<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88</id>
	<title>வேதாளை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-04T13:39:37Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88&amp;diff=503513&amp;oldid=prev</id>
		<title>01:41, 6 ஏப்பிரல் 2025 இல் imported&gt;சா அருணாசலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88&amp;diff=503513&amp;oldid=prev"/>
		<updated>2025-04-06T01:41:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வேதாளை&lt;br /&gt;
|வகை= &lt;br /&gt;
|latd = 9.2750|longd =79.100&lt;br /&gt;
|locator position   = left&lt;br /&gt;
|மாநிலம்=தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம்= இராமநாதபுரம் &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்= &lt;br /&gt;
|பரப்பளவு=&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=&lt;br /&gt;
|மக்கள் தொகை=&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு= TN:&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்= &lt;br /&gt;
|இணையதளம்=|}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;வேதாளை&amp;#039;&amp;#039;&amp;#039; [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] கிழக்கு பகுதியில்  அமைந்துள்ள கிராமம் ஆகும் .&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல் அமைப்பு==&lt;br /&gt;
இவ்வூரின் வடக்கே [[பாக் நீரிணை]]யும் தெற்கே [[மன்னார் வளைகுடா]]வும் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே சுந்தரமுடையான் கிராமமும் கிழக்கே [[மரைக்காயர்பட்டினம்|மரைக்காயர்பட்டினமும்]] அமைந்துள்ளது. சுமார் 20 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ள இவ்வூர் 9.26 டிகிரி அச்ச ரேகை மற்றும் 79.11 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் முசல் தீவு காணப்படுகிறது. இப்பகுதி அரிய கடல் உயிரினங்களை கொண்டுள்ளது ஆகவே மத்திய அரசால் இப்பகுதி கண்காணிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாறு==&lt;br /&gt;
இவ்வூர் [[சடைக்கண் சேதுபதி]] என்று அழைக்கப்படும் உடையன் ரகுநாத சேதுபதி எனும் மன்னரால் அறியப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிவா ஆலயத்தில் வேதங்கள் ஓதப்படுவதால் வேத ஓதல் என்னும் பெயர் மருவி மருவி ”வேதாளை” ஆனது எனவும் கூறுவர் அதனை தொடர்ந்து போர்த்துக்கீசியரின் காலத்தில் இப்பகுதியில் போர்கள் நடந்த்தது பற்றிய குறிப்புகள் அந்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களால் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மொகலாயர்கள்-போர்த்துக்கீசியர்கள் இடையே போர், கிபி1621களில் போர்த்துக்கீசியர்-இலங்கையின் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த சங்கிலி மன்னனுக்கும் இடையே போரில் மன்னன் தோல்வி, கேரளாவின் மாப்பிள்ளைமார்கள்-போர்த்துக்கீசியரிடையே நடந்த போர் முக்கியத்துவம் வாய்ந்த்தவை. வேதாளையின் மேற்கே அமைந்த்துள்ள மீசான்கற்கள் இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன இதில் இருந்தே கிபி1600களில் மக்கள் இங்கே வாழ்ந்தார்கள் என அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்==&lt;br /&gt;
இப்பகுதியில் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்துக்கள். இப்பகுதியில் மக்களின் வருகை கிபி1600களில் நிகழ்ந்த்துள்ளது பெரும்பாலும் கடல் வழி குடியேற்றங்களே நிகழ்ந்த்துள்ளது புதுமடம், இருமேனி, பெரியப்பட்டினம், பிரப்பன்வலசை, மண்டபம் உள்ளிட்ட அருகாமையில் அமைந்த்துள்ள ஊர்களில் இருந்து முஸ்லீம்களும் இலங்கையில் இருந்தும் பெரும்பாலான மக்கள் அப்போதே குடியேறியுள்ளனர்.30 சதவீத  அளவில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர்..&lt;br /&gt;
&lt;br /&gt;
==தொழில்==&lt;br /&gt;
ஆரம்ப காலத்தில் இருந்தே இப்பகுதியில் கடல் வழி வாணிபமும் ,மீன்பிடி தொழிலும் முக்கியத்துவம் பெற்றவை. இலங்கைக்கு இங்கிருந்து பல குடும்பங்கள் வாணிபம் மூலமாக இடம்பெயர்ந்த்தும், இங்கே குடியேறியும் உள்ளன. இது போலவே [[மலேசியா]]விற்கும் இடம் பெயர்வு நிகழ்ந்த்துள்ளது. 1980க்கு பின்னர் [[இலங்கை]]யில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் மூலமாக முற்றிலும் அடியோடு வாணிபம்  பாதிக்கப்பட்டது.பின்னர் மீன் பிடி தொழில்  நலிவடைந்து கிழக்காசிய நாடுகளுக்கும், பின்னர் வளைகுடா நாடுகளிலும் வேலை செய்து வருகிறார்க்ள். பாசி ஏற்றுமதி மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களும் ஒரு சிலரால் செய்யப்பட்டு வருகின்றன.ஆனாலும் இன்றுவரை மீன்பிடித் தொழிலை சார்ந்து இங்கு பல குடும்பங்கள் வசிக்கின்றனர்.வலையர்வாடி பேருந்து நிறுத்தம் அருகில் மீன் சந்தை செயல்பட்டுவருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சிறப்புகள்==&lt;br /&gt;
தேசிய நெடுஞ்சாலை 49ல் அமைந்துள்ள  இப்பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க வடக்கு பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சிவன் ஆலயம், விநாயகர் கோவில்,புண்ணிய தீர்த்த குளம் மற்றும் தெற்கு பகுதியில் ஒரு தீர்த்த குளமும் இடயர்வலசை அருள்மிகு ஸ்ரீ சக்தி வடிவேல் முருகன் ஆலய பங்குனி உத்திர  திருவிழா, கூட்டச்சாலை அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் ஆலயம் வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பு பெற்றதாகும். இது தவிர இஸ்லாமிய பெருநாள்களும், இந்து பண்டிகைகளும் இதன் சிறப்பாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கல்வி நிலையங்கள்==&lt;br /&gt;
இப்பகுதியின் ஆரம்ப காலங்களில் இடையர்வலசையில் அரசு ஆரம்ப பள்ளியும்,மேற்கு தெருவில் அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளது.பின்னர் உயர்நிலை பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு இடையூறுகள்ளுக்குப்பிறகு அப்போதைய பெற்றோர் ஆசிரியர் கழகம், மூன்று தெரு ஜமா அத்தார்கள் மற்றும் இந்து சகோதரர்களின் முயற்சியால் 2006ம் ஆண்டு மேல்நிலையாக்கப்பட்டது. வடக்குத்தெரு ஜமாத், மற்றும் மேற்கு தெரு ஜமா அத் நிர்வாக நிலங்களில் பள்ளி அமைந்த்துள்ளது. இது தவிர குஞ்சார் வலசை துவக்க பள்ளியும், அல் அமீன், ராஜா இடைநிலைபள்ளி, குழந்தையேசு பள்ளி போன்ற தனியார் பள்ளிகளும் அமைந்த்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கிராமங்கள் ==&lt;br /&gt;
வேதாளை ஊராட்சியில் 65 சதவிகித மக்கள் இந்துக்களும், 30 சதவிகித மக்கள் முஸ்லீம்களும் 0.1சதவிகித மக்கள் கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். &amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;[[இந்துக்கள்]]&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039; குஞ்சார்வலசை, நடுமனைக்காடு, இடையர்வலசை, வலையர்வாடி, நாடார்குடியிருப்பு, ஆசாரி தெரு, அருப்புக்காடு,  தென்கடற்கரை  கூட்டச்சாலை வேலவன் குடியிருப்பு அம்பேத்கர் நகர் சமத்துவபுரம் ஆகிய கிராமத்திலும், இஸ்லாமியர்கள்  ஹனபித்தெரு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு  ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}} &lt;br /&gt;
{{தமிழ்நாடு-புவி-குறுங்கட்டுரை}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;சா அருணாசலம்</name></author>
	</entry>
</feed>