டதும் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகாது என்று வில்லை தாழ்த்தினார் [[பீஷ்மர்]].இது தான் சமயம் என்றார் [[கிருட்டிணன்]],[[சிகண்டி|சிகண்டியின்]] பின்னால் நின்ற [[அருச்சுனன்]] சரமாரியாக அம்புகளை [[பீஷ்மர்|பீஷ்மரை]] நோக்கி எய்தான்.மாபெரும் வீரரின் உடலை அம்புகள் துளைப்பதைக் கண்டு [[துரியோதனன்]] பிரமித்துப்போய் நின்றான், [[கௌரவர்|கௌரவர்களின்]] படைத்தலைவர் தன் தேரிலிருந்து கீழே விழுந்தார்.அவரது உடல் தரையில் விழாதபடி அம்புகள் தாங்கிக்கொண்டு இருந்தன.ஆயினும் தன் தந்தைக்காக கடவுளர்களிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல்,இருந்தார்.[[பீஷ்மர்]] கடவுளின் ஆயிரம் நாமங்களை (சஹஸ்வர நாமம்) துதிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்வதை பாண்டவர்கள் பார்த்தார்கள்.போர் முடிந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் [[பீஷ்மர்]] உயிர் துறந்தார்.&amp;lt;ref name=&amp;quot;one&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்பு==&lt;br /&gt;
* [http://mahabharatham.arasan.info மகாபாரதம் (அனைத்துப் பகுதிகளும்)] (தமிழில்)&lt;br /&gt;
&lt;br /&gt;
==சான்றாவணம்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதனையும் காண்க==&lt;br /&gt;
[[குருச்சேத்திரப் போர்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==தலைமுறை அட்டவணை==&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;&lt;br /&gt;
{{chart/start}}&lt;br /&gt;
{{chart| | | | | | | | | pra |y| sun | |pra=[[பிரதீபன்]]|sun= சுனந்தா}}&lt;br /&gt;
{{chart| | | | | |,|-|-|-|-|-|^|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|v|-|-|-|.| |}}&lt;br /&gt;
{{chart| gan |y| san |~|~|y|~|~| sat |~|y|~| par | | | bah | | dew | |gan=[[கங்கை, இந்து மதம்|கங்கை]]|sat=[[சத்தியவதி]]|par=[[பராசரர்]]|dew=[[தேவாபி]]|san=[[சந்தனு]]|bah=[[பாக்லீகர்]]}}&lt;br /&gt;
{{chart| | | |!| | | |,|-|^|-|.| | | | |!| | | | | | | |!| |}}&lt;br /&gt;
{{chart| | | bis | | cit | | vic | | | vya | | | | | | som | |vya=[[வியாசர்]]|som=[[சோமதத்தன்]]|bis=[[பீஷ்மர்]]|cit=[[சித்திராங்கதன்]]|vic=[[விசித்திரவீரியன்]]}}&lt;br /&gt;
{{chart| | | | | |,|-|-|-|-|-|-|-|v|-|-|^|-|.| | | |,|-|^|-|.|}}&lt;br /&gt;
{{chart|border=0| | | | | ami | | | | | | aml | | | das | | |!| | | |!|ami=[[அம்பிகா (மகாபாரதம்)|(அம்பிகா மூலம்)]]|aml=[[அம்பாலிகா|(அம்பாலிகா மூலம்)]]|das=(தாசி மூலம்)}}&lt;br /&gt;
{{chart| | | | | dre | | | | | | pan | | | wid | | brs | | sal | |sal=2 மகன்கள்|brs=[[பூரிசிரவஸ்]]|dre=[[திருதராட்டிரன்]]|pan=[[பாண்டு]]|wid=[[விதுரன்]]}}&lt;br /&gt;
{{chart/end}}&lt;br /&gt;
&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:குரு வம்சம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி</name></author>
	</entry>
</feed>