தோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balajijagadesh |
No edit summary |
||
வரிசை 1:
[[புறத்திணை|புற ஒழுக்கத்தில்]] துணைநிற்பது நட்பு. [[அகத்திணை|அக ஒழுக்கத்தில்]] துணை நிற்பது தோழமை. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அகவாழ்க்கையில் [[தலைவன்|தலைவனுக்குத்]] துணைநிற்பவனைப் [[பாங்கன்]] என்றும், [[தலைவி|தலைவிக்குத்]] துணைநிற்பவளைத் [[தோழி]] என்றும் வழங்குகின்றன. தோழி அகத்திணை வாயில்களில் ஒருவர். தலைவியை வளர்த்த [[செவிலி]]யின் மகள் தலைவியினுடைய தோழியாக இருப்பாள். <ref>தொல்காப்பியம், களவியல் 35</ref>
களவு-வாழ்க்கை என்பது திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கை. இதில் தோழியின் பங்கை 7 வகை எனவும், 32 வகை எனவும் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது.
#தலைவியிடம் தோன்றும் ஏழு வகையான வேறுபாடுகள் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைக் காட்டிக் கொடுத்துவிடும். அவை (1) உடலில் தோன்றும் மணம், (2) தோற்றத்தில் பொலிவு, (3) உணவு செல்லாமை, (4) மறைவாகச் செயல்படுதல், (5) தோழியை விட்டு விலகிச் செல்லுதல், (6) தோழியிடம் புதுமையாகப் பழகுதல், (7) புணர்ச்சியை எதிர்பார்க்கும் உணர்ச்சி வெளிப்படுதல் ஆகியவை அந்த ஏழு.
#மெய்யாகவும் பொய்யாகவும் பார்க்கும் பார்வை.
வரிசை 12:
#அவனை ஏமாற்றிப் பித்தனாக்கல்
#முன்பே உள்ள உறவைக் கூறி அச்சுறுத்தல்
;அவனுக்கு உதவல்
வந்தவனிடம் மாயம் செய்தல், அவன் அவளைப் புணர்ந்த பின்னர் அவனை வணங்குதல், அவளிடம் அவள் போக்குக்கு உட்பட்டுப் பக்குவமாக நடந்துகொள்ளுதல், அவளுக்கு நல்லது செய்தல், அவள் விரும்பினால் உதவுதல், விரும்பாவிட்டால் அவனைப் பிரிந்து செல்ல வைத்தல், அவன் முயற்சிக்கு உதவுதல்,
வரிசை 19:
*தாய் செவிலி செயலைத் தடுத்தல். (வெறியாட்டு, வேறொருவருக்குத் திருமணம், முதலானவை)
களவு வாழ்க்கையின் ஒரு பகுதி கொண்டுதலைக் கழிதல். தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் ஊருக்கு அழைத்துச் செல்வான். இது தலைவியின் பெற்றோர் தலைவியைத் தலைவனுக்கு மணம் முடித்துத் தர இசையாதபோது நிகழும். இதில் தோழியின் பங்கு என்ன என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இச் செயலால் நிகழவிருக்கும் துன்பங்களை எடுத்துரைத்தல், கொண்டுசெல் என ஒப்புதல் வழங்குதல், தலைவியை அனுப்பிவைத்தல், அனுப்பிய பின் வருந்துதல், தாயின் வருத்தம் கண்டு தலைவியை மீட்டுக்கொள்ளுதல், தாயைத் தேற்றுதல், - எனத் தோழியின் பங்கு அமையும்.
கற்பு-வாழ்க்கை என்பது திருமணத்துக்குப் பின்னர் வாழும் கணவன் மனைவியரின் உறவு வாழ்க்கை. இதில் தோழியின் பங்கு இன்னது எனத் தொல்காப்பியத்தில் சொல்லப்படுபவை இவை.
| |||